tag:blogger.com,1999:blog-49654084838322384082024-03-12T20:18:48.670-07:00புத்தன் மிதக்கும் இசைவெளி...Unknownnoreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-62098458163295987962016-08-29T21:49:00.001-07:002016-08-30T12:35:51.549-07:00அது முகப்புத்தகம் இல்லாத காலம்...<div style="color: #1d2129; font-family: "helvetica","arial",sans-serif; font-size: 14px; line-height: 18px; text-align: left; white-space: pre-wrap;">
<div style="direction: ltr;">
<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr7r1jDhWblhHQy33Fl5vvXzTQBaxZcRSE3xtGnTqTW6CtJ2F99C0Hgr_ftMMvMB_I3nvYNNUgDMRln7tYnH7K6O3PtNcZ4Dh0zeY7tMytLo1CGXMbQ9X1wVGD1aqWQKRHOD-jYmUXvWU/s1600/panasonic.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="240" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjr7r1jDhWblhHQy33Fl5vvXzTQBaxZcRSE3xtGnTqTW6CtJ2F99C0Hgr_ftMMvMB_I3nvYNNUgDMRln7tYnH7K6O3PtNcZ4Dh0zeY7tMytLo1CGXMbQ9X1wVGD1aqWQKRHOD-jYmUXvWU/s320/panasonic.jpg" width="320" /></a></div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
<br /></div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
கரைந்து கொண்டிருந்த சிகரெட் கங்கு விரல்களை சுட்டதும் திடுக்கென நினைவு வந்தவனாக மணியை பார்த்தான்.இன்னும் நாழியிருந்தது.ராவெல்லாம் உறங்காமல் கிடந்தது கண்களை எரித்தது.மலையை குடைந்து சாலை அமைக்கும் பணி என்பதால் எந்த வாரம் எங்கே இருப்போம் என்றே சொல்ல முடியாது.மாதத்திற்கு ஒருமுறையோ இரு முறையோ தான் பஜார் போக முடியும்.அதிலும் பத்து பனிரெண்டு பேருக்கு மட்டுமே கம்பெணி வண்டியில் இடம் இருக்குமென்பதால் சக பாடிகள் மாதா மாதம் முறை வைத்து போய் கொள்வது தான்.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
அமுதாவிடம் பேசி ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.இறுதியாக சோஹார் கேம்பில் இருந்த பொழுது மாமனார் தவறிய செய்தி வந்தது.அப்பொழுது பேசியது தான்.தொடர்ந்து இடம் மாறுவதால் ஊரிலிருந்து வரும் கடிதங்களும் தலைமை அலுவலகத்திலேயே தங்கிவிடும்..யாராவது கேம்பிற்கு வரும் பொழுது மொத்தமாக எடுத்து வருவார்கள்.காலண்டரை மீண்டும் ஒருமுறை பார்த்தான்.நாளுங்கிழமை எல்லாம் ஒன்றுமில்லை.டீச்சர் வீட்டில் மட்டும் கோவிலுக்கோ வெளியூருக்கோ எங்கும் போயிருக்க கூடாது என மனம் வேண்டி கொண்டது.வெள்ளி கிழமை என்பதால் அமுதா வீட்டில் தான் இருப்பாள்.சுந்தர் உடண் இருந்தால் பேசலாம்.பள்ளிக்கு போயிருப்பான்.இந்த வருசம் தான் பால்வாடியில் போட்டது.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
ஊருக்கு போய் விட்டு வந்த தனபால் தான் தலைமை அலுவலகத்திலேயே தேங்கி கிடந்த ஆறு மாத கடிதங்களையும் கொண்டு வந்தான்.ஒரு கவரில் பதிவு செய்யப்பட்ட ஒலி நாடாவும் இருந்தது.கணேசனுடைய டேப் ரிக்கார்டரில் ஓட விட்டு கேட்டு கொண்டிருந்தான்.அமுதாவின் குரல் அப்படி கம்மி கிடந்தது..அமைந்து அமைந்து பேசினாள்..இடையிடையே டீச்சர் அவரது பிள்ளைகளை விரட்டும் குரல்..வாசலில் கூவி கொண்டிருந்த பெல்லாரி வெங்காயம் என கலவையாக சத்தங்கள் ஒலித்து கொண்டிருந்தது.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
கடந்த முறை ஊருக்கு செல்லும் பொழுது ரத்தச்சிவப்பில் பானாசோனிக்கில் ஒரு டேப்ரிக்கார்ட் வாங்கி சென்றான் தான்.ஊரிலிருந்து பார்க்க வந்த தங்கை ஆசையாக கேட்டதால் அப்படியே தூக்கி கொடுத்து விட்டான்.இல்லாவிட்டாலும் வெளி நாட்டு சாமான்களை வாங்கி விற்கும் இந்த தரகர்கள் விடுவதில்லை.கழுகுக்கு வேர்த்தது போல் வீட்டிற்குள் நுழையும் முன்பே வந்து நின்று விடுவான்கள்..செண்டிலிருந்து லங்கோடு வரை எதையும் உறுவி கொண்டு தான் மறுவேளை.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
டிரைவர் சரியாக 11.00 மணிக்கு ரூவி பேரூந்து நிலையத்திற்கு அனைவரும் திரும்பி விட வேண்டும் என சொல்லி இறக்கி விட்டான்.இவன் வேகு வேகென்று நடந்து ஒரு போட்டோ ஸ்டுடியோவுக்குள் நுழைந்தான்.பிரிண்ட் போடும்படி சொல்லிவிட்டு தஞ்சாவூர் இட்லிக்கடையருகே உள்ள தொலைபேசி நிலையம் நோக்கி ஓட்டமும் நடையுமாக ஓடினான்..வெள்ளிக்கிழமையாதலால் கூட்ட வரிசை கணிசமாக இருக்கும் என்று நினைத்தான்.நல்லவேளை தொழுகை நேரம் என்பதால் 10 பேர் தான் நின்றார்கள்.நைனா இவனுக்கு கை காட்டியபடியே வரிசையில் நிற்பவருக்கு கால் போட்டு கொடுத்து கொண்டிருந்தார்.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
டீச்சர் வீட்டுக்கு தொலைபேசி வந்தது எவ்வளவு சௌகரியமாக போய்விட்டது.இல்லையென்றால் நல்லது கெட்டது எதுவென்றாலும் காகிதம் தான்.அம்புரோஸ் இங்கு மாரடைப்பில் செத்த போது தாக்கல் சொல்ல கூட அவர் ஊரில் யாரிடமும் தொலைபேசி இல்லை.தந்தி தந்து அதை அவர்கள் பெறுவதற்குள் இங்கே காரியமே முடிந்து விட்டது.பிணத்தை பெற உறவுகளிடமிருந்து ஒரு வார காலம் விண்ணப்பம் வராததால்இ்ங்கேயே காரியம் முடிக்க வேண்டியதாகி விட்டது.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
இந்த சபர் கூத்து எல்லாம் தெரிந்தும் எம பயலுக்கு இப்படியும் புத்தி வேலை செய்யுமா.யோசிக்க யோசிக்க சுர்ரென்று ரத்தம் மண்டைக்கு ஏறியது.இன்னொருக்கா கண்டா சங்க கடிச்சி துப்பனும் தாயோலி என தன்னிச்சையாக வாய் முனுமுனுத்தது.போன வருசம் வேலை முடிந்து ஓய்வெடுத்த ஒரு ராத்திரியில் சேக்காளிகளுடன் வழமை போல் சீட்டாடும் பொழுது மணியன் தான் ஆரம்பித்தான்.எப்பொழுதும் ஏவிடியம் பேசும் வாய் துடுக்கு தான்.இருந்தாலும் அன்று கொஞ்சம் திரவம் அதிகம் போன தண்டம்.போகிற போக்கில் இங்க நமக்கு சிவராத்திரி ஊருல இருக்குறவளுவோளுக்கு யார் கூட ...திரியோ..என அவன் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றாலும் அருகில் அமர்ந்திருந்த இவனுக்கு சல்ல கடுப்பாகி சலுப்பென அறைந்து விட்டான்.கட்டி புரண்டு சேக்காளிகள் விலக்கி விட்டார்கள்.விடிந்ததும் கை நீட்டியதற்காக மாப்பு கேட்டான் தான்.எனினும் வன்மம் தீரவில்லை அவனுக்கு.பார்க்கும் பொழுதெல்லாம் கருவி கிடந்தான்.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
முதல் கடிதத்தை வாசிக்க தொடங்கும் பொழுதே புரிந்து விட்டது.நெஞ்சு படபடக்க கேசட்டை ஓட விட்டான்..தீனமாக அமுதாவின் குரல்..</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
''மாமா..நல்லாருக்கீங்ளா..மெல்ல விசும்பும் குரலினூடாக..காயிதமுலாம் கெடச்சுதுங்ளா..எங்க இருக்கீங்ளோ என்னமா இருக்கீங்ளோனு கெடந்து அல்லாடுறேன் மாமா..நாலு மாசம் முந்தி ஒங்க சேக்காளினு ஒருத்தர் வந்து சொன்னாப்டி..அந்தாளு சொன்னதுலாம் நெசமா பொய்யான்னு இன்னும் புரியாம இப்புடி தெகைச்சு கெடக்கேன்..அந்தாளு சொன்ன மணிகிராமத்துல திரும்ப தேடி போனப்போ அப்படி யாருமில்லன்னு சொல்லிட்டாங்க..நீங்க அப்புடி செய்யுறவரா..எனக்கு தெரியாதா..தேம்ப தொடங்கி வெடித்து வரும் அழுகையை சேலை நுனியை வாய்க்குள் திணித்து விக்கும் ஓசை தான் வெகுநேரம் கேட்டது..பின்னால் டீச்சர் ஆறுதலாக பேசு பேசு அழுவாத ஒன்னும் ஆயிருக்காது என சமதானம் செய்யும் குரல்..நீங்க எப்புடி இருந்தாலும் சீக்கிரம் வந்திருங்க..நாலு வீட்ல வேலை செஞ்ச்சாச்சு நான் பாத்துக்குவே ஒங்கள..''</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
தாயோலி..தேடி ஊருக்கு போயி நான் எங்கேயோ திருடி மாட்டி ஜெயில்ல இருக்கறதா இவகிட்ட கோலு சொல்லீருக்கான்..அரபு நாட்லலாம் திருடினா மாறுகால் மாறு கை வாங்கிருவாங்க என்னய என்ன செய்ய போறாங்ளோனு வேற பயமுறுத்தி போயிருக்கான்'' என்ன சென்மம்டா நீயெல்லாம்.மனசு குமைந்தது..அதனால் தான் போட்டோ எடுக்கும் பொழுது கூட விரல்கள் எல்லாம் நன்றாக தெரியும் படி விரித்து கொண்டு நின்றான்.பார்த்தால் வாரி கட்டி கொள்வாள் என எண்ணிய பொழுது அவனையறியாமலேயே வெட்கப்பட்டான்.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
வரிசையில் இவன் முறை வந்த பொழுது என்ன பேச வேண்டும் என சேகரித்ததை எல்லாம் மீண்டும் மீண்டும் நினைவு படுத்தி கொண்டான்.நைனா பொதுவாக குசலம் விசாரித்தபடியே டீச்சர் வீட்டுக்கு எண்களை சுழற்றினார்.அவன் அவன் அங்கு வந்த பொழுதே அமுதாவை வர சொல்லும் படி டீச்சர் வீட்டுக்கு போனில் சொல்லியிருந்தார்.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
இவன் நடுங்கும் விரல்களால் ரிசீவரை பற்றினான்..மறுமுனையில் அமுதாவின் குரல் கேட்ட பொழுது எல்லாவற்றையும் மறந்து விட்டான்.அமுதா என அவன் வெடித்தழ..கண்களை துடைத்தபடியே நைனா எழுந்து வெளியே போனார்.</div>
<div style="background-color: white; line-height: 19.32px; margin-bottom: 6px; margin-top: 6px; white-space: normal;">
---------</div>
<div style="background-color: white; display: inline; line-height: 19.32px; margin-top: 6px; white-space: normal;">
மலையாள FM ஒன்றில் காரில் போகும் பொழுது கேட்டதாக நண்பர் சேகர் சொன்ன சில வருடங்களுக்கு முன் ஒரு அரபு நாட்டில் நடந்த உண்மை சம்பவம் இது.</div>
</div>
</div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-75199865467307976752015-05-06T02:21:00.001-07:002015-05-06T02:27:21.485-07:00நேற்றிரவு...<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span lang="EN" style="font-size: small;">நே</span><span style="font-size: small;">ற்றிரவு</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">ஒரு</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">கிணற்று</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">தவளை</span></div>
<div style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">நிலவுக்குள்</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">குடி</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">புகுந்தது...</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-9961833303954302982015-05-06T02:20:00.000-07:002015-05-06T02:27:31.618-07:00நேற்றிரவு...<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span lang="EN" style="font-size: small;">நே</span><span style="font-size: small;">ற்றிரவு</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">என்</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">குளத்து</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">மீன்கள்</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">களவு</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">போய்விட்டன</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">அதிகாலை</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">மழையில்</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">குடை</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">கொண்டு</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">போகாதவர்கள்</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">கூறினார்கள்</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">சாலையெங்கும்</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">நட்சத்திர</span><span style="font-size: small;"> </span><span style="font-size: small;">மீன்கள்</span></div>
<div class="MsoNormal" style="font-family: Arial,Helvetica,sans-serif;">
<span style="font-size: small;">நீந்தியதாக</span><span style="font-size: small;">...</span></div>
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-69794184497041985402014-05-05T08:29:00.001-07:002014-05-05T08:29:44.633-07:00எனினும்...எனினும்<br />நீ மீண்டும் வார்க்கபடுகிறாய்<br />உன் ஸ்திரத்தை சோதிக்க அல்ல<br />ஸ்நேகத்தை நிரூபிக்கவும் அல்ல<br />நீயற்ற அறையில்<br />பிம்பமற்று அவர்கள் திகைக்கின்றனர்<br />நீயற்ற சாலையில்<br />அவர்களது நிழல்கள்<br />நகர மறுக்கின்றன<br />
நீ அவர்களுக்கு தேவைப்படுகிறாய்<br />உனது சமனின்மைகளால்<br />அவர்களை அளந்து கொள்ள<br />உனது ஒப்பனைகளை<br />குறை சொல்ல அல்லது<br />ஒழுங்காக ஒப்பனை செய்ய கற்று கொள்ள<br />தற்செயலாய் விழுந்த<br />பள்ளத்திலிருந்து கை தூக்க<br />அல்லது அவர்கள் வலையில்<br />
உன்னையும் ஒரு இழையாக்க<br />நீ அவர்களுக்கு தேவைப்படுகிறாய்<br />உனது சாலையின்<br />எல்லா திசைகளிலிருந்தும்<br />தம் நிழல்களை ஏவி விட<br />தமது வளர்ப்பு சாத்தான்களுக்கு<br />உன் பெயரிட்டு மகிழ<br />தன்னிருப்பு உணர<br />தற்பிழைகள் களைய<br />
காரணங்களுடனும்<br />காரணங்களற்றும்<br />உன் இருப்பின் துல்லியம்<br />விகாரங்களால் நிறையும் <br />தீர்ப்பு நாளில்<br />ஏதேனும் ஒரு பாழறையில்<br />சில்லு சில்லாய்<br />நீ<br />றுக்நொகிய்ப்றாகடுப<br />ஓம்.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-12016416338046297032014-04-08T11:50:00.001-07:002014-04-08T11:50:47.105-07:0069 SHORT FILM<iframe allowfullscreen="" frameborder="0" height="270" src="//www.youtube.com/embed/ZS7PO7_tLyM" width="480"></iframe>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-19382389418438886492014-04-07T13:48:00.000-07:002014-04-07T13:48:26.620-07:00இதை 'நான்' எழுதவில்லை...நினைவுகள் ஊர்ந்து போகிறது<br />
பார்க்க பயமாக இருக்கிறது<br />
பார்க்காமலும் இருக்க முடியவில்லை..<br />
<br />
யார் சுழற்றியது இந்த பம்பரத்தை ?<br />
<br />
ஏன்எதற்குஎன்னகசமுசாஇங்கே...லகுதிகுலகுதிகுவென எப்போதும் ஏன் இந்த பேரிரைச்சல்..என்ன தான் வேண்டும் இதற்கு? தொடர்பற்ற தொடர்பாக சொற்கள் படங்கள் இசை இரைச்சல் பித்துக்குளித்தனம் காவாலித்தனம் கருமம் என்ன வஸ்துடா இது என்று எங்காவது குட்டிச்சுவரில் கொண்டு போய் மண்டையை நங்கென முட்டினால் என்ன என தோன்றி யாத்தா ஏண்டி என்ன பெத்தன்னு கத்தாத குறை.The chaser திரைப்படத்தில் அந்த சீரியல் கில்லர் சுத்தியலால அடிச்சே மண்டைய தொறப்பானே அப்டி பொளந்தா தேவலயாட்ருக்கு தலையை.தலை தலையாக அடித்து கொண்டாலும் தலையே தலை.தறுதலை.மலமல மலே மலே மாலே மருத மலை மாமணியே முருகையா...ஆஆஆஆஆஆ<br />
<br />
இது தான் இப்பொழுது பிரச்சினை.இப்படி நான் எழுத நினைக்கவில்லை.இது இப்படித்தான் எழுதி கொள்கிறது.<br />
<br />
என்ன செய்யனும் இப்போ? மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்...அத்தனைக்கும் ஆசைப்படு...கதவை தொற காத்து வரட்டும்...என்ன படிச்சா தகும் இப்போ ? கால தூக்கி சிரசுல வச்சு மூச்ச இழுத்து பொறடி வழியா கொண்டாந்து மண்டைக்குள்ள புகை விட்டா குண்டலினி எழும்பிடும்.அப்புறம் சாவு கிடையாது சத்தம் கடையாது யாவும் அமைதி பேரமைதி.ஓஷோ சொல்றார்.அவர் என்னத்தயாச்சும் சொல்ட்டு போறார்.நான் இப்போ என்ன செய்யட்டும்..நான்? நான்னா என்ன? பின்ன? என்னால சாப்ட முடில தூங்க முடில நிக்க கூட முடில அய்யய்யோ எனக்கு பைத்தியம் புடிச்சிடுச்சோ? பின்ன காதல்..? சீச்சீச்சீ கருமம் கருமம்.ஏன் இப்டிலாம் தோண்றது.?<br />
<br />
"லூசாப்பா நீ"<br />
''நீ லூசே தாண்டா''.<br />
''நீதாண்டா லூசு..''<br />
''உனக்குள் ஒருவன்''<br />
''நீதானா அது''<br />
''நீயே அது...தத்வமஸி''<br />
''மூட்றா மசுரு''<br />
<br />
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...முடிலப்பா.<br />
<br />
அலுவலகம் அமைதியாக இயங்கி கொண்டிருக்கிறது.ஒரு பிலிப்பைனி சாவகாசமாக மூக்கை நோண்டி கையிலெடுத்து பார்த்து கொண்டிருக்கிறான்.வந்தது சிறுமூளையா<br />
பெருமூளையான்னு சாரு பாணில கேக்க தோணி கேட்காமல் விட்டு விட்டேன்.இன்னொரு லெபனானி யார் கூடவோ ரொம்ப நேரமாக போனில் மொக்கையை போட்டு கொண்டிருக்கிறான்.<br />
பயங்கரமான பேய் படத்தை Mute ல் போட்டு பார்ப்பதை போல் பயந்து போய் பார்த்து கொண்டிருக்கிறேன் நடப்பதை எல்லாம்.இங்கிருந்து உடணடியாக எங்காவது தப்பித்து ஓடி விட வேண்டும் போல் இருக்கிறது.அய்யய்யோ எங்கே ஓடினாலும் கூடவே நானும் வருவேனே.நான் தப்பிக்க நினைப்பது இடத்தை விட்டல்ல.என்னை விட்டு.இந்த நான் நானில்லை.<br />
எனக்கென ஒரு நான் எனக்குள் இதற்கு முன் இருந்ததா என்றும் தெரியவில்லை.<br />
<br />
நேற்றிரவு சவரம் செய்து கொண்டிருக்கும் பொழுது திடுமென நடந்தது அது.கண்ணாடியில் நன்றாக தெரிந்த என் பிம்பம் திடுக்கென அஷ்ட கோணலாகி எனக்கு பழிப்பு காட்டியது.சில்லென யாரோ முதுகு தண்டில் ஐஸ் வைத்தது போல் விரைத்து விட்டேன்.கண்களை கசக்கி கொண்டு மீண்டும் பார்த்தேன்.சில நொடிகளில் மறுபடி அதே போல் சேஷ்டை.இப்பொழுது<br />
நாக்கை வேறு துருத்தி காட்டியது.கை கால் வெலவெலத்து கன்னத்தை தடவி பார்க்கிறேன் பேர்வழி என கை நடுக்கி ரேசர் முகத்தில் ஒரு கோடு போட்டு வெள்ளை ஷேவிங் க்ரீமுக்கு நடுவிலிருந்து கோடாக கொழ கொழ ரத்தம்.<br />
<br />
ஸ்ஸ்ஸ்.சிரைத்த வரை போதுமென முகம் கழுவி அவசர அவசரமாக அறையை விட்டு வெளியேறி வீதிக்கு வந்து விட்டேன்.இன்னும் நடுக்கம் குறையவில்லை.யாரிடம் சொல்வது? என்னவென்று<br />
சொல்வது? சில கணங்களில் நடந்து முடிந்த இச்சம்பவம் சொல்ல கூடியதாகவா இருக்கிறது.பித்துக்குளி தனமாக இல்லை?ஒருவேளை இது கனவா? கிள்ளி பார்த்தேன்.வலித்தது.<br />
<br />
இப்பொழுது தான் அதி பயங்கரமான சம்பவங்கள் நிகழ தொடங்கியது.சாலையின் மறுபுறத்திற்கு செல்ல காத்திருந்தேன்.கார்கள் வந்து போய் கொண்டிருந்தன.கிடைத்த இடைவெளியில் சாலையை கடக்க<br />
முயன்ற பொழுது நடுச்சாலைக்கு வந்த உடண் உடல் வலு கட்டாயமாக யாரோ பிடித்து கொண்டது போல் நகராமல் சண்டி செய்தது.தூரத்திலிருந்து அதிவேகமாக ஒரு கார் வந்து கொண்டிருந்தது.நான் உச்ச பட்ச கிலியில் வெளிறி அலறாத குறையாக என்னை நகர்த்த முயற்சித்தேன்.ம்ஹீம் பாறாங்கல்லை போல் அசையாமல் நின்று கொண்டது என் உடல்.கார் ஓட்டி<br />
பல்பை அணைத்து அணைத்து காட்டி பாம் என ஹாரனை வேறு அலற விட்டு மிக அருகில் வந்து சட்டென ஒடித்து கொண்டு போனான்.எனக்கு வெடக்கால் வெட்டி மீண்டும் உயிர் வந்தது போலிருந்தது.வேர்த்து விறுவிறுத்து விட்டது.அவசர வேலையாக செல்கிறான் போல.கையை நீட்டி திட்டி விட்டு மட்டும் போனான்.இறங்கி வந்து செவுளில் அறைவான் என நினைத்தேன்.<br />
<br />
ஒரு சில கணங்களில் உடல் மீண்டும் இயக்கத்துக்கு வந்தது.ஒரு வழியாக அறைக்குள் மீண்டும் வந்து புகுந்து கொண்டேன்.இனி அறையை விட்டு வெளியேறுவது ஆபத்து.பதட்டம் கொஞ்சம் கூட குறையவில்லை.என் மொபைலை தேடினேன்.உடனே யாரிடமாவது இதை சொல்ல வேண்டும்.நிச்சயம் இது கனவல்ல.கிட்டத்தட்ட வேறு விசை என்னை<br />
இயக்குகிறது.யாரின் நடமாடும் சாயை நான்? இனி என்னை என்று சொல்வதில் எவ்வித அர்த்தமுமில்லை.மொழியில் வேறு வழியில்லை.நான் சொல்வது உங்களுக்கு புரிகிறதா? மொபைலை<br />
எங்கோ வைத்து தொலைத்து விட்டேன்.மொபைல் மொபைல்...யாரை அழைப்பது யாரை யாரை? ஆஆஆஆ.<br />
<br />
எனக்கு யாருமில்லை.நான் கூட....அய்யோ என்னாகி விட்டது.இந்த மூளைக்கு?என் நினைவுக்கு யாரும் வரவில்லை.ஒரு பெயர்...ஒரு இடம் கூட நினைவில்லை.முகம்,குரல் எதுவும் நினைவிலில்லை.எனக்கு யாரும் இல்லையா?இல்லை.இருக்கிறார்களே.அய்யோ வாரா வாரம் செல்வேனே எங்கோ? அவர்களோடு பேசி சிரித்து சாப்பிட்டு உறங்கியிருக்கிறேனே.முதலில் என் பெயர் என்ன?.என் பெயர்..பெயர்...எங்கே என் அடையாள அட்டை..என் பர்ஸ்..பர்ஸ்.பர்ஸ்.டேபிளில் தானே வைத்தேன்.இல்லை இது என் அறையில்லை.இல்லை இது என் அறை தான்.<br />
என் அறை எண் என்ன? அய்யோ...என்ன நடக்கிறது என் தலைக்குள்.ஏன் எதுவும் எனக்கு நினைவில் இல்லை.<br />
<br />
இது என்ன இசை? தலையணைக்கடியிலிருந்து ஓ..மொபைல்.அதை எடுத்து இயக்கினேன்.புதிய பெயராய் தோன்றுகிறது.இல்லை,இவள் எனக்கு அறிமுகமானவளாக இருக்க வேண்டும்.இல்லையெனில் பெயரை மொபைலில் சேமித்திருக்க மாட்டேன்.பேசும் குரல் பரிச்சயமில்லாமல் இருக்கிறது.சாவகாசமாக எப்படி இருக்கிறாய் என கேட்கிறாள்.நான் திக்கி திணறி.நலம்...ஒரு உதவி..நீங்கள் யார் என்கிறேன்.அவள் சிரிக்கிறாள்.பின் சற்றே என் நடுக்கத்தை உணர்ந்தவள் போல் என்னாச்சுடா என்கிறாள்.நான் தயவு செய்து என் பெயர் என்ன என சொல்லும் படி கேட்கிறேன்.இப்பொழுது எதிர்முனை கொஞ்சம் கலவரமடைவது போல் படுகிறது.என்னாச்சுடா உனக்கு என சற்று உரத்து கேட்கிறாள்.நான் கெஞ்சும் தொனியில் மன்றாடுகிறேன்.<br />
<br />
என் பெயர் என்ன? நான் யார்...தயவு செய்து சொல்...என்னால் எதையும் நினைவு கூற முடியவில்லை.நான் யார்? நான் யார்....??<br />
<br />
நீ..நீ ரௌத்ரன்...இரு நான் அங்கே வருகிறேன்.எதிர்முனையில் குரல் அணைந்தது.<br />
<br />
ரௌத்ரன்...ஓ என் பெயர் ரௌத்ரன்..நிஜ பெயர்...?? பாத்ரூமுக்குள் நுழைந்து கண்ணாடியில் பார்த்தேன்.மீண்டும் பழிப்பு காட்டுகிறது.சட்டென வெளியே வந்து விட்டேன்.<br />
<br />
போதும்....ரிலாக்ஸ்.ரிலாக்ஸ்.ஏதோ பிசகு.என்னை திரட்டி கொள்ள வேண்டும்.கண்களை மூடினேன்.கலாஸ்...கண்களுக்கு பின்னே ஒன்றுமில்லை...என்னை உணர.எனக்குள் தேட.வெளி...<br />
வெட்ட வெளி...கண்களை திறந்தால் என் எதிரில் இருக்கும் அதே வெளி.<br />
<br />
மீண்டும் கண்ணாடி முன் நின்றேன்.கண் சிமிட்டல் கூட இல்லை.வெறும் பிம்பம்.<br />
<br />
ஹாரன் சத்தம் கேட்கிறது.வந்துவிட்டாள்.ஆம்,இவள் என் தோழி.நடந்ததை கூறினேன்.சிரித்தாள்.இவள் நம்பவில்லை என தெரிகிறது.ஏதேதோ கூறினாள்.நான் உறங்கி போகும் வரை இருந்ததாக<br />
காலையில் தொலை பேசினாள்.மீண்டும் கண்களை மூடி பார்க்கிறேன்.வெளி.வெட்ட வெளி.நான் கூறியது சுவாரஸ்யமாக இருந்ததாம்.அதை வலையில் எழுதும் படி கூறினாள்.இதை எழுதியது<br />
நானில்லை என நாளை நான் கூறினாள் நீங்கள் நம்ப போவதில்லை.<br />
<br />
எனினும் சொல்லி கொள்கிறேன்.<br />
<br />
இதை நான் எழுதவில்லை.Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-12318561274016154382014-04-07T13:15:00.001-07:002014-04-07T13:29:44.312-07:00ஒரு குட்டிக்கதை...ஒரு குட்டிக்கதை...அடடா..அந்த குட்டி இல்லப்பா..குறுங்கதை..<br />
<br />
ஒரு ஊர்ல ஒரு பண்ணையாரு இருந்தாப்டி..ஆமா..அவரும் ஒரு பத்மினிய வெச்சுருந்தாப்டி...பண்ணையில அஞ்சாறு மாடு, நாலஞ்சு குருத..ஒரு ஆடு..என்னதான் பத்மினி பளபளான்னு இருந்தாலும்..மனுசனுக்கு குருத மேல தான் உசுரு..<br />
<br />
ஒருக்கா நாலஞ்சு குருதையில ஒரு குருதைக்கு முடில...நிக்க திராணியில்லாம படுத்துருச்சு..பண்ணை பதறிப்போய் குருத லாக்டேர கூப்டு வந்தாப்டி...லாக்டரு குருதைய பாத்துப்புட்டு ஒதட்ட பிதுக்கிட்டாப்டி...மூனு நாளைக்கு மருந்து தாரேன்...சொகமில்லாட்டி சோலிய முடிச்சு பொதச்சுடனும்..இல்லாட்டி வியாதி எல்லா குருதைக்கும் பரவிடும்னு போற போக்குல ஒரு கார்பண்டை ஆக்ஸைடு பாம் போட்டு போயிட்டாப்டி..பண்ணையும் மூக்க மூடிக்கிட்டு ஒத்துக்கிட்டாப்டி..வேற வழி?<br />
<br />
மொத நாள் ஆச்சு..குருத ரவக்கூட அசையுல...ரெண்டா நாள் ஆச்சு...ம்ஹீம்..நஹி அஸ்தா ஹே..நம்ம ஆடு ஒன்னு நின்னுச்சே அதுக்கு பொறுக்கல...குருதக்கிட்ட வந்து...ந்தா பாரு..நாளைக்குள்ள நீ எந்திருக்கலன்னா உன் சோலிய முடிச்சுருவாய்ங்க...எப்டியாச்சும் எந்திரிச்சு நின்னுரு போதும்னுச்சு...எங்க...நம்ம குருத ஊமக்கண்ணீரா வடிக்குது...பாவம் வாலக்கூட சிலுப்ப முடியல..மூணா நாள் ஆச்சு..த்சொ..த்சொ..அந்த மானங்கெட்ட மருந்து மருந்துக்கூட வேல செய்யல...<br />
<br />
லாக்டரு வந்து குருத புடுக்க புடிச்சு பாத்துட்டு உறை போடாம ஊர் மேஞ்சா இதான் கெதின்னு ஒதட்ட ஒரே பிதுக்கா பிதுக்கிட்டு போயிட்டாப்டி...ரைட்டு...நம்ம ஆட்டுக்குன்னா செம்ம கடுப்பு..இந்தா..இம்மா சொல்லியும் எந்திரிக்காட்டி என்னா மானங்கெட்ட குருத நீ? கொல்லுல உப்புப்போட்டுத்தான மண்டுறன்னு ஒரே உசுப்பா உசுப்பி குருதய எந்திரிக்க வெச்சுடுத்து..குருதயாலயே நம்ப முடில...நம்ம ஆடு "அப்டித்தான்..நல்லா குதி..ம்..ஓடு" ன்னு மேல மேல உசுப்ப..குருதயும் குதிச்சு குதிச்சு ஓட ஆரம்பிச்சுடுச்சு...ஆட்டுக்குன்னா கொட கொடன்னு ஆனந்த கண்ணீர்..<br />
<br />
தூரத்துல இருந்து சாவக் கெடந்த குருத குதிச்சு குதிச்சு ஓடுறத பாத்த பண்ணைக்கு ஒரே குஷி...எங்குருத...எங்குருதன்னு அவரும் பத்மினிய கெட்டிக்கிட்டு துள்ளுறாப்டி...பயபுள்ள அத்தோட உடல..ங்கொய்யால, மீ ஹேப்பி..பண்ணையில இன்னிக்கு எல்லா பயலுக்கும் கறி சோறு...அந்த ஆட்ட வெட்டி உறிங்கடான்னு சொல்ட்டாப்டி...<br />
<br />
நீதி: எப்பவும் நம்ம டவுசர டைட்டா புடிக்காம தாத்தா கோமணம் காத்தா பறக்குதேன்னுலாம் வசனம் பேசப்பிடாது...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-81328081507925357502013-12-05T01:48:00.000-08:002013-12-05T01:50:13.660-08:00குரங்குபெடல்...<span style="font-size: small;">தூரமாக போகும் துயரத்தை நானாகவே தூக்கி தோளில் போட்டு கொள்கிறேனா அல்லது தானாகவே அது என் மீது வந்து ஏறி கொள்கிறதா என தெரியவில்லை.சில நாட்களாக எத்தனை கர்ம சிரத்தையாக காரியங்களை திட்டமிட்டாலும் கட்ட கடைசியில் அது வெளக்கெண்ணையில் குண்டி கழுவிய கதையாகவே ஆகி விடுகிறது.இன்று காலையில் அலுவலகம் வந்து அமர்ந்ததும் உடன் பணி புரியும் நண்பர் சேகரிடமிருந்து போன்.நண்பா ஒரு 50 ரியால் இருக்குமா...ட்ரெயினருக்கு கொடுக்க வேண்டும்..காரில் வந்து கொண்டிருக்கிறேன்..அலுவலம் அருகே வந்ததும் அழைக்கிறேன் என கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.இன்று டிரைவிங் டெஸ்ட் போல.</span><br />
<span style="font-size: small;"><br />
</span><span style="font-size: small;">காசிருந்தால்..அட காலணா இல்லாவிட்டாலும் கூட இங்கு கார் வாங்குவது சுலபம்.ஆனால் டிரைவிங் லைசென்ஸ் வாங்குவது என்பது முன்னோர்கள் வகை தொகையற்று புண்ணிய மழை பொழிந்திருந்தாலோ அல்லது ஓமன் அரபாப்புகளோடு முன் ஜென்ம கடனேதும் இல்லாதிருந்தாலொழிய ஒரு நெடுங்கொடுங்கனவாகவே இருக்கும்..அதற்கு முன் ஒரு நல்ல ஓட்டுனர் பயிற்சியாளர் அமைவதெல்லாம் அவனவன் செய்த வினையன்றி வேறில்லை என்றே கொள்ள வேண்டும்.பெரும்பாலான பயிற்சியாளர்களுக்கே சாலை விதிகள் தெரியாது.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">நேரடியாகவோ பயிற்சி பள்ளி மூலமாகவோ போவதற்கான வழிமுறைகளும் இங்கு கிடையாது.அதனால் தான் ஓமானி டிரெயினர்கள் சிக்கினால் கெட்டியாக கொட்டையை பிடித்து கொண்டு தொங்குகிறார்கள்.இப்படியாக திருவாளர் சனீஸ்வர் தன் கடைக்கண்ணை என் திசையில் திருப்ப ஏக மனதாக முடிவெடுத்து ஜாதக கட்டத்தில் எட்டு விட்டு ஏழரைக்கு இறங்கி ஈசானி மூலையில் துண்டு போட்டிருப்பதறியாமல் ஒரு அசுபயோக அசுப தினத்தில் உச்சபட்ச ராகு காலத்தில் அஷ்டமிக்கு மூன்றாம் நாளாம் நிறை பாட்டி முகத்தில் தன் போக்கில் கவலையற்று எங்கேயோ டொயாட்டாவில் சுற்றி கொண்டிருந்த என் டிரெயினர் சையதை வலிய போனில் அழைத்து நான் குட் மார்னிங் சொன்னேன்.</span><br />
<span style="font-size: small;"><br />
</span><span style="font-size: small;">இரண்டரை வருடங்கள் சௌதியில் கொட்டிய குப்பையில் ஒரு குட்டி காரை வாங்கி நான் ஆல்டோகாரன் ஆல்டோகாரன் என்று ஊரில் கொஞ்சம் ஓட்டிய அனுபவம் இருந்தாலும் திடுமென இங்கே இடது பக்கம் ஸ்டியரிங் பிடித்த பொழுது குரங்கு பெடலில் சைக்கிள் ஓட்டுவது போலவே இருந்தது.ஓமனில் எனக்கு மிகவும் பிடித்த விஷயங்களுள் வலக்கரத்தில் காபி கோப்பை ஏந்தி இடது கை விரலால் ஸ்டியரிங் சுழற்றி வனப்பாய் பூங்கொடியாய் காரில் கடந்து போகும் ஓமானி ஃபிகர்களும், கழுகு பார்வையில் கரட்டு மலையின் மீது ஊரும் முரட்டு பாம்பை போல் நெளிந்தூறும் பளபளா சாலையும் அடக்கம்..இப்படியாக ஓமனின் மலையழகில் சபலித்து கார் ஓட்ட தொடங்கிய பிறகுதான் எமன் எருமையை விட்டு அவ்வப்போது இவ்வூர் டொயாட்டாக்களில் சுற்றுவது புரிந்தது என்பது வேறு விஷயம்..6 மாதங்கள்...ஆயிரக்கணக்கில் செலவு செய்து ஒரு வழியாக லைசென்ஸ் வாங்கிய அன்று ஆனந்தத்தில் கண்ணீர் பொங்கியது..இறுதி செமஸ்டரில் ஏழு அரியரோடு மொத்தமாக 12 பேப்பர் எழுதி முதல் வகுப்பில் பொறியாளர் பட்டம் வாங்கிய பொழுது கூட இப்படி எனக்கு பொங்கியதில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது.</span><br />
<span style="font-size: small;"><br />
</span><span style="font-size: small;">3 மாதங்களுக்கு முன் உடண் பணி புரிந்த நண்பர் மணி இங்கேயே வேறொரு நிறுவனத்தில் வேலை கிடைத்து ஊருக்கு செல்ல வேண்டிய சூழலில் இருந்த பொழுது அவருடைய காரை விற்று விட போவதாக கூறினார்.அதை நான் வாங்கி கொள்வதாக கூறியிருந்தேன்.அடுத்த 15 நாளில் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் காரை என்னிடம் ஒப்படைத்து பெயர் மாற்றமெல்லாம் பிறகு செய்து கொள்வோம் என கூறி சென்றார்.அவர் ஊருக்கு சென்ற அடுத்த நாளே இங்கு நான் காரை ஆள் வைத்து தள்ள வேண்டியிருந்தது.பேட்டரி காலி...பேட்டரியை மாற்றி இரண்டு நாட்கள் ஓட்டியிருப்பேன்....எதேச்சையாக அவருக்கு தொலைபேசிய பொழுது சப்த நாடியும் ஒடுங்கியது எனக்கு..அவர் உலகத்தை விட்டே போயிருந்தார்.எதிர்பாராத மாரடைப்பு..</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">3 வயதில் ஒரு பெண் குழந்தை அவருக்கு..தேவதர்ஷினி என பெயர்.தேவதையை போல் அவ்வளவு அழகு...நான் இங்கு வந்த புதிதில் அவரது மாமானாருக்கு திதி கொடுக்கும் பொருட்டு வீட்டிற்கு சாப்பிட அழைத்திருந்தார்.நானும் சேகரும் சென்றிருந்தோம்.மகளுக்காகவே புதிய கார் வாங்க வேண்டும் இன்னும் சற்று வசதியான புதிய வீட்டிற்கு மாற வேண்டும் என கூறி கொண்டிருந்தார் மணி...மணி விட்டு சென்றிருந்த அவர் வீட்டின் பொருட்களை விற்க மீத உடைமைகளை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப என அவருடைய காரையே நான் அடிக்கடி அங்கு எடுத்து கொண்டு போக வேண்டியிருந்த போது கலங்கியது மனசு.சாவு தான் அவரை ஊருக்கு அழைச்சுட்டு போயிருக்கு..இங்கே இருந்து இப்படி நடந்திருந்தா நிலைமை இன்னும் மோசமா போயிருக்கும் என அனுபவஸ்தர் ஒருவர் கூறியதை எப்படி எடுத்து கொள்வதென தெரியவில்லை.இங்கு இறந்திருந்தால் குறைந்த பட்சம் அலுவலக காப்பீடாக ஒரு கணிசமான தொகை அவரது குடும்பத்தினருக்கு கிடைத்திருக்கும்...துரதிர்ஷ்டம்.</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: small;">உரிமையாளர் இன்றி அந்த காரை ஓட்டுவது தவறு...விபத்து ஏதும் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் கிளைம் செய்ய முடியாது என்பதால் வெளியே எங்கும் எடுத்து செல்ல கூடாது.இறப்பு சான்றிதழ் மற்றும் பெயர் மாற்ற ஒப்புதல் சான்றிதழ் இன்றி அந்த காரை வேறு யாருக்கும் விற்கவும் முடியாது.மணி அவர் கார் லோனை அடைக்கும் பொருட்டு பிற நண்பர்களிடம் வாங்கிய கடனை அந்த காரை விற்றே அடைக்க வேண்டிய சூழல்..சான்றிதழ்கள் வரும் வரை காரை உபயோகிக்காதிருந்தால் காயலான் கடைக்கு கூட போட முடியாதென்பதாலும் ஊருக்கு செல்லும் முன் மணி காரை எனக்கு விற்று விடும் உத்தேசத்தில் இருந்தார் என்பதாலும் வேறு வழியின்றி அந்த காரை இப்பொழுது நானே பயன்படுத்தி கொண்டிருக்கிறேன்...</span><br />
<span style="font-size: small;"><br /></span>
<span style="font-size: x-small;"><span style="font-size: small;">கடந்த 3 மாதங்களாக இந்திய உள் துறை அமைச்சகத்தின் உறுதி முத்திரையோடு கூடிய அவரது இறப்பு சான்றிதழுக்காக காத்திருக்கிறேன்.நான் சையதிடம் கார் பயிற்சிக்காக சேர்ந்த அன்று தானும் வருவதாக கூறி சேர்ந்த நண்பர் சேகர் தான் காலையில் போன் செய்தார்..பணம் கேட்ட உடண் லைசென்ஸ் கிடைத்து விட்டது போல என எண்ணி கொண்டேன்..அலுவலக நண்பர்களிடம் வேறு இசை கேடாக சொல்லி தொலைத்து விட்டேன்.பணம் கொடுக்கு முன்பாக கை குலுக்க சென்ற பொழுது தான் இந்த முறையும் தோல்வி என தெரிந்தது...அவர் டிரெயினரிடம் பணம் தர செல்வதற்குள் நான் திரும்ப ஓடி வந்து நண்பர்களிடம் அவசரமாக அவரிடம் ஒன்றும் கேட்டு விடாதீர்கள் என்று கூறி அமர்ந்து கொண்டேன்...டிரைவிங் லைசென்ஸ் வாங்குவதை விட கடினமானது இப்படி குரங்கு பெடலில் சைக்கிள் ஓட்டுவது...</span></span>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-76629159689441611162012-10-06T02:47:00.000-07:002012-10-06T02:47:48.796-07:00மழை ஓய்ந்த வேளையில்...யாரேனும் இப்படி அறைந்து<br />சொல்ல வேண்டியிருக்கிறது...<br /><br />தன் குரலை நெரிக்கும்<br />கைகளை தானே<br />எப்படி நெகிழ்த்தி கொள்வதென்று<br /><br />மூச்சிரைக்கும்<br />கொடுங்கனவிலிருந்து சட்டென<br />எப்படி விழித்து கொள்வதென்று<br /><br />தன் முகம் கண்டு<br />தேம்பும் குழந்தையை<br />ஏன் தேற்ற முயல கூடாதென்று<br /><br />பனித்துண்டை போல்<br />மௌனத்தை ஏன்<br />கரைய விடக்கூடாதென்று<br />
<br />
அறிமுகமற்ற வீதிகளில் ஏன்<br />
அழுது திரியக்கூடாதென்று<br /><br />மனுஷ்யபுத்திரனை போல்<br />ஏன் கவிதை எழுத முடியாதென்று<br /><br />சருகை போல்<br />எந்த கிளை விட்டும்<br />உதிர்ந்து கொள்ள முடியுமென்று<br />
<br />இறந்த கால நண்பனோடு<br />
தேநீர் அருந்த முடியுமென்று...Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-56762364805625996602012-08-24T12:16:00.000-07:002012-08-24T12:16:34.725-07:00அதிகாலை நேரமே...<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.youtube.com/embed/nIDgilMtoJg?feature=player_embedded' frameborder='0'></iframe></div>
<br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-55562218122660543972012-08-11T14:31:00.000-07:002013-11-29T05:49:01.648-08:00அட்ட கத்தியும் ஒரு அசல் கத்தியும்...<div class="separator" style="clear: both; text-align: center;">
<a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB-mlLAWDI_qHMZnhj0Ih2A8bD4w1m5RIW2wZbcgGeVjfSDtDokWOQuRRgwZPx_uzV3DWmO4bnw6ckMnl8ywQkx1ihSExxBS0q54ZpQ0HnYx1XZAbh9pPYdDsaTQNg8-mceBm7koO7Mio/s1600/Attakathi.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgB-mlLAWDI_qHMZnhj0Ih2A8bD4w1m5RIW2wZbcgGeVjfSDtDokWOQuRRgwZPx_uzV3DWmO4bnw6ckMnl8ywQkx1ihSExxBS0q54ZpQ0HnYx1XZAbh9pPYdDsaTQNg8-mceBm7koO7Mio/s320/Attakathi.jpg" width="234" /></a></div>
<br />
<br />
<br />
மிக விநோத அதி சந்தோஷ மனநிலையில் இருக்கிறேன்...<br />
<br />
எதேச்சையாக என் நண்பன் மணிக்கு தொலைபேசிய பொழுது கூறினான்.<a href="http://www.youtube.com/watch?v=GIMWA_7zqoA&feature=relmfu">சந்தோஷ்</a> மியூசிக் டைரக்டர் ஆகிட்டான்டா.படம் பேர் <a href="http://attakathi.com/crew_list.html">அட்டகத்தி</a>..பாட்டெல்லாம் நல்லாருக்குடா.<br />
<br />
சந்தோஷ் என் கல்லூரி தோழன்.ஸ்ரீரங்கத்தில் அவன் வீட்டிலும் கல்லூரி
ஆர்கெஸ்ட்ரா ரூமிலுமாக பழியாக கிடந்து என் பாடலுக்கு அவன் மெட்டு இடுவதும்
அவன் மெட்டுக்கு நான் பாட்டெழுதுவதும் கனவுகளுமாக கிடந்திருக்கிறோம் என்பதை சொல்லும்
பொழுது ஒரு விளக்க முடியாத அவஸ்தை கலந்த மகிழ்ச்சி இப்பொழுது.அவனது 10 வருட
போராட்டம்.உழைப்பு..சந்தோஷ் வைதீக வாசி.ஒரே மகன்.கல்லூரி
ஆர்கெஸ்ட்ராவின் பிரதான கீபோர்ட் பிளேயர்.கூடவே புல்லாங்குழலும்
வாசிப்பவன்.ஏதோ ஒரு ஆசை,வெறி.. கதை,இசை,இயக்கம் என இடைவிடாமல் எங்களை இயக்கி
கொண்டேயிருந்தது.கொஞ்சமும் நிம்மதியற்று பரபரத்த நாட்கள்
அவை.<br />
<br />
உறையூரிலிருந்து இருப்பு கொள்ளாமல் நான் அலைந்த பல இடங்களில் அவன்
வீடும் ஒன்றாக இருந்தது.சந்தோஷ் இத்தகைய பரபரப்புகளில்லாதவன்.தனது
எதிர்காலம் குறித்த திட்ட வட்டமான ஒரு வரைபடம் அவனிடம் இருந்தது என்றே
நினைக்கிறேன்.தன் விதியை தானே எழுத வாய்க்கப் பெற்ற அவன் சூழல் சிலவேளைகளில்
என்னை பொறாமை கொள்ள செய்திருக்கிறது.இவ்வளவு போராட்டங்களை கடந்து இன்று
தன் கனவை நனவாக்கிய ஒருவனை தன் கனவுகளை நிறைவேற்ற முடியாத அல்லது நொண்டி
காரணங்கள் கூறி ஆட்டத்திலிருந்து விலகி கொண்ட ஒருவன் என் நண்பன் என்
நண்பன் என பீற்றி கொள்வதில் இருக்கிறது அந்த அவஸ்தை.எனினும் சுகமான அவஸ்தை தான்.<br />
<br />
கல்லூரிக்கு பிறகு முற்றிலுமாக கைவிடப்பட்ட ஒரு உலகத்தில் நான் உழன்று
கொண்டிருந்திருக்கிறேன்.கைவிடப்பட்ட உலகம் என்பது.கனவு கண்ட உலகத்தில்
அல்லாது வேறொரு உலகத்தில் அல்லது வேறொருவருடைய கனவில் ஒட்டுதலின்றி
உழன்றது.உலகமே கொண்டாடும் ஒரு இசைஞனின் பாடல்களில் ஒன்று என எண்ணி இருந்த
ஒன்று சந்தோஷின் மெட்டு என்று அறிந்த நாளில் நம்பிக்கைக்கும்
அவநம்பிக்கைக்கும் இடையில் ஊசலாடியிருக்கிறேன்.<br />
<br />
சினிமா..பாடல்கள்..இன்றைய
என் நாட்கள் ஒரு சராசரி தமிழ் சினிமா பார்வையாளனின் சராசரி அறிதல்கள் கூட
அற்றது.குறைந்த பட்சம் கடந்த சில வருடங்களில் வந்த பல படங்களின்
பெயர்கள்..பாடல்கள்..கூட தெரியாது எனக்கு.தொடர்ந்த இடமாற்றம் மற்றும்
கடுமையான சுயவெறுப்பு என நாட்கள்
கடந்திருக்கின்றன.மிகையல்ல.தொலைக்காட்சி பார்க்கும் வழக்கமும் இல்லாமலான இவ்விலகலை என்னவென்று சொல்வது.நம்ப முடியவில்லை..ஏதோ ஒரு அரபு
நாட்டில் அமர்ந்து இந்த அர்த்த ராத்திரியில் இப்படி பதிவு எழுதும்
ஒருவனை நம்பித்தான் ஆகவேண்டும் என்றும் ஏதும் இல்லை.<br />
<br />
சந்தோஷ் நாராயணின் அட்டைக்கத்தி பாடல்களை கேட்ட பொழுது ஒரு சிறிய
நெருடல்.இப்பாடல்களல்ல அவனது உயரம்.கடந்த வருடம் தேசிய விருது பெற்ற <a href="http://www.youtube.com/watch?feature=player_embedded&v=_KInTrr9Vhg#%21">அத்வைதம்</a>
என்ற படத்திற்கு இசையமைத்தவன் அவன்.மென்பொருளோடு கீபோர்டும் இணைக்கப்பட்ட
அவன் கணிணியில் தாளம்..பிறகு வரிசையாக நூலில் மணிபோல் கோர்க்கப்படும் இதர இசைக்கருவிகளின்
கோவைகள் இவற்றை அருகில் அமர்ந்து பார்த்ததால் நேர்ந்திருக்கலாம் பொதுவாக பாடல்கள்
மீதான என் இன்றைய விலகல்.பெரும்பாலும் அவனது இசைக்கோர்வையில் கிடார் அதிகம்
பயன்படுத்தப்பட்டிருக்கும்.<br />
<br />
இப்பட பாடல்களிலும் அதை கேட்க
முடிகிறது.அங்கங்கே குழலிசையை மென்தூவியாக கலப்பான்.ஒரு சமையல் கலை
வல்லுநனை போல் கலந்தும் குறைத்தும் நடக்கும் அவன் பாடல்களை உருவாக்கும்
விதம்.ஒரே தருணத்தில் தரையில் கால் பாவி வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கும்
அவன் மனம்.இசைக்கோர்ப்பு பொறுமையை வெகுவாக சோதிக்கும் விடயம் எனக்கு.பாடலை எழுதி
கொடுத்தால் முடிந்தவரை சீக்கிரம் கிளம்பி விடுவேன்.அது ஒரு முழுமையான
பாடலாகி கேட்கும் தருணத்தில் விவரிக்க இயலாத கிளர்வு தோன்றி அவனை கட்டி
கொள்வேன்.அந்நாட்களிலேயே ஏதோ ஒரு படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு
கிடைத்தது அவனுக்கு.எனினும் ஏதோ காரணங்களால் அப்படம் நின்று போனது.இவ்வளவு
வருடங்கள் கழித்து இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தாடியும்
தொப்பையுமாய்..ரொம்ப சந்தோஷம்டா மச்சான்.<br />
<br />
இப்படத்தின் பாடல்களில் ஆசை ஓர் புல்வெளி,பொடி வெச்சு புடிப்பேன்,வழி
பார்த்திருந்தேன் மூன்றும் அவன் ஸ்டைல் பாடல்கள்.மூன்றும் மிக நன்றாக
இருக்கிறது.இருந்தும் எல்லா பாடல்களிலும் ஏதோ வேண்டுமென்றே தெளிக்கப்பட்ட ஒரு
அசிரத்தையை உணர முடிகிறது.அல்லது <a href="http://www.youtube.com/watch?v=_Ojq48zLUSo&feature=related">கதை சூழல்</a>
இந்த அசிரத்தையை வேண்டுகிறதோ என்னவோ...மற்ற மூன்று பாடல்கள் கானா
ரகம்.அவையும் மிக நன்றாகவே இருக்கின்றன.பாடல்களோடு படமும் நல்ல வெற்றியடைய
மேலும் மேலும் இசை வாய்ப்புகள் அவனுக்கு குவிய வேண்டி மனம் வாழ்த்துகிறது.<br />
<br />
<br />
<div dir="ltr">
<br /></div>
Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-15008385507937703452012-08-11T02:46:00.000-07:002012-08-11T02:46:35.321-07:00நாஸ்டால்ஜியா...''ரவிவர்மன் எழுதாத கலையோ<br />ரதி தேவி வடிவான சிலையோ...''<br /><br />வசந்தி
படத்தில் வரும் இப்பாடலை முதன் முதலாக ரேடியோவில் கேட்ட பொழுது எனக்கு ஆறு
அல்லது ஏழு வயது இருந்திருக்கலாம்.ஒருமுறையே கேட்டதாக நினைவு.ஆனால் அந்த
வரிகளும் மென்மையான மெட்டும் அப்படியே ஆழ புதைந்து போயுள்ளன
போலும்.எதேச்சையாக சற்றுமுன் அப்பாடலை கேட்க நேர்ந்தது.தொலைக்காட்சிகளில்
கூட இப்பாடலை நான் இதுவரை கண்டதில்லை.<br />
<br />
அந்நாட்களில் என் தெருவில் வாசிம் வீட்டில் மட்டும் தான் நிரந்தரமாக
தொலைக்காட்சி இருந்தது.வாசிமின் அத்தா சிங்கப்பூரில் சொந்த கடை
வைத்திருந்தார்.என் வீட்டில் அப்பா விடுமுறையில் வரும் நாட்களில்
தொலைக்காட்சி மற்றும் கேசட் ப்ளேயர் எடுத்து வருவார்.அவ்வப்போது வாசலில்
வைத்து ஏதேனும் படங்கள் போடுவார்.தெருவே அமர்ந்து பார்க்கும்.போகும் பொழுது
விற்று விட்டு போய் விடுவார்.படிப்பு கெட்டு விடும் என்ற நொள்ளை
சாக்கு.இல்லாவிட்டாலும் வெளிநாட்டு பொருட்களை வாங்கி விற்கும் தரகர்கள்
வாசலிலேயே நின்று நச்சரித்து வாங்கி சென்று விடுவார்கள்.<br />
<br />கோவில் திருவிழா,அல்லது ஏதேனும் கல்யாண விஷேஷம் போன்ற நாட்களில்
வாடகைக்கு
டிவி எடுத்து தெருவில் விடிய விடிய படம் போடுவது அந்நாட்களில் பொதுவான
வழக்கம்.டிவி இல்லாத நாட்களில் ரேடியோ தான் ஆறுதல்.என் வீட்டில் ஒரு சிறிய
BPL ரேடியோ இருந்தது.இன்னமும் இருக்கிறது.ஏதோ செண்டிமெண்ட்,அம்மா இன்னமும்
அதை பத்திரமாக பாதுகாக்கிறார்.காரைக்கால் பண்பலைவரிசை,விவித் பாரதி என்று
ஏதேதோ ஓடிக்கொண்டிருக்கும்.மாமா என் வாக்மேனில் ஆம்பிளிஃபயரை இணைத்து
இரண்டு மண்சட்டிகளில் ஸ்பீக்கரை கவிழ்த்து வைத்திருப்பார்.பாடல்கள் பதிவு
செய்து வந்து போட்டு விடுவார்.'மாடி வீட்டு மைனர் இவரு தானுங்க..மீச மேல
மண்ணிருக்கு பாருங்க'..'அடியே மனம் நில்லுனா நிக்காதடி..கொடியே என்ன கண்டு
நீ சொக்காதடி'..கடலோர கவிதைகள்..இன்னும் ஏதேதோ துள்ளிசை பாடல்கள்..மற்றும் சோகப்பாடல்கள்.<br />
<br />மாமா டி.ராஜேந்தரின் மிக தீவிர விசிறி..''ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்''<span></span>..''சமைச்சு
வெச்ச மீனு கொழம்ப நீயும் சலிக்காம தின்ன போதே''..போன்ற பாடல்களை
சலிக்காமல் மீண்டும் மீண்டும் ரீவைண்டடித்து கடுப்பேற்றுவார்.சில சமயம்
வீட்டிலேயே வைத்து தச்சு வேலைகள் நடக்கும் பொழுது ''என் தங்கை
கல்யாணி''..''கரகாட்டக்காரன்'' போன்ற படங்களின் ஒலிச்சித்திரம் போட்டு
விடுவார்.தாத்தாவுக்கு வேலை நேரத்தில் நொய் நொய் என சத்தம் வந்தால்
பிடிக்காது.அதனால் மாமா வரும் முன் Fuse Carrier ஐ பிடுங்கி எங்காவது ஒளிய வைத்து
விடுவார்.அதை துப்பறிந்து எடுத்து வரும் வேளை என்னுடையது.<br />
<br />
தாத்தாவோடு வயல்வெளி சுற்றுவது,மாமாவோடு வாரம் ஒருமுறை ஏதேனும் டப்பா
தியேட்டரில் டப்பா படம் பார்க்க சைக்கிளில் செல்வது,ஞாயிற்று கிழமைகளில்
வாசிம் வீட்டில் டிவி பார்ப்பது.பள்ளி..நண்பர்கள்..விளையாட்டு..எல்லா
சிறுவர்களையும் போலவே இவ்வளவு தான் அந்நாட்களில் என் உலகமும்.அதொரு மழை நாள் ஞாயிறு.வாசிம் வீடு
பூட்டியிருந்ததால்..வகுப்பு தோழன் கோபி வீடு இருந்த வடக்கு தெருவிற்கு படம்
பார்க்க சென்று விட்டேன்.மழை விடுவதாக இல்லை.ஒரே கும்மிருட்டு.நான்
எங்கிருக்கிறேன் என மாமாவும் தாத்தாவும் தேடி நான் அகப்படாததால் அம்மாவும்
அந்த மழையில் வீடு வீடாக சென்று தேடியிருக்கிறார்கள்.<br />
<br />
தெருதெருவாக தேடி கடைசியாக அம்மா கோபி வீட்டு வாசலுக்கு வந்த பொழுது
தாழ்வாரத்தில் மழை சாரலில் நான் நடுங்கி கொண்டு நின்றேன்.வடக்கு தெரு தவிர
வேறு எங்கும் மின்சாரம் இல்லை.மழை வேறு பிழி பிழியென்று பிழிந்து
கொண்டிருந்தது.தெருவே தெரியாமல் கரேலென கிடந்தது பாதை.வீடு போய் சேரும் வரை
அம்மா ஒன்றும் பேசவில்லை.அதுவே அடிவயிற்றை பிசைந்தது.அடி உண்டா இல்லையா
என்ற கலவரத்தோடே நான் பின்னி பின்னி நடந்து கொண்டிருந்தேன்.வீடு வந்தவுடன்
தாத்தாவும் மாமாவும் லேசாக என்னை ஏசி விட்டு அம்மாவிடம் அடிக்க வேண்டாம்
என்று சொல்லி சென்றார்கள்.நினைத்தது போல் அம்மா அடிக்கவில்லை.ஆனால்
எதிர்பாராத விதமாய்..''இந்த கண்ணு தானே..இந்த கண்ணு தானே என கேட்டபடி
வெங்காயத்தை எடுத்து வந்து என் கண்களில் கரகரவென்று தேய்த்து
விட்டார்கள்.ஒரே எரிச்சல் ரொம்ப நேரம் அரற்றி கொண்டே இருந்ததாக ஞாபகம்..<br />
<br />
அடுத்த நாள் மாலையே வீட்டிற்கு ஒரு கருப்பு வெள்ளை சாலிடேர் டிவி
வந்தது.அம்மாவின் விரலில் பறவை மோதிரம் பதித்திருந்த இடம் வெள்ளையாக
இருந்தது.Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-12753662043328727932012-08-06T07:52:00.001-07:002012-08-06T07:52:25.677-07:00வார்டு எண் 325 - நாஞ்சில் நாடனின் இந்நாட்டு மன்னர்<div class="separator" style="clear: both; text-align: center;">
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dzp9lhsh94yidH26pEjXRIAtSmKoI5SBoPPWSqxEJnD930YGpq25GlhLdtLzEpE-tVED3zNdGYaMP6YRLKcgw' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div>
<br />
<br />
<br />
Directed by Madonne Ashwin<br />Camera by P.V Shankar<br />Edited by Abhinav Sunder Nayak<br />Music by William John Britto<br />
<br />
<u>நாஞ்சில் நாடனின் சிறுகதை - இந்நாட்டு மன்னர்</u><br />
<span style="font-size: small;"><br /></span><br />
<span style="font-size: small;">அவன் பெயர் என்ன என்று யாருக்கும் தெரியாது! “வைத்தியன்’ என்ற பெயராலேயே சிறுவர் முதல் பெரியவர் வரை அவனை அழைத்தார்கள். ஒருவேளை வாக்காளர் 2.nanjil nadanபட்டியலில் பார்த்தால் தெரியலாம். அவன் பெயரைக் கண்டுபிடிக்கும் சிரமம் மேற்கொள்ளாமல் செத்துப்போன கொம்பையாத்தேவர் சார்பிலோ, அல்லது நாடு விட்டுப் போன நல்லத்தம்பிக் கோனார் சார்பிலோ தான் அவன் ஓட்டுப் போட்டிருக்கிறான். ஆனால் இப்போது ஊராட்சித் தலைவர் தேர்தலில் இது சாத்தியமில்லை. ‘உருளை’ சின்னமுடைய உமையொரு பாகன் பிள்ளையும், ‘பூசணிக்காய்’ சின்னம் பெற்ற பூதலிங்கம் பிள்ளையும் உள்ளூர்க்காரர்கள். எனவே கள்ளவோட்டுப் போட - அதுவும் எல்லோருக்கும் தெரிந்த அவனைக் கொண்டு - யாரும் துணியவில்லை. தேர்தல் சந்தடிகளில் ஊரே அல்லோலகல்லோலப் படும் வேளையில் தான் ஒரு புறவெட்டாகிப் போனதில் வைத்தியனுக்கு மிகுந்த மன வருத்தம் உண்டு. இது வரையில்லாமல், தன் ஜனநாயக உரிமை புறக்கணிக்கப்படுவதில் ஒரு எரிச்சல்.<br /><br /> ஒரு வாக்கு இப்படி அர்த்தமற்று வீணாவதில் இரண்டு கட்சிக்காரர்களுக்கும்<br />ஏமாற்றம்தான். அவன் பெயர் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்ளலாமென்றால், அவன் வயதுடையவர்கள் யாரும் உயிரோடு இல்லை. இப்போது ராஜாங்கம் நடத்தும் தானமானக்காரர்களுக்குப் பிறந்த முடி எடுத்தவனே வைத்தியன்தான். எனவே அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.<br /><br /> அவன் பெயரைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற விளையாட்டுத்தனமான ஆர்வத்தோடு, அவனிடமே கேட்கலாமென்றாலும், “அதெல்லாம் இப்ப என்னத்துக்கு போத்தி...? என் பேரிலே எடவாடா முடிக்கப் போறியோ?” என்பதுதான் இதுவரை பதிலாக வந்திருக்கிறது. தன்னுடைய பெயரே அவனுக்கு மறந்துவிட்ட நிலையில், அந்த உண்மைப் பெயரில் வாக்காளர் பட்டியலில் ஓட்டு இருக்க வேண்டுமே என்பது அவனுக்குத் தோன்றாமல் போயிற்று!<br /><br /> அவ்வூர் வாக்காளர் பட்டியலில் இன்னாரென்று தெரியாத இரண்டு பெயர்கள்<br />இருந்தன. பட்டியலைக் குடைந்துகொண்டிருந்த ‘பூசணிக்காய்’ ஆதரவளனான மாணிக்கம் அது யாரென்று தெரியாமல் விழித்தான். வைத்தியனின் முகம் அவன் நினைவில் வந்து வந்து போயிற்று. முதல் பெயர் புகையிலையா பிள்ளை. அது அவனாக இருக்க முடியாது. இன்னொன்று அணஞ்ச பெருமாள். வைத்தியனின் பெயர் இதுவாக இருக்கலாமோ என்ற ஊகத்தில் மாணிக்கம் வயதைப் பார்த்தான். எண்பத்திரண்டு. ஒரு துள்ளுத் துள்ளினான்.<br /><br /> ‘கோச்ச நல்லூர்’ என்று வழக்கமாகவும், ‘கோச்சடையநல்லூர்’ என்று இலக்கண சுத்தமாகவும் அழைக்கப்படும் அந்த ஊரில், உத்தேசமாக நூறு வீடுகள் இருக்கும்.நூறு வீடுகளில் மக்கள் வழி, மருமக்கள் வழி, சைவர்கள் (இந்த வைப்புமுறை மக்கள் தொகை விகிதத்தை அடிப்படையாகக் கொண்டதே அல்லாமல், உயர்வு தாழ்வு என்ற நிலையை உள்ளடக்கியதல்ல என்று தெண்டனிட்டுச் சொல்லிக் கொள்கிறேன்). ‘கிராமம்’ என்றும் ’பிராமணக்குடி’ என்றும் அழைக்கப்படுகிற ‘எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகும்’ வீடுகள் ஏழு. பூணூல் போட்டவர்கள் எல்லோரும் ‘ஐயர்கள்’ என்ற நினைப்பே வேளாளர்களிடம் ஏகபோகமாக இருப்பதால், அங்கும் என்ன வாழுகிறது என்று தெரியாமல், அவர்கள் ’ஒற்றுமை’யின் மேல் ஏகப் பொறாமை. இது தவிர இந்து சமய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு போல -நாடார், தேவர், வண்ணார், நாவிதர் என்று பல பகுப்புக்கும் ஆட்பட்ட இந்துக்களும் அங்கே உண்டு.<br /><br /> இவை நீங்கலாக, தான் இந்துவா கிறிஸ்துவனா இல்லை இரண்டுமா அல்லது இரண்டும் இல்லையா என்று நிச்சயமாக அறிந்து கொள்ளாத மக்களும் அங்கே உண்டு. கும்பிடுகிற சாமியை வைத்துக் கணக்கிடலாமென்றால் - சுடலைமாடன், ஈனாப் பேச்சி, இசக்கி அம்மன், தேரடி மாடன், புலை மாடன், முத்துப் பட்டன், கழு மாடன், வண்டி மறிச்சான், முண்டன், முத்தாரம்மன், சூலைப் பிடாரி, சந்தனமாரி, முப்பிடாரி என்ற பட்டியல் நீண்டு போகும். அந்த ஊர் வாக்காளர் பட்டியலை விட இது பெரிது.<br /><br /> மேற்சொன்னவர் அனைவரும் இந்து கடவுளன்களும் கடவுளச்சிகளும்தான் என்று பல அவதார மகிமைகளை எடுத்துக் காட்டி நீங்கள் நிறுவுவீர்களேயானால், அந்த மக்களும் இந்துக்கள்தான். ‘ஏ’யானது ‘பி’க்குச் சமம். ‘பி’ஆனது ‘சி’க்குச் சமம். எனவே ‘ஏ’<br />= ‘சி’ என்ற கணித விதியை இஞ்கே கையாண்டால், இவர்கள் இன்னின்ன கடவுளன் அல்லது கடவுளச்சியை வழிபடுகிறார்கள்; அந்தக் கடவுளன்களும் கடவுளச்சிகளும் இந்துக்கள்: எனவே இவர்களும் இந்துக்கள் என்று வல்லந்தமாக நிரூபித்து விடலாம். இந்தச் சள்ளையெல்லாம் எதற்கு என்றுதான் பல சாதிகளும் பல தெய்வங்களும் பலதரப்பட்ட மொழி, பண்பாடு ஆகியவையும் உடைய இந்தக் கூட்டத்தை ‘இந்தியா’ என்றும், இந்து என்றும் ஆங்கிலேயன் பெயர் வைத்திருக்க வேண்டும்! இந்த நாட்டில் இத்தனை சதவீதம் இந்துக்கள் என்று பண்டார சந்நிதிகளும், ஜகத்குருக்களும் புள்ளி விபரம் தந்து பீற்றிக்கொள்வதெல்லாம் இந்தக் கணிசமான மக்களையும் உள்ளடக்கித்தான்.<br /><br /> இப்படி ‘ராம ராஜ்ய’ யோக்கியதைகள் பல கோச்சநல்லூருக்கு இருந்தாலும்<br />ஊராட்சித் தலைவர் தேர்தல் என்றால் சும்மாவா? பொறி பறக்கும் போட்டி. இதில் ஆசுவாசப்படுத்தும் சங்கதி என்னவென்றால், போட்டியிடும் இருவரும் வேளாளர்கள்.குறிப்பாக ஒரே வகுப்பைச் சேர்ந்த வேளாளர்கள். அதிலும் குறிப்பாக மைத்துனர்கள்.எனவே காரசாரமான போட்டி இருந்தாலும், வகுப்புக் கலவரங்களாவது இல்லாமல் இருந்தது. ஊரு முழுவதும் ஏதாவது ஒரு சைடு எடுத்தாக வேண்டிய நிலை. இந்த நூறு வீடுகளைத் தவிரவும் பச்சைப்பாசி படர்ந்த தெப்பக்குளமும் அதன் கரையில் செயலிழந்த சாத்தாங்கோயிலும் சில சில்லறைப் பீடங்களும் ஒரு பாழடைந்த மண்டபமும் இரவு ஏழு மணிக்குமேல் அதனுள் இயங்கும் சட்ட விரோதமான ‘தண்ணீர்ப் பந்த’லும் சுக்குக்காப்பிக் கடையும் வெற்றிலைபாக்கு முதல் ‘டாம் டாம்’ டானிக் ஈறாக விற்கும் பலசரக்குக் கடையும் ஏழெட்டுத் தென்னந்தோப்புகளும் இருபது களங்களும் சுற்றிலும் நஞ்சை நிலங்களும் அங்கே உண்டு. மனிதனைத் தவிர, பிற தாவர சங்கமச் சொத்துக்களுக்கு ஓட்டுரிமை இல்லாது போனது கூட ஒரு சௌகரியம்தான். இல்லையென்றால், இந்த இரண்டு பேரை அண்டிப் பிழைக்கும் மனிதர்களுக்கு ஏற்பட்ட தர்மசங்கடங்கள் அவற்றுக்கும் ஏற்பட்டிருக்கும்.<br /><br /> இருக்கின்ற வாக்குகளில், யாருக்கு எத்தனை கிடைக்கும் என்ற ஊகமும் கணக்கும் எங்கு பார்த்தாலும் நீக்கமற இருந்தது. ‘பூசணிக்காய்’ வேட்பாளரின் தங்கைக்கு இந்த ஊரில் ஒரு ஓட்டு இருப்பதால், ஒரு வாரத்துக்கு முன்னாலேயே நாங்குநேரியில் இருந்து அவள் வந்தாயிற்று. இதை அறிந்த ‘உருளை’ வேட்பாளர் சும்மா இருப்பாரா?புளியங்குடியில் வேலை பார்த்த அவர் தம்பிக்கு தந்தியே போயிற்று. மனைவியை அழைத்து வர வேண்டாம்; தனியாக வந்தால் போதும் என்று அவனுக்குக் கட்டளை. அவள் பூசணிக்காயின் தங்கை. (வசதி கருதி இங்கு தொட்டு சின்னம் வேட்பாளரைக் குறிக்கிறது.) என்னதான் கணவன் கார்வார் செய்தாலும் பாசம் காரணமாக அவள் பூசணிக்காய்க்குப் போட்டு விட்டால்? இங்கு ஒரு ஓட்டுக்கூடி அங்கும் ஒரு ஓட்டுக்<br />கூடினால் என்ன பயன்? அதைவிட இரண்டு பேரும் வராமலேயே இருந்து விடலாமே!<br /><br /> கூட்டிக் கழித்து, வகுத்துப்பார்க்கையில் யாரு வென்றாலும் பத்து<br />வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெல்ல முடியும் என்று நோக்கர்கள் கணித்தனர்.தேர்தல் வேலைக்காக இரண்டு பேரும் திறந்திருந்த செயலகங்கள் எப்போதும் நிரம்பி வழிந்தன. தேர்தல் நாள் நெருங்க நெருங்க வெற்றிலை, பீடி, சுக்குக்காப்பி, வடை,சீட்டுக்கட்டுகள் செலவு ஜீயாமெட்ரிக் புரகிரஷனில் வளர்ந்தது. நாளை காலை தேர்தல் என்ற நிலையில் இந்த வேகம் காய்ச்சலாகி, ஜன்னி கண்டு விடலாம் என்ற அச்சத்தைத் தந்துகொண்டிருந்தது. இந்தச் சரித்திரப் பிரசித்தி பெறப் போகும் விநாடியில்தான் மாணிக்கம் பூசணிக்காய் செயலகத்திலிருந்து குபீரென்று கிளம்பினான்.<br /><br /> இப்போதே வெற்றி கிடைத்துவிட்டதைப் போன்ற ஒளி முகத்தில் துலங்க தான் கண்டுபிடித்த அணஞ்ச பெருமாள் வைத்தியனேதான் என்ற வரலாற்றுப் பேருண்மையை யாருக்கும் தெரியாமல், ஐயம் திரிபு நீங்க நிரூபித்து விடவேண்டும் என்ற துடிப்பு. இந்த நேரத்தில் வைத்தியன் எங்கே இருப்பான் என்று அவனுக்குத் தெரியும்.<br /><br /> சாத்தான் கோயிலை நோக்கி மாணிக்கம் நடக்க ஆரம்பிக்கும் போதே ‘சதக்’கென்று சிந்தனை எதனையோ மிதித்தது. நேர் வழியாகப் போனால், இந்த நேரத்தில் இவன் இவ்வழியாகப் போவானேன் என்று எதிரிப் பாசறையைச் சேர்ந்தவர்கள் நினைக்க மாட்டார்களா? அதுவும் நாளை தேர்தலாக இருக்கும்போது, சந்தேகம் வலுக்கத்தானே செய்யும்? அதுவும் ‘உருளை’ ஒற்றர்கள் கண்ணில் பட்டுவிட்டால், துப்புத் துலக்கவோ, பின் தொடரவோ ஆரம்பித்தால் குடிமோசம் வந்து சேருமே! தன்மூளையைக் கசக்கி, இந்தப் பாடுபட்டுக் கண்டுபிடித்த வாக்காளரை, மாற்றுக் கட்சிக்காரனும் கரைக்க ஆரம்பித்தால்?<br /><br /> சமயத்தில் தனக்குத் தோன்றிய புத்திசாலித்தனமான யோசனையை மெச்சிக்கொண்டே, சாத்தான் கோயிலுக்கு சுற்று வழியாக நடந்தான் மாணிக்கம். பள்ளிக்கூடம் வழியாகத் தென்னங்குழிமடை வந்து பத்தினுள் இறங்கி, வரப்பில் நடந்து, வழிநடைத் தொண்டில் ஏறி, கோயிலின் பின்பக்கம் வந்தான். வைத்தியன் தனியாக இருக்க வேண்டுமே என்ற கவலை இலேசாக முளைகட்ட ஆரம்பித்தது.<br /><br /> கோயில் முகப்புக்கு வந்தான். பனிமாதம் ஆகையால் அங்கே ஒரு குருவியைக் காணோம். ஈசானமூலையில், சுவரை அணைத்துக்கொண்டு ஒரு கந்தல் மூட்டை போலச் சுருண்டு படுத்திருப்பது வைத்தியனாகவே இருக்க வேண்டும். கண் மங்கி கை நடுங்க ஆரம்பித்து, காதுகளின் ஓரத்தில் தன்னறியாமல் கத்திக் கீறல்கள் விழ ஆரம்பித்ததும் தொழில் கை விட்டுப் போனபிறகு, நிரந்தரமாக அந்த மூலை வைத்தியனின் இடமாகி விட்டிருந்தது.<br /><br /> மணி ஒன்பதைத் தாண்டி விட்டதால் அவன் உறங்கி இருக்கவும் கூடும். ஆனால் சற்று நேரத்திற்கொரு முறை, நானும் இருக்கிறேன் என்ற காட்டிக் கொண்டிருக்கும் இருமல். மூலையை நெருங்கி நின்றுகொண்டு அங்குமிங்கும் பார்த்தான் மாணிக்கம். ஆள் நடமாட்டம் இல்லை. நாளை தேர்தல் என்ற மும்முரத்தில் ஊர் பரபரத்துக்<br />கொண்டிருக்கும்போது, இந்த ஒதுங்கிய மூலைக்கு யார் வரப் போகிறார்கள்?<br /><br /> வைத்தியனைப் பார்த்து சன்னமாகக் குரல் கொடுத்தான்.<br /><br /> ”வைத்தியா.. ஏ வைத்தியா....!”<br /><br /> பதில் இல்லை. காதோடு அடைத்து மூடிக்கொண்டு படுத்திருப்பதால்<br />கேட்டிருக்காது. அந்த மனித மூட்டையின் தோளைத் தொட்டு உலுக்கினான். அலறாமலும் புடைக்காமலும் எழுந்து உட்கார்ந்த அவன், நிதானமாக மாணிக்கத்தைப் பார்த்து திருதிருவென்று விழித்தான்.<br /><br /> ”ஏம் போத்தி...? வீட்டிலே யாராவது....”<br /><br /> அவன் என்ன கேட்கிறான் என்பது மாணிக்கத்துக்குப் புரிந்தது. மற்ற சமயமாக இருந்தால், இந்தக் கேள்விக்குப் பதில் வேறு விதமாக இருக்கும். ஆனால் இன்று அந்த ஓட்டின் கனம் என்ன என்று அவனுக்குத் தெரியும். ஆகையால் அமைதியாகச் சொன்னான்.<br /><br /> ”அதெல்லாம் ஒண்ணும் இல்ல... உங்கிட்ட ஒண்ணு கேக்கணும்...”<br /><br /> வைத்தியனுக்கு நெஞ்சில் திகில் செல்லரித்தது. இந்த அர்த்த ராத்திரியில்<br />தன்னை எழுப்பி ஒன்று கேட்க வேண்டுமானால்....<br /><br /> ”உன் பேரு அணஞ்சபெருமாளா?” வைத்தியன் முகத்தில் ஒருவித பிரமிப்பு.<br /><br /> ”அட... இதென்ன விண்ணாணம்...? இதுக்குத்தானா இந்தச் சாமத்திலே வந்து சங்கைப் புடிக்கேரு...”<br /><br /> ”பேரு அதானா சொல்லு...?”<br /><br /> ”உமக்கு யாரு சொல்லீட்டா...? நானே அயத்துப் போனதுல்லா.. இப்ப என்ன<br />வந்திட்டு அதுக்கு..?”<br /><br /> ”யார்கிட்டேயும் மூச்சுக்காட்டாதே. உன் பேரு வோட்டர் லிஸ்டிலே இருக்கு..<br />நாளைக்குக் காலம்பற நான் வந்து உன்னைக் காரிலே கூட்டிட்டுப் போறேன்.. காப்பி சாப்பாடு எல்லாம் உண்டு... உருளைக்காரப் பயக்கோ வந்து கோட்டா இல்லேண்ணு சொல்லீரு.. ஆமா...!”<br /><br /> தானும் ஒரு சமயச் சார்பற்ற ஜனநாயக சோஷலிஸக் குடியரசின் முடிசூடா<br />மன்னர்களில் ஒருவன் என்ற எண்ணம் -தனக்கும் ஓட்டுரிமை இருக்கிறது என்ற நினைப்பு வைத்தியனுக்கு புதிய தெம்பைத் தந்தது. அந்த உணர்வு காரணமாகச் சூம்பிய அவன் தோள்கள் சற்றுப் பூரித்தன.<br /><br /> ”நான் ஏம் போத்தி சொல்லுகேன்? அண்ணைக்கு அந்த உருளைக்கார ஆளுக சொன்னாளே..<br /><br />இதுவரை நீ சேத்தவன் ஓட்டையும் ஊரைவிட்டு ஓடினவன் ஓட்டையும் போட்டே... சரி... ஆனா எவனும் சொன்னாண்ணு இந்தத் தடவை அங்கே வந்தே... பொறகு தெரியும் சேதி.... நேரே போலீசிலே புடிச்சுக் குடுத்திருவோம். அப்படீண்ணூல்லா சொன்னா... நானும் அதாலா கம்முண்ணு இருக்கேன். மச்சினனும் மச்சினனும் இண்ணைக்கு அடிச்சுக்கிடுவாங்க.... நாளைக்கு நானும் நீயும் சோடி, கடைக்குப் போலாம் வாடிண்ணூ கழுத்தைக் கெட்டிக்கிட்டு அழுவாங்க... நமக்கு என்னத்துக்கு இந்தப் பொல்லாப்புண்ணுதாலா சலம்பாமல் கிடக்கேன். இப்பம் நம்ம பேரும் லிஸ்டிலே இருக்கா? தெரியாமப் போச்சே இதுநாள் வரை..”<br /><br /> ”இது இப்பம்கூட யாருக்கும் தெரியாது பார்த்துக்கோ... நான்தான்<br />கண்டுபிடிச்சேன்! முன்னாலேயே ஒம் பேரு இருந்திருக்கும்.. ஆனா என்னைப் போல யாரு அக்குசாப் பாக்கா..? அதுகிடக்கட்டும். உனக்குப் புது வேட்டியும் துவர்த்தும் வாங்கி வச்சிரச் சொல்லுகேன். நீ காலம்பற என்கூட வந்து இட்டிலி திண்ணு போட்டு,புதுத்துணியும் உடுத்திக்கிட்டு ஓட்டுப் போட்டிரணும். எல்லாம் நான் சொல்லித்தாறேன்... ஆனா எவன்கிட்டேயும் அனக்கம் காட்டிராதே... என்னா..?”<br /><br /> ”இனி நான் சொல்லுவேனா.. நீங்க இம்புட்டு சொன்னதுக்கப்புறமு...”<br /><br /> வைத்தியன் தந்த உறுதியில் மனம் மகிழ்ந்து தன் சாதனையை நினைத்து மார்பு விம்ம, பூசணிக்காய் வீட்டை நோக்கி நடந்தான் மாணிக்கம்.<br /><br /> அங்கே ஒரு அரசவையின் பொலிவு போன்ற சுற்றுச் சூழல்கள். மங்களாவில் நடுநாயகமாகப் பூசணிக்காய் கொலு வீற்றிருந்தார். அந்த வீட்டிலுள்ள மொத்தப்பெஞ்சுகளும், நாற்காலிகளும் அங்கே பரந்து கிடந்தன. வந்து வந்து தன் விசுவாசத்தைத் தெரிவிக்கும் வாக்காளர்களின் புழக்கம். வெற்றிலைச் செல்லங்கள் இரண்டு மூன்று ஆங்காங்கே ஊறிக் கொண்டிருக்கும் சுக்குக்காப்பி அண்டா. அந்த நூறு வீட்டு ஊரின் இரதவீதிகளைச் சுற்றிச் சுற்றிக் கோஷம் போட்டுத் தொண்டை கட்டியவர்கள் நெரிந்த குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள். நாலை காலைக் காப்பிக்கான ஆயத்தங்கள்.<br /><br /> இட்டிலிக் கொப்பரைகள் கிடார அடுப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் ‘கொர்’ என்ற சீரான இரைச்சல். சின்னம் பூசணிக்காய் ஆனபடியால், பூசணிக்காய் சாம்பாருக்காக அரிந்து பனையோலைப் பாய்மீது குவிக்கப்பட்டிருந்தது. இலைக்கட்டுகள் இடத்தை அடைத்துக்கொண்டு கிடந்தன. பாத்திர பண்ட வகையறாக்களின் முனகல். செயித்தால் வீட்டுக்கொரு பூசணிக்காய் பரிசாக விளம்புவதற்காக ஐந்து மூட்டைகள் சாய்ப்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.<br /><br /> பூசணிக்காய் தோற்றுப்போகும் என்று கருதி, தோற்ற பிறகு தெருவில் போட்டு உடைப்பதற்காக உருளையுமிரண்டு மூட்டைகள் வாங்கிப் பத்திரப்படுத்தியிருந்ததாகக் கேள்வி. ஆகக் கனக மூலம் சந்தையில் பூசணிக்காய்க்கு ஏகக் கிராக்கி. அடுத்த முறை ஊராட்சித் தேர்தலைக் கணக்காக்கி, அதற்குத் தோதாக மேலாய்ச்சி கோணம் முழுவதும் பூச்ணிக்கொடு போடப்போவதாக அவ்வூர் பண்ணையார் ஒருவர் தீர்மாணித்திருப்பதாகத் தகவல்.<br /><br /> நாளை வாக்குச் சாவடிக்குச் செல்வதற்காக ஏழெட்டு வில் வண்டிகளும் இரண்டு<br />வாடகைக் கார்களும் தயார். இதே ஏற்பாடுகளை உருளையும் செய்திருப்பார் என்று சொல்லத் தேவையில்லை. ஒரேயொரு அசௌகரியம்தான். அவர்கள் பூசணிக்காய் சாம்பார் வைப்பதைப் போல, இவர்களால் ரோடு உருளையைச் சாம்பார் வைக்க முடியாது. அதில் ஒரு புத்திசாலி, உருளை என்றால் உருளைக் கிழங்கையும் குறிக்கும் என்பதால், அதையே சாம்பார் வைக்கலாம் என்று சொன்னதன் பேரில் அவ்வாறே தீர்மானமாயிற்று.<br /><br /> இதில் ஒரு அதிசயம் என்னவென்றால், அங்கே மொத்த ஓட்டுக்களே இரு நூற்று எழுபது. நூறு சதமானம் வாக்களிப்பு நடந்தாலும், இருநூற்றெழுபது<br />வாக்காளர்களுக்கும் மொத்தம் பதினாறு வில் வண்டிகளும் நான்கு வாடகைக் கார்களும். அது மட்டுமல்ல வாக்கெடுப்பு நடக்கப் போகும் அரசினர் ஆரம்பப் பள்ளி, ஊரில் எந்த மூலையில் இருந்து நடந்தாலும் அரை பர்லாங்குதான். ஆனாலும் முடிசூடா மன்னர்களை நடத்தியா கொண்டுசெல்வது?<br /><br /> மறுநாள் பொழுது கலகலப்பாக விடிந்தது. தானாகப் பழுக்காததைத் தல்லிப் பழுக்க வைப்பது போன்றும் சூரியன் கிழக்கில் எழச் சற்றுத் தாமதித்திருந்தால் கயிறு கட்டி இழுத்துக்கொண்டு வந்திருப்பார்கள். அவ்வளவு அவசரமும் பதட்டமும்.<br /><br /> ஆறுமணிக்குப் பூசணிக்காயின் மகனும் மருமகளும் ஊரழைக்க வந்தார்கள்.<br />அதைத்தொடர்ந்து உருளையின் மகளும் மருமகனும் ஊரழைத்தார்கள். காலைக் காப்பிக்கான சன்னத்தங்கள். அதிகாலையிலேயே வைத்தியனைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டுவந்து வைத்துவிட்டான் மாணிக்கம். அங்கேயே கிணற்றுத் தோட்டத்தில் குளிக்கச் செய்து, புதிய வேட்டியும் துவர்த்தும் உடுத்து வெண்ணீறு பூசி ஒரே அலங்கரிப்பு. அவனுக்கே ஒரே புளகாங்கிதம். ஊராட்சித் தேர்தல் மாதம் ஒரு முறை வந்தால் எப்படி இருக்கும் என்று அவன் எண்ணினான்.<br /><br /> பத்து மணிக்கு மேல் வாக்கெடுப்பு துரிதகதியில் நடைபெறலாயிற்று. டாக்ஸிகள் எழுப்பும் புழுதிப்படலம். வில் வண்டிக்காளைகள் குடங்குடமாகப் பீய்ச்சித் தெருக்களை மெழுகின. சைக்கிள்கூட நுழைந்திராத முடுக்குகளிலெல்லாம் கார் நுழைந்து தேடிப்பிடித்து வாக்காளரை இழுத்தது. பெற்றோர்கள் ஓட்டுப் போடப் போகும்போது சிறுவர்களுக்கும் காலைக் காப்பி, பலகாரம், டாக்ஸி சவாரி, சிலர் பிடிவாதமாக வில் வண்டியில் ஏற மறுத்து, காரில்தான் போவேன் என்றார்கள். தேர்தல்கள் இல்லாவிட்டால் இதையெல்லாம் எப்படித்தான் அனுபவிப்பது?<br /><br /> இரண்டு வேட்பாளர்களும் வாக்குச்சாவடியில் பிரசன்னமாயிருந்தார்கள்.<br />அவர்களின் பிரதிநிதிகள் இரண்டு வரிசைகளில். இது தவிர அரசாங்க அதிகாரிகளான பள்ளி ஆசிரியர்கள். கலவரம் வரலாம் என்று அஞ்சப்பட்டதால், இரண்டு போலீஸ்காரர்கள் கர்மசிரத்தையோடு கண்காணித்துக் கொண்டிருந்தார்கள், லாத்தியுடன். வெள்ளாளனுக்கு லாத்தியே அதிகம் என்று துப்பாக்கி கொண்டுவரவில்லை.<br /><br /> வைத்தியன் என்ற அணஞ்சபெருமாளை பெருமாள் வாக்குச்சாவடி முன் காரில் கொண்டுவந்து இறக்கிய போது எல்லோர் கண்களும் நெற்றி மேல் ஏறின. வெள்ளையும் சொள்ளையுமாக நீறணிந்த சைவ நாயனாக வந்து நின்ற அவனை அதிசயத்தோடு பார்த்தனர்.<br /><br /> ”நாறப்பய புள்ளைக்கு என்ன தைரியம் இருந்தா இண்ணைக்கு உள்ளூர் எலக்ஷன்லே கள்ள ஓட்டுப் போட வரும்...ம்...வரட்டும்.”<br /><br /> கறுவினார் உருளை.<br /><br /> மணி பன்னிரண்டரை ஆகிவிட்டதால் கூட்டம் குறைந்து விட்டது. வைத்தியன் வந்து<br />வரிசையில் நின்றபோது ஏழெட்டுப் பேரே அவன் முன்னால் நின்றார்கள். அவன் பின்னால் ஓரிருவர் வந்து சேரவா, இல்லை சாப்பிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாமா என்று யோசனையில் தயங்கி நின்றனர்.<br /><br /> இரண்டு நிமிடங்கள் பொறுத்ததும் வரிசையை விட்டு விலகி வேகமாக வெளியே நடக்கத் தொடங்கினான் வைத்தியன். இவனுக்குத் திடீரென என்ன வந்து விட்டது என்று புருவக்கோட்டை உயர்த்தினார் பூசணிக்காய். ‘என் எதிரில, எனக்கு விரோதமாகக் கள்ள ஓட்டுப் போட வந்திருவானாக்கும்...’ என்ற பாவனையில் மீசை மீது கை போட்டு இளக்காரத்துடன் பூசணிக்காயைப் பார்த்தார் உருளை.<br /><br /> வரிசையிலிருந்து விலகிய வைத்தியனைப் பின்தொடர்ந்து ஓடிய மாணிக்கம் இரண்டு எட்டில் அவனைப் பிடித்துவிட்டான்.<br /><br /> ”கெழட்டு வாணாலே! என்ன கொள்ளை எளகீட்டு உனக்கு? எங்கே சுடுகாட்டுக்கா ஓடுகே...?”<br /><br /> ”அட சத்தம் போடாதேயும் போத்தி... இன்னா வந்திட்டேன்...” வைத்தியனின்<br />குரலில் அவசரம்.<br /><br /> ”அதான் எங்க எளவெடுத்துப் போறேங்கேன்.. பிரி களந்திட்டோவ்?”<br /><br /> ”இரியும் போத்தி... ஒரு நிமிட்லே வந்திருகேன்.”<br /><br /> ”ஓட்டுப் போட்டுக்கிட்டு எங்க வேணும்னாலும் ஒழிஞ்சு போயேங்கேன்.”<br /><br /> ”அட என்னய்யா பெரிய சீண்டறம் புடிச்ச எடவாடா இருக்கு.... காலம்பற முகத்தைக் கழுவதுக்குள்ளே கூட்டியாந்தாச்சு. ஏழெட்டு இட்லி வேறே திண்ணேன்... வயசான காலத்திலே செமிக்கவா செய்யி... சித்த நிண்ணுக்கிடும்.. இன்னா ஒரு எட்டிலே போயிட்டு வந்திருகேன்...”<br /><br /> வைத்தியன் குளத்தங்கரையோரம் போய் கால்கழுவி வருவதற்குள் உணவு இடைவேளைக்காக வாக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வைத்தியனை அங்கே காத்திருக்கச் சொன்னால் ஆபத்து என்று கருதி, மீண்டும் காரிலேற்றி, வீட்டுக்குக் கொண்டுபோய்ச் சாப்பாடு போட்டு முதல் ஆளாகக் கொண்டுவந்து நிறுத்தினார்கள். சூரன்பாடு திருவிழாவில், முதலில் வருகின்ற சூரனைப் போல வைத்தியன் வீர விழி விழித்தான். இடைவேளைக்குப் பிறகு, வாக்கெடுப்பு தொடங்கியது கையில் வைத்திருந்த ‘அணஞ்சபெருமாள்’ சீட்டுடன் வாக்கு சாவடியினுள் நுழைந்தான் வைத்தியன். இவனுக்கு ஒரு பாரம் படிப்பித்துத்தான் அனுப்ப வேண்டும் என்று உருளை உஷாராக இருந்தார். முதல் போலிங் ஆபிசரிடம் சீட்டை நீட்டினான் வைத்தியன்.<br /><br /> உருளை ஒரு உறுமல் உறுமினார்.<br /><br /> ”ஏ வைத்தியா.. உனக்கு ஓட்டு இருக்கா?”<br /><br /> சந்தேகத்துடன் அவன் அவரைப் பார்த்தான்.<br /><br /> ”இருக்கு போத்தியோ.. இன்னா நீரே பாருமே...”<br /><br /> அவன் நீட்டிய சீட்டை வாங்கிப் பார்த்த உருளைக்கு கொஞ்சம் மலைப்பு. அவர் மலைப்பதைக் கண்ட பூசணிக்காய் முகத்தில் மூரல் முறுவல்.<br /><br /> ”அணஞ்ச பெருமாளா உன் பேரு..?”<br /><br /> ”ஆமா போத்தி.. நான் பின்ன கள்ள ஓட்டா போட வருவேன்?”<br /><br /> உருளையின் ஐயம் தீரவில்லை. வாக்காளர் பட்டியலை வாங்கிப் பார்த்தார். அவர் முகத்தில் சிறிய திகைப்பு. சற்று நேரத்தில் ஏளனப் புன்னகையொன்று விரிந்தது.<br /><br /> ”இதுவரைக்கும் கள்ள ஓட்டுப் போட்டாலும் நாடுவிட்டுப் போன ஆளுக பேரிலேதான் போட்டிருக்கே. இப்ப செத்துப்போன ஆளு ஓட்டையும் போட வந்திட்டயோவ்?”<br /><br /> ”இல்லை போத்தி.. என் பேரு அணஞ்சபெருமாளுதான்... நான் பொய்யா சொல்லுகேன்...”<br /><br /> ”அட உன் பேரு அணஞ்சபெருமாளோ, எரிஞ்ச பெருமாளோ என்ன எளவாம்<br />இருந்திட்டுப்போகு... ஆனா இந்த அணஞ்ச பெருமாளு பொம்பிளையிண்ணுல்லா<br />போட்டிருக்கு....”<br /><br /> ”என்னது? பொம்பிளையா?”<br /><br /> ”பின்னே என்ன? நல்லாக் கண்ணை முழிச்சிப்பாரு.. அது நம்ம கொழும்புப் பிள்ளை பாட்டாக்கு அக்காயில்லா... அவ செத்து வருஷம் பத்தாச்சே.... ஓட்டா போட வந்தே ஓட்டு... வெறுவாக்கட்ட மூதி.. போ அந்தாலே ஒழிஞ்சு....”<br /><br /> வைத்தியன் செய்வதறியாமல் பூசணிக்காயைப் பார்த்தான். கடித்துத் தின்று<br />விடுவதைப் போல அவர் அவனைப் பார்த்து விழித்தார்.</span><br /><br />*****<br /><br />நன்றி: கணையாழி, ஜனவரி - 1977 , <a href="http://azhiyasudargal.blogspot.com/2010/05/blog-post_23.html">அழியாச்சுடர்கள் தளம்</a>.<br />
<br />
<br />
<br />Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-47917209614248840772012-07-30T21:54:00.000-07:002012-07-30T21:56:14.279-07:00ரொம்ப நாளாயிட்டுது இந்த பக்கம் வந்து...<br />
<span style="font-size: small;">வாங்கி மாதங்களாகியும் பிரிக்கப்படாமல் கிடந்த விஷ்னுபுரத்தை ஓமனில்
ஏதேனும் ஒரு உலர் போதில் வாசிக்க கூடலாம் என தூக்கி வந்தேன்.வந்தே 6
மாதங்களாகி விட்டது.சொச்ச மிச்ச ஒல்லிப்பிச்சான் பொஸ்தவங்கள் மீது அமர்ந்து
அமுக்கி கொண்டு நோஞ்சானை மல்லுக்கு கூப்பிடும் பெயில்வானாய் வாசிக்க வெகு
நாளாக எனை அழைத்து கொண்டிருந்தது. அதன் தோரணை தந்த தொந்தரவு பொறுக்காது,கர்வ நாஸக் என
உருவி கட்டிலுக்கடியில் போடிருந்தேன் சில நாள்.இரவில் தலையனைக்கடியிலும்
பகலில் கட்டிலிலுமாக கிடந்து உழன்று உழைத்து ஓடாய் தேய்ந்த அந்த பொஸ் தவத்தை ஒருவழியாக கையில் எடுத்தாகிவிட்டது.அதன் இடத்தை
அசடன் பிடித்து கொண்டது இப்போது.அதற்கு எப்பொழுது விமோசனமோ...<br /><br />''அதனால் தான் நான் சிந்திப்பதை காலையில் மலம் கழிக்கும் பொழுது வைத்து
கொள்கிறேன்.எப்படியோ ஞானத்தை பழிவாங்கி விட்டதாக நினைப்பு''. என்று
பீதாம்பரம் மாமா சொல்லும் இடத்தில், அடடா தப்பா நெனச்சுட்டோமோ
என்றிருந்தது.பொதுவாக இதன் ஆசிரியரை வாசிக்க மனத்தடையை உருவாக்குவது நல்ல எழுத்தினூடாக அவர் புகுந்து வைக்கும் ஞான ஒப்பாரி தான்.இத்தாந்தண்டி பொக்கா வேறு
அதை போட்டால் என்னதான் செய்வான் மனுசன்.கழுதய கட்டிகினு ஒதைக்கிதேன்னா,எண்ணி
துணிஞ்சு வாங்கிட்டு பொலம்பாத ராசாவென சொந்த சமாதானத்தில் முக்கி முக்கி
100 பக்கங்களை ஓட்டியாகி விட்டது.
</span><br />
<br />
<span style="font-size: small;">பத்து பக்கங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு பண்டாரம் சிப்லாக்கட்டையோடு வந்து வைக்கும் ஞானிக்கு மட்டுமே கோபுர உச்சி தெரியும்...ஞானிக்கு மட்டுமே சோனா மீட்டும் எட்டாம் சுரம் கேட்கும்...ஞானிக்கு மட்டுமே விஷ்னுபுரத்தில் உச்சா கக்கூஸ்லாம் போகும் அதிகாரம் உண்டு ப்ளா ப்ளா பிலாக்கணங்கள் தாண்டி சில காட்சி விஸ்தரிப்புகள் மிக அழகாக இருக்கின்றன.வீரன் என்ற யானை தேர்காலில் தும்பிக்கை மாட்டி படும் வேதனையும் பிறகு பைரவன் என்ற நரசிங்கரின் யானையால் கொல்லப்படுவதும்..என்னவோ போலிருக்கவே அத்தோடு மூடி வைத்தேன்.</span><br />
<span style="font-size: small;">
</span><span style="font-size: small;"><br />திருவடி,பிங்கலன்,பீதாம்பரம் என பாத்திரங்கள் விஷ்னுபுர ராஜகோபுர தேனீக்களாய் வந்து கொண்டேயிருக்கின்றன.திருவிழாவிற்கு விஷ்னுபுரம் வரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களின் அப்பத்திற்கு ஆணை
கட்டி மாவிடிக்கும் லெவலுக்கு ஷங்கர்த்தனமான ஓர் ஜைஜாண்டிக்
ஊர்.பயமுறுத்தும் தத்துவம் கித்துவம் ஏதும் வந்து இதுவரை மண்டையை
பிராண்டவில்லை.அல்லது இது தான் தத்துவம் என்று கூட அறிய முடியாத அளவுக்கு தான் நம் வாசிப்பின் லட்சனமோ என்ற
வகையில் மேலதிக தொந்தரவு ஏதுமின்றி பக்கங்கள் நகர்கின்றன.ஏனோ ஊடாக
தமிழவனின் ஜி.கே எழுதிய மர்ம நாவலையும் வாசித்தால் நன்றாக இருக்குமென்று
தோன்றுகிறது.யாரிடமிருந்து அதை நான் ஆட்டையை போட்டது.என்னிடமிருந்து அதை
யார் ஆட்டையை போட்டது.அது சரி.இன்று உன்னுடையது.நாளை
என்னுடையதாகிறது.மற்றொரு நாளும் என்னுடையதாகவே ஆக வேண்டும்.Never Mind.</span><br />
<div dir="ltr">
<span style="font-size: small;">
</span><span style="font-size: small;"><br />ரெண்டையும் ஒட்டுக்கா வாசிச்சா என்னாகும்.சுருங்கை நகரில் பீதாம்பரம்
மாமா திருவடியோடு தாம்பூலத்தை புளிச்சி கொண்டிருக்க,தேவேந்திரரும்
பிங்கலனும் சோனா நதிக்கரையில் வாக்கு வாதம் செய்து கொண்டிருப்பார்கள்
.அரையநாதர் அரைக்கண்ணால் சுருங்கையையும் விஷ்னுபுரத்தையும் வேவு பார்த்து கொண்டிருப்பார்
என் கனவில்.ஆச்சா.சொச்சத்த வாசிப்போம்.பொறவு பேசிப்போம்.</span></div>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-40572166613530935902011-09-27T11:11:00.000-07:002012-08-07T07:14:25.071-07:00Chitti Aayi Hai - Pankaj Udhas<br />
<br />
<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwFzYeXDtFZ9i9Gd05BquwEM9xeArbiVhBZQsbnCN5zfzhnOCF5Qs07xXEk_-0orGnWlUs2fPA2vCw8a7djZg' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><b class="highlighted0"> </b><br />
<br />
<b class="highlighted0"> </b><span class="highlighted0" style="background-color: #351c75;"><span style="background-color: purple;"></span><span style="background-color: white; color: purple;">Chitti</span></span><span style="background-color: white; color: purple;"> Aayi Hai Vatan Se </span><span class="highlighted0" style="background-color: white; color: purple;">Chitti</span><span style="background-color: white; color: purple;"> Aayi Hai</span><br />
<i>The letter has come from motherland</i><br />
<span style="color: purple;">Bade Dinon Ke Baad Hum Bevatnon Ko Yaad</span><br />
<i>After a long time they remembered us who are away from home</i><br />
<span style="color: purple;">Vatan Ki Mitti Aayi Hai </span><span class="highlighted0" style="color: purple;">Chitti</span><span style="color: purple;"> Aayi Hai</span><br />
<i>The letter has come with the soil of motherland</i><br />
<span style="color: purple;">Upar Mera Naam Likha Hai</span><br />
<i>My name is written on the top</i><br />
<span style="color: purple;">Andar Ye Paigham Likha Hai</span><br />
<i>With this message inside</i><br />
<span style="color: purple;">Oh Pardes Ko Jaanewale</span><br />
<i>Those who goes abroad</i><br />
<span style="color: purple;">Laut Ke Phir Na Aanewale</span><br />
<i>And who never come back</i><br />
<span style="color: purple;">Saat Samundar Paar Gaya Tu</span><br />
<i>You have crossed seven seas</i><br />
<span style="color: purple;">Humko Zinda Maar Gaya Tu</span><br />
<i>By killing us alive</i><br />
<span style="color: purple;">Khoon Ke Rishte Todd Gaya Tu</span><br />
<i>By breaking the bond of blood</i><br />
<span style="color: purple;">Aankh Mein Aansoo Chod Gaya Tu</span><br />
<i>And left tears in eyes</i><br />
<span style="color: purple;">Kam Khaate Hain Kam Sote Hain</span><br />
<i>We eat less, sleep less</i><br />
<span style="color: purple;">Bahut Zyaada Hum Rote Hain</span><br />
<i>But cry a lot</i><br />
<span style="color: purple;">Sooni Ho Gayi Shehar Ki Galiyaan</span><br />
<i>The streets of the town feels empty</i><br />
<span style="color: purple;">Kaante Ban Gayi Baag Ki Kaliyaan</span><br />
<i>The flowers of our garden feels like thorns</i><br />
<span style="color: purple;">Kehte Hain Saawan Ke Jhule</span><br />
<i>The spring tells us</i><br />
<span style="color: purple;">Bhool Gaya Tu Hum Nahin Bhoole</span><br />
<i>You've forgotten us, but we haven't</i><br />
<span style="color: purple;">Tere Bin Jab Aayi Diwali</span><br />
<i>In Diwali without you</i><br />
<span style="color: purple;">Deep Nahin Dil Jale Hain Khaali</span><br />
<i>It's not the lamp, our heart burns empty</i><br />
<span style="color: purple;">Tere Bin Jab Aayi Holi</span><br />
<i>In Holi without you</i><br />
<span style="color: purple;">Pichkaari Se Chooti Goli</span><br />
<i>The water-guns shoots bullet</i><br />
<span style="color: purple;">Peepal Soona Panghat Soona</span><br />
<i>The shade is empty, so is the pond</i><br />
<span style="color: purple;">Ghar Shamshaan Ka Bana Namoona</span><br />
<i>Home feels like grave</i><br />
<span style="color: purple;">Fasal Kati Aayi Baisakhi</span><br />
<i>Harvest is over, and the festival has come</i><br />
<span style="color: purple;">Tera Aana Reh Gaya Baaki</span><br />
<i>Awaiting your return now</i><br />
<span style="color: purple;">Pehle Jab Tu Khat Likhta Tha</span><br />
<i>When you used to write earlier</i><br />
<span style="color: purple;">Kaagaz Mein Chehra Dikhta Tha</span><br />
<i>I could see your face in the paper</i><br />
<span style="color: purple;">Bandh Hua Yeh Mel Bhi Ab To</span><br />
<i>It has stopped now</i><br />
<span style="color: purple;">Khatam Hua Yeh Khel Bhi Ab To</span><br />
<i>This game is over now</i><br />
<span style="color: purple;">Doli Mein Jab Baitti Behna</span><br />
<i>When your sister was leaving to husband's home</i><br />
<span style="color: purple;">Rasta Dekh Rahe The Naina</span><br />
<i>Her eyes were longing for you</i><br />
<span style="color: purple;">Mein To Baap Hoon Mera Kya Hai</span><br />
<i>I am dad, don't bother about me</i><br />
<span style="color: purple;">Teri Maa Ka Haal Bura Hai</span><br />
<i>But your mom is disappointed</i><br />
<span style="color: purple;">Teri Biwi Karti Hai Seva</span><br />
<i>Your wife is doing her work</i><br />
<span style="color: purple;">Soorat Se Lagti Hai Bewa</span><br />
<i>She looks like a widow now</i><br />
<span style="color: purple;">Tune Paisa Bahut Kamaaya</span><br />
<i>You have earned a lot</i><br />
<span style="color: purple;">Iss Paise Ne Desh Chudaaya</span><br />
<i>This money has taken you away from home</i><br />
<span style="color: purple;">Desh Paraayaa Chhod Ke Aajaa</span><br />
<i>Leave the strange country and come home</i><br />
<span style="color: purple;">Panchhi Pinjra Todh Ke Aaja</span><br />
<i>Break the cage and come home</i><br />
<span style="color: purple;">Aajaa Umar Bahut Hai Chotti</span><br />
<i>Come back, you are still young</i><br />
<span style="color: purple;">Apane Ghar Mein Bhi Hain Roti</span><br />
<i>We are doing good at home too</i><br />
<br />
<i>Thanks : http://dreamy-songs.blogspot.com</i>Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-70254692311157254522011-09-13T11:25:00.000-07:002011-09-13T11:42:11.187-07:00சாட்சி...<span style="font-size:85%;">நேற்றிரவு மோர் வாங்கி வர கடைக்கு சென்றேன்.வழியில் நடைபாதை ஓரங்களில் ஆங்காங்கே கருப்பு சௌதிகள் (அல்லது இம்மண்ணின் மைந்தர்கள் அல்லது சூடானிகள் ?? எனக்கு சரியாக தெரியாது.ஆனால் ஒரு வெள்ளை சௌதி கூட வெளியே கார் கழுவி இதுவரை நான் பார்த்ததில்லை) அவர்களில் ஆங்கு தோங்காக ஆறடியில் ஒரு சௌதி எப்பொழுதும் என்னை கண்டால் உற்சாகமாக கையசைப்பான்..நீண்ட நாட்களாக அவ்வழியே செல்வதால் வந்த பரிச்சயம்.சில நேரங்களில் கையை கெட்டியாக பிடித்து குலுக்கியபடி எங்கே உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை (என கேட்பான் போல.எனக்கு அரபி புரியாது.அவனுக்கு ஆங்கிலம் தெரியாது) அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்று நின்று ஏதாவது சொல்லிவிட்டு செல்வேன்.அவனை சில நாட்களாக காணவில்லை.தொழுகை இன்னும் முடிந்திருக்கவில்லை.கடை திறக்க காத்திருந்தேன்.<br /><br />கடைக்கு வெளியே சில கார்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.யாரோ ஒரு ஆள் கர்மசிரத்தையோடு ஒரு புதிய மினி வேனை கழுவி கொண்டிருந்தான்.நான் தேமே என சாலையை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.இரண்டொரு நிமிடங்களில் ஒரு பாகிஸ்தானி ''யாருய்யா உன்ன வண்டிய கழுவ சொன்னது'' </span><span style="font-size:85%;">என்று சப்தமிட்டபடியே வந்தான்</span><span style="font-size:85%;">.கழுவி கொண்டிருந்தவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.மும்முரமாக கழுவி கொண்டிருந்தவனை அந்த பாகிஸ்தானி எரிச்சலோடு சீக்கிரம் முடிக்க சொல்லியபடி வண்டியை ஒருமுறை சுற்றி வந்து நோட்டமிட்டான்.அவன் சகாவுக்கு சைகை காட்டியபடி இவனும் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.வண்டியை கிளப்பினான்.கழுவி கொண்டிருந்தவன்..டிரைவர் சீட்டோர கண்ணாடியை அவசர அவசரமாக துடைத்தபடி பார்க்கிறான்.ம்ஹீம்.கருணையின் சிறு சுவடு கூட இல்லை.டிரைவர் வண்டியை கிளப்பி கொண்டு போயே விட்டான்.ஒரு கணம் நெருப்பின் மேல் நிற்பது போலிருந்தது.காரை கழுவியவன் முகத்தில் எவ்வித சலனமுமில்லை.நான் பார்த்து கொண்டிருக்கிறேன் என்ற சிறு அவஸ்தையை தவிர.இயல்பாக வாளி வஸ்துக்களை எடுத்து கொண்டு அடுத்த வாகனத்தை கழுவ கிளம்பி விட்டான்.<br /><br />நிமிர்ந்து பார்த்தேன்.நிலா என்னை பார்த்து கொண்டிருந்தது.</span> <span style="font-size:85%;"><br /><br /></span>Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-40564333687056555502011-08-07T11:12:00.000-07:002011-08-07T11:23:40.739-07:00Harry Belafonte - Banana Boat<iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwJB1LcwteIU2jjkKtojFiFAKg-8DHAvdABDIzKo1Y3PlryAkvS5VsjHPK47ow4MT6X8NS2I9ebMNLjxMJ3PA' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe><br /><br />Day-o, day-ay-ay-o<br />Daylight come and me wan' go home<br />Day-o, day-ay-ay-o<br />Daylight come and me wan' go home<br /><br />Work all night on a drink of rum<br />Daylight come and me wan' go home<br />Stack banana till de morning come<br />Daylight come and me wan' go home<br /><br />Come, Mister tally man, tally me banana<br />Daylight come and me wan' go home<br />Come, Mister tally man, tally me banana<br />Daylight come and me wan' go home<br /><br />Lift six foot, seven foot, eight foot bunch<br />Daylight come and me wan' go home<br />Six foot, seven foot, eight foot bunch<br />Daylight come and me wan' go home<br /><br />Day, me say day-ay-ay-o<br />Daylight come and me wan' go home<br />Day, me say day, me say day, me say day<br />Daylight come and me wan' go home<br /><br />Beautiful bunch of ripe banana<br />Daylight come and me wan' go home<br />Hide the deadly black tarantula<br />Daylight come and me wan' go home<br />Lift six foot, seven foot, eight foot bunch<br />Daylight come and me wan' go home<br />Six foot, seven foot, eight foot bunch<br />Daylight come and me wan' go home<br />Day, me say day-ay-ay-o<br />Daylight come and me wan' go home<br />Day, me say day, me say day, me say day<br />Daylight come and me wan' go home<br /><br />Come, Mister tally man, tally me banana<br />Daylight come and me wan' go home<br />Come, Mister tally man, tally me banana<br />Daylight come and me wan' go home<br />Day-o, day-ay-ay-o<br />Daylight come and me wan' go home<br />Day, me say day, me say day, me say day....ay-ay-o<br />Daylight come and me wan' go home<br /><br /><br />http://en.wikipedia.org/wiki/Harry_BelafonteUnknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-84162942295660923152011-01-28T03:38:00.000-08:002011-01-28T04:24:44.724-08:00ஓரிரவில்...<span style="font-size:85%;">உலகில் பாவங்கள் பெருகி மனிதர்கள் கயமையும் பேராசையும் கொண்டவர்களாக மாறிய பொழுது, இறைவன் 40 நாட்கள் பெருமழை பொழிவித்து உலகை அழித்தான்.பிறகு புதிய உலகை படைத்தான் என ஆதி வெள்ளப்பெருக்கு குறித்து வாசித்திருக்கிறேன்.அப்பொழுது நகைப்பாக இருந்தது.40 நாட்கள் அல்ல தொடர்ந்து 40 மணி நேரம் மழை பொழிந்தால் சௌதி என்ற நாடே உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும் என இப்பொழுது தோன்றுகிறது.<br /><br />நேற்று காலை தொடங்கி இரண்டு மணி நேரம் பெய்த மழையில் ஜித்தா நகரமே ஸ்தம்பித்து போனது.மழையே இல்லாத தேசம் என்பதால் வடிகால்கள் குறித்து கிஞ்சித்தும் பிரக்ஞையற்ற சாலையமைப்பு கொண்ட நகரம் இது.அலுவலகத்திற்கு விடுப்பு விட என் நிறுவனர் ஒரு மணி நேரம் தாமதித்ததன் விளைவு நாள் முழுக்க அலுவலகத்திலேயே நாங்கள் அவதிப்பட நேர்ந்தது.<br /><br />சாலையெங்கும் சுழித்தோடிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் காகித கப்பல்களை போல் மிதந்து சென்ற காட்சியை நான் வேறெங்கும் கண்டதில்லை.கார்கள் ஒன்றோடு ஒன்று முட்டி சாலை போக்குவரத்து சுத்தமாக ஸ்தம்பித்ததில் எங்களை அழைத்து செல்ல அனுப்பப்பட்ட வாகனங்கள் எங்கெங்கோ சிக்கி கொண்டதாக தகவல் வந்தது.<br /><br />இணைய இணைப்பும் சட்டென துண்டித்து போன பிறகு நேரம் நத்தையைப் போல் நகர தொடங்கியது.இருந்த இரண்டு படங்களை அலுவலகத்தில் அமர்ந்து பார்த்து முடித்த பொழுது பசி பிராண்ட தொடங்கியது.ஒரு நாளைக்கான லாஹிரி கையிருப்பும் தீர்ந்து விட்டதில் ஒரு ஓசி சிகரெட்டின் உன்னதம் புரிந்தது.<br /><br />மேலாளர்,கணக்காளர் பொறியாளர் எல்லாம் நேரம் செல்ல செல்ல மனிதர்களாக மாறி கொண்டிருந்தனர்.நாளையும் வெளியேற முடியாவிட்டால் நிலமை என்னாவது என்ற கவலை ஒருவருக்கு,ஒரு நாள் உறங்காவிட்டால் உடல் கெட்டு விடுமாம் இன்னொருவருக்கு,ஏதோ அசம்பாவிதம் நிகழ போகிறதென காலையிலேயே தோன்றியதாம் மற்றொருவருக்கு.மனிதன் எவ்வளவு பலவீனமான பிராணி என தோன்றியது.பசி,தலைவலி,சிகரெட்,தினமும் எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரை என தனித்தனியாய் வெளியேறிய முனகல்கள் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.<br /><br />நேற்று முன் தினம் வேறொரு நகரத்தில் நிகழ்ந்த கட்டிட பணி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பங்களாதேஷ் பணியாளர்கள் நசுங்கி செத்திருந்தனர்.சௌதியில் இறக்கும் பணியாளர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.உடல் சொந்த நாட்டிற்கு செல்ல மாதக்கணக்காகிவிடும்.சௌதிகளை போன்ற சோம்பேறிகளை,மோடு முட்டிகளை வேறெங்கும் காண முடியாது.அவர்களது இற்று போன சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் கூட.இதில் கள்ளத்தனமாக பணிபுரிந்தவர்களின் உடல் நிச்சயம் வீடு போய் சேராது.தொடர்ந்து பல நாட்களாக தொடர்பு இல்லையென்றால் இறந்து போயிருக்க கூடும் என அவர்களது குடும்பத்தினர் எண்ணி கொள்ள வேண்டியது தான்.<br /><br />மதிய உணவும் சரியாக உண்ணாததால் நான் அலுவலகத்தில் இருண்ட மூலையொன்றை தேர்ந்து நித்திரா தேவியை அணைத்து உறங்கி போனேன்.அதிகாலை மூன்று மணிக்கு நண்பர்கள் எழுப்பி வெளியே அழைத்து சென்றனர்.எங்களை அழைத்து செல்ல ஒரு பெரிய லாரி வந்திருந்தது.ஏறி நின்று கொண்டோம்.லாரி நெடுஞ்சாலைக்கு வந்த பொழுது தலை சுற்ற தொடங்கி விட்டது.நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.எங்கள் லாரியை ஓட்டியவன் ஒரு சௌதி.எங்கள் கேம்பில் இரவு நேர செக்யூரிட்டி.அவனுக்கு லைசென்ஸ் வேறு இல்லை என்றார்கள்.சாலையில் கேட்பாரற்று நின்ற சில வாகனங்களை முட்டி தள்ளி கொண்டு காட்டுத்தனமாக ஓட்டி கொண்டிருந்தான்.ஆங்காங்கே போலீஸ் நின்று கொண்டு வாகனங்களை மடை மாற்றி கொண்டிருந்தனர்.<br /><br />சாலையோர பிளாட்பார்ம்களில் சௌதி இளைஞர்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.சிலர் உற்சாகமாக குரலெழுப்பி கையசைத்தனர்.பூட்டி கிடந்த ஒரு ஷோரூமுக்குள் கதவை மெல்லமாக திறந்து உள்ளே சென்று கொண்டிருந்தான் ஒருவன்.ஆளில்லாத ஒரு காரிலிருந்து பாம் என ஹாரன் மட்டும் அலறி கொண்டிருந்தது ஒரு புறம்.உலகமே இடிந்து விழுந்தாலும் கடையை திறப்பேன் என ஒரு மல்லு சிகரெட் விநியோகித்து கொண்டிருந்தான் இன்னொருபுறம்.<br /><br />எப்பொழுதோ பார்த்த ஒரு திரைப்படம்,ஒரு நகரத்தில் பாம் வைக்கப்பட்டிருக்கும்.நகர மக்கள் யாவரும் நகரத்தை காலி செய்து கொண்டு போய் விடுவார்கள்.அந்நகரில் ஒரு மனநோய் விடுதி இருக்கும்.நகரமே புலம் பெயர்ந்த பிறகு பைத்தியக்காரர்கள் விடுதியிலிருந்து தப்பித்து நகரத்திற்குள் வந்து விடுவார்கள்.ஒவ்வொரு பைத்தியமும் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும்,ஒருவன் சலூன் கடைக்குள் நுழைந்து எல்லோருக்கும் இலவசமாக முடிவெட்டி விட்டு காசும் கொடுத்து அனுப்புவான்.ஒருவன் நான் தான் நகர பிரஜை என்பான்,ஒரு அழகி வாடிக்கையாளர்களை கூப்பிடுவாள்.இன்னொருத்தி ராணி போல் சிங்காரித்து கொண்டிருபாள்.ஆளுக்கொரு வேஷம்.பைத்தியக்காரர்களை காப்பாற்ற ஒரு ரானுவ வீரன் மட்டும் அந்நகருக்குள் வருவான்...<br /><br />உலகம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வெடிகுண்டை எல்லா நொடிகளிலும் தன் இடுப்பில் ஒளித்து வைத்தேயிருக்கிறது.பைத்தியக்காரர்கள் எப்பொழுதும் அந்த வெடிகுண்டு குறித்த பிரக்ஞையற்றே சிரித்து கொண்டிருந்திருக்கின்றனர்.பிடித்த வேஷத்தை புனைந்து வெளுத்து வாங்குகின்றனர்.ஏதேனுமொரு ரானுவ வீரன் இந்த பைத்தியங்களை காப்பாற்ற நகரங்களுக்குள் நுழைந்து கொண்டேதான் இருக்கிறான்.பிலிப்பினோ,பாகிஸ்தானி,பங்களாதேசி,இந்தியன் அதில் சில தமிழன் என லாரியில் நாங்கள் நின்றோம்.எல்லாம் எதற்கு என ஒரு கணம் இருப்பு கணத்தது.திடுமென ஒற்றை கண் தஜாலாகி வெளி சிரித்தது.சற்றே தலையுயர்த்தி கிழக்கை வெறித்தேன்.சிறகை விரித்து எந்த தேவ குமாரனும் இறங்காத வானம் கறுப்பாகவே இருந்தது.<br />எங்கள் வாகனம் நகரத்தை கடந்து சாலையில் விரைந்தது.</span>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-17540490397057560762010-05-25T05:17:00.000-07:002010-05-25T05:35:41.444-07:00தீராதது...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S_vClsJ8T5I/AAAAAAAAAME/L4pjmHHW31M/s1600/hand_holding_candle-other.jpg"><img style="margin: 0px auto 10px; display: block; text-align: center; cursor: pointer; width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S_vClsJ8T5I/AAAAAAAAAME/L4pjmHHW31M/s320/hand_holding_candle-other.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5475183724762779538" border="0" /></a><br /><span style="font-size:85%;"><br />எவ்வளவு நேரம்<br />உன் உள்ளங்கைக்குள்<br />மூடி வைப்பாய்<br />விட்டு விடு<br />சுடர்<br />இரவை அருந்தட்டும்<br />சுடரை<br />இரவு அருந்தட்டும்<br /> நீ<br />யார் சொல்ல கூடும்<br />மீண்டும் ஒரு இரவு வருமென்று<br />அந்த மெழுகை அணைத்து விடு<br /> நான்...</span>Unknownnoreply@blogger.com7tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-89401379674712909642010-05-22T13:41:00.000-07:002010-05-22T13:44:57.447-07:00காட்டை வரைபவன்...<span style="font-size:85%;">தன் தூரிகையில் பச்சையம் நனைத்து காட்டை வரைபவன் மரங்களை உயிர்ப்பிக்கிறான்.மெல்ல மெல்ல இலைகள் அசைந்து அவன் தலை கோதின.சூரியன் நிறமிழக்க தொடங்கியது.மழையில் நனைந்தும் குளிரில் நடுங்கியும் வனப்பட்சிகளின் ரீங்காரத்தினூடே அவன் ஓவியத்தை வளர்த்தான்.நகர்ந்து கொண்டேயிருந்த நிலவை கொடிகளால் கட்டி ஒரு மரத்தில் தொங்க விட்டான்.கூடு திரும்பும் பச்சைக்கிளிகள் கொத்தி உடைத்தன அதன் விளிம்பை.இரவையும் பகலையும் அவன் நிறங்களால் நனைத்தபடி அவ்வனத்துள் கரைந்து போனான்.நீலியொருத்தியை வரைந்து அவளோடு வாழ்ந்தான்.பின்னொரு காலை பொழுதின் கடைசி நட்சத்திர மினுக்கலில் தன் அறை திரும்ப எண்ணினான்.அவ்வனம் விட்டு காணாமல் போன வண்ணத்து பூச்சியொன்று சிறகொடுங்கி அமர்ந்திருந்தது அவன் அறை மேசையின் ஒரு பிளாஸ்டிக் பூ மீது.மீண்டும் வனம் புகுந்தவன் பிறகு ஒரு போதும் தன் ஓவியம் விட்டு வெளியேற விரும்பவில்லை...</span>Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-41581332204741107272010-04-29T01:40:00.000-07:002010-04-29T02:02:58.501-07:00எழுத்தும் இயக்கமும்...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S9lGEihdJ2I/AAAAAAAAAK0/YzpKvkn8mu8/s1600/STAR-MAKER.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 230px; height: 320px;" src="http://3.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S9lGEihdJ2I/AAAAAAAAAK0/YzpKvkn8mu8/s320/STAR-MAKER.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5465476666591356770" border="0" /></a><br /><span style="font-size:85%;">written & Directed by<br /><br />கல்லூரி நாட்களில் டைரி தொடங்கி கையில் சிக்கும் காகிதங்களில் எல்லாம் இப்படி தான் கிறுக்கியிருப்பேன்.சினிமா தவிர்த்த ஒரு எதிர்காலத்தை கற்பனை கூட செய்ததில்லை.எப்பொழுதும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் தான்.அடிஷனல் குவாலிஃபிகேஷனாக இருக்கட்டும் என்று அவ்வப்போது வகுப்பில் பெஞ்சை தட்டி டியூன் போட்டு பாட்டும் எழுதுவேன்.தோழிகள் டேய் காலையில குளிக்கும் போது ஒரு பாட்ட ஹம் பண்ணிட்டு இருந்தேன்டா.அப்புறம் தான் அது உன் பாட்டுன்</span><span style="font-size:85%;">னே ஞாபகம் வந்தது என உசுப்பேற்றும் பொழுது கொஞ்சம் கிளுகிளுப்பாக தான் இருக்கும்.ஆனால் பசங்க மட்டும் தெளிவு.மறந்து போய் கூட அருகில் வர மாட்டார்கள்.தப்பி தவறி எவனாவது சிக்கினால் ஒரே அமுக்காக அமுக்கி வசனம் சகிதம் திரைக்கதை சொல்ல ஆரம்பித்து விடுவேன்.தமிழ் சினிமா கனவுகளில் இருந்ததாலோ என்னவோ இன்று வரை எதார்த்தம் கிலோ எவ்ளோ தான்.எந்த கதை சொன்னாலும் மச்சி இந்த கதை ஏற்கெனவே </span><span style="font-size:85%;">அந்த படத்துல வந்துடிச்சிடா என கடுப்பேத்துவான்கள்.அதனால் கதை சொல்ல நம் இலக்கு எப்பொழுதும் தோழிகள் தான்.கடலைக்கு கடலையும் ஆச்சு.மேலும் என் தோழிகள் எல்லாம் எலக்கிய மற்றும் சினிமா செனரல் நாலேஜில் பெரிய முட்டை சைபர் வாங்குபவர்கள் என்பதால் எதை வேண்டுமானாலும் கவலைப்படாமல் அவிழ்த்து விடலாம்.எப்படி தான் இவ்வளவு சகிப்பு தன்மை இவர்களுக்கு உள்ளதோ.<br /><br />கனவுகளாலான கல்லூரி நாட்கள் கனவை போலவே திடுமென முடிந்த நாளில் எதார்த்தம் பூதம் போல் கோர முகம் காட்டி நின்றது.எனினும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக நான் முயன்று கொண்டிருந்தேன்.நண்பர்கள் வேலைக்கு மனு போட்டு கொண்டிருந்த பொழுது,நான் சினிமாவிற்காக அலைந்து கொண்டிருந்தேன்.கே.ஏ குணசேகரனை ஒரு முறை பாண்டியில் சந்திக்க நேர்ந்தது.அவர் நாடகம் போன்றவற்றில் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தார்.(அழகி படம் பார்த்து தங்கர் பச்சான் மேல் ஒரு அபிப்ராயம் இருந்தது.)தங்கர் பச்சானிடம் சேர சிபாரிசு கேக்கலாமா என அனுகினேன்.'தம்பி,இன்ஜினீயரிங் முடிச்சுட்டு அதெல்லாம் உங்களுக்கு சுத்தப்படாது.ரொம்ப மோசமான ஃபீல்டு.எதிர்காலத்தை வீணா பணயம் வெக்காதீங்க என அறிவுரை கூறினார்.வேனுமின்னா நம்ம நாடகத்துல அப்பப்போ வந்து கலந்துக்குங்க என தொடர்பு எண்ணெல்லாம் கொடுத்து சென்றார்.அருமை தெரியாமல் அப்பொழுது விட்டு விட்டேன்.பிறகு நாசர் தொடங்கி சிலரும் இதே பதிலை கூறிய பொழுது சோர்வாக இருந்தது.</span><span style="font-size:85%;">பொறியியல் விரும்பி படித்ததல்ல.ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்க்க சொல்லி வீட்டில் பிடித்த அடம் ஒன்றும் பலிக்கவில்லை.நாலு எரும வாங்கி வேனா தரேன்.நெதம் நாலு படி பால் கறக்கும்.சினிமா கினிமான்னு கெளம்புனா சோறு கெடைக்காது பாத்துக்க என தந்தைகுலம் கை விரித்து விட்டதால் வேறு வழியின்றி சேர்ந்ததுதான்.<br /><br />விரும்பிய வாழ்வெல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்ற யதார்த்த விதிக்கு மிக மோசமாக பலியான பின் வேலை தேடுதல்,அலைச்சல் என கனவுகள் எல்லாம் காலாவதியானது.உலக சினிமா,இலக்கியம் என கொஞ்சம் மனசை திருப்பிய பிறகு அப்படியொன்றும் இழக்க கூடாததை இழந்து விட வில்லை என்றும் தோன்றியது.தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சினிமா ஆசையோ அரசியலில் புகும் எண்ணமோ இருக்கிறது.முதலீடு இல்லாமல் குறுகிய காலத்தில் லாபம்/புகழை ஈட்டி தரும் வணிகமாக இவை தானே இருக்கின்றன.லட்சியம்,வெற்றி போன்ற மோஸ்தர்களை விட்டு விலகி வந்து விட்ட பிறகு, நம் வாரமலர்கள் சினிமா பிரபலங்களின் பேட்டிகள் எவ்வளவு அபத்தமான ஒரு </span><span style="font-size:85%;">மேடையை கவர்ச்சிகரமாக நமக்கு காட்டுகின்றன என்பதை உணர முடிகிறது.கடந்த 10 வருடங்களுக்கு முன் ஆக விரும்பிய நானாக இப்பொழுது இல்லை நான்.இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு ஆக வேண்டிய நானை பற்றிய எவ்வித கனவுகளும் இல்லை இப்பொழுது.நேதி நேதி என எதையும் நிராகரிக்க பழகிய பிறகு வாழ்வு இலகுவாகவும் சுலபமாகவும் தெரிகிறது.எல்லா அலைவுகளுக்கும் வலிகளுக்கும் பின்னால் இருப்பது என்ன? பிரபலமாகும் ஆசை என்பது அப்படியொன்றும் சுலபமாக விலக்கி செல்ல கூடிய ஒன்றல்ல.ஒவ்வொரு அசைவுக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் தன்முனைப்பு எதை தேடி என உணர்வது சுவாரஸ்யமான அனுபவம்.ஒன்றை உண்டு மற்றொன்று வாழும் ஓலம்.எந்த உரிமையில் நான் என என்னை இங்கு முன் வைக்கிறேன் என்பதும் புதிராகத்தான் இருக்கிறது.<br /><br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S9lHzycu83I/AAAAAAAAAK8/it8WDraT37A/s1600/ba.JPG"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 320px; height: 253px;" src="http://1.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S9lHzycu83I/AAAAAAAAAK8/it8WDraT37A/s320/ba.JPG" alt="" id="BLOGGER_PHOTO_ID_5465478577831998322" border="0" /></a><span style="font-size:85%;">பின்னர் இந்த சினிமா குறித்த அலட்டல்களிலிருந்து ஒரு சினிமாவே மீட்டெடுக்கவும் உதவியது.<a style="color: rgb(0, 0, 153);" href="http://www.imdb.com/title/tt0114808/">The Star maker</a> என்றொரு படம்.சினிமாவில் நடிக்க ஆள் எடுப்பதாக கூறி ஊர் ஊராக சென்று சபலப்படுபவர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவனை பற்றிய மிக சுவாரஸ்யமான படம்.காலணா இன்றி இந்த சினிமாவை நம்பி பஸ் ஏறிய சொற்ப பிரபலங்களின் அடியொற்றி வாழ்கையை தொலைத்தவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது.இன்று இருக்கும் குறைந்த பட்ச சினிமா புரிதல்கள் எதுவுமின்றி ஒருவேளை சினிமாவுக்கு சென்றிருந்தால் என்ன விதமான படங்கள் செய்திருப்பேன் என்ற கற்பனை சுவாரஸ்யமாக தான் இருக்கிறது.இப்பொழுது எல்லாம் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறன.விரும்பினால் ஒரு சில வருடங்களுக்குள்ளாக ஒரு படம் செய்து விட முடியும் தூரம் தான்.எனினும் தொலைந்து போன அந்த நானை தேடுவது இனி சிரமம்.திருமணம் முடிந்தால் கதம் கதம்.நண்பர் கதிர் மிஷ்கின் பற்றி சொன்ன போது விளையாட்டாக கூறினேன்.நீங்க படம் எடுத்தா நான் தான் வில்லன் என்று.<br /><br />புத்தகங்களோடு திரு.பவா அவர்கள் அனுப்பியிருந்த பாலுமகேந்திராவின் கதைநேரம் குறுந்தகட்டில் பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி' சிறுகதை படமாக்கப்பட்டிருந்தது.கதை படித்தவர்களுக்கு மேலே உள்ள ஃபிளாஷ்பேக் ஏன் என புரிந்திருக்கும்.சினிமா என்ற மையத்தை சுற்றி வாழும் கனவுஜீவிகளின் கதை.படம் பார்த்து முடித்தவுடன் கதையையும் வாசித்தேன்.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' சிறுகதையை வாசித்த பொழுது ஆச்சர்யமாக இருந்தது.படம் பார்க்காது இருந்திருந்தால் முதல் வாசிப்போடு எளிதாக கடந்திருக்க கூடிய ஒன்றாகவே பட்டது.எளிய கதை.அக்கதையின் முன்னும் பின்னும் நுண்ணுணர்வோடு நகர்ந்து கதையின் உயிரை ஸ்பஷ்டமாக 'பூ' வாக வெளி கொணர்ந்திருந்த இயக்குனர் சசியின் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.அந்த அனுபவத்திலேயே பா.மகேந்திராவின் கதைநேரத்தையும் அனுகினேன்.ஒரு கதை எப்படி படமாக்கப்படுகிறது மற்றும் திரைக்கதை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல அனுபவம் அளிக்க கூடிய ஒன்று இந்த குறும்பட தொகுப்பு.பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி ' கதை எழுதப்பட்ட காலத்தில் உச்சத்திலிருந்த அமலா,நதியாவெல்லாம் படமாக்கப்பட்ட பொழுது சிம்ரனாகவும்,தேவயானியாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள்.நடப்பில் சிம்ரனும் தேவயானியும் ஃபீல்ட் அவுட் ஆகி விட்ட பிறகும் சினிமா மோகத்தில் பஸ் ஏறியவர்களும்,ஏறி கொண்டிருப்பவர்களும்,கனவுகளும்,ஏமாற்றங்களும் இருந்து கொண்டு தானிருக்கின்றன என்ற உண்மை சுள்ளென அறைகிறது.<br /><br />ஜெயந்தனின் 'காயம்' என்ற கதையும் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது.வாசிக்கலாம் என்றால் கைவசம் தொகுப்பு இல்லை.சுஜாதாவின் 'நிலம்' சுமாராக இருந்தது.சு.ரா வின் பிரசாதம் சிறுகதை நன்றாக செய்யப்பட்டிருக்கிறது.ஜீனியர் பாலையா அற்புதமாக நடித்திருக்கிறார்.மேல்பார்வை என்ற சு.ரா வின் சிறுகதை தொகுப்பு வீட்டில் கிடக்கிறது.கதைகள் இப்பொழுது மறந்தும் போய்விட்டது.சு.சமுத்திரத்தின் கதை 'காத்திருப்பு' அவரது மற்ற கதைகளை தேடும் ஆர்வத்தை தந்திருக்கிறது.திலகவதியின் ஒரு முக்கோண காதல் கதையும் நன்றாகவேயிருந்தது.பட்ஜெட் மற்றும் அதிகம் வசன வாய்ப்புள்ள கதையாகவே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தோன்றியது.எல்லோருக்கும் அப்படி தோன்றும் என்பதில்லை.தற்பொழுது ஒரு தொகுதி மட்டுமே வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.பிறவற்றையும் பார்க்க வேண்டும்.நல்ல படைப்புகளை தேடி தேடி வெளியிடும் வம்சிக்கு நன்றி.<br /><br />சு.ராவின் சன்னல் என்ற சிறுகதை வாசித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.மிகவும் பாதித்த அந்த கதையை படமாக்கி பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.கொஞ்சம் சவாலானதும் கூட.ஒரு பயிற்சியாக குறும்படமாக எடுக்க முயல வேண்டும்.மனோஜின் கச்சை என்ற சிறுகதை,ஜே.பி சாணக்யாவின் பெயர் மறந்து போன ஒரு கதை..இப்படி இந்த குறுந்தகடு பார்க்கும் முன்னாக படமாக்க தோன்றிய பல கதைகள் இப்பொழுது படம் செய்து பார்க்க ஆசையூட்டுகின்றன.பார்க்கலாம்.<br /><br /><span style="color: rgb(0, 0, 153);">இரண்டாம் முறையாக சிரமம் பார்க்காமல் புத்தகம் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி வைத்த திரு.பவா அவர்களுக்கும் கதிருக்கும் என் நன்றியும் அன்பும்.</span></span>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-14826248920677066802010-04-22T22:17:00.000-07:002010-04-22T22:20:56.537-07:00இந்த சூர்யோதயம்...இந்த சூர்யோதயம்<br />நினைவூட்டுகிறது<br />ஒரு தபோவன குடிலை<br />நிசி பிசுபிசுப்பை<br />பின்னிரவில் நிறமிழந்த நிலவை<br />இனி<br />உதட்டு சாயம் பூசி<br />முறுவலிக்கும் அந்தி<br />நினைவூட்ட கூடும்<br />தேகத்தில் ஊர்ந்து சென்ற வெயிலையும்<br />தாகத்தையும்<br />இரு துண்டு ஆரஞ்சு சுளைகளையும்...Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-30154604775429154432010-04-19T13:55:00.000-07:002010-04-19T14:01:27.652-07:00ஸென் கவிதைகள்...<span style="font-size:85%;">ஸென்...<br /><br />ஒன்றுமில்லாதது குறித்து பேச என்ன இருக்கிறது.<br /><br />பெயரற்ற யாத்ரீகனிலிருந்து மிகவும் பிடித்த சில கவிதைகள்...<br /><br />சடாரென்று அறையும் காற்றில்<br />கடைசி இலை<br />முடிவெடுக்கிறது:<br />போய்விட்டது.<br /><br />0---0---0---0<br /><br />புல்லாங்குழலின் ஓசை<br />திரும்பி விட்டது<br />மூங்கில்<br />காட்டுக்கு.<br /><br />0---0---0---0<br /><br />அதே இடத்தில்<br />மீண்டும் மீண்டும்<br />கொத்துகிறது மரங்கொத்தி;<br />தீரவிருக்கிறது<br />பகற் பொழுது.<br /><br />0---0---0---0<br /><br />காற்று எங்கே<br />தள்ளிச் செல்லுமென<br />அறிவதில்லை<br />தாழ மிதக்கும் மேகங்கள்.<br /><br />0---0---0---0<br /><br />நெல்வயலில் தேங்கிய நீர்<br />வெளியேறுகிறது-ஒரு<br />மீனும் திரும்புகிறது<br />தன் வீட்டுக்கு.<br /><br />0---0---0---0<br /><br />சற்று முன்பிருந்த அன்பும்<br />புகையிலை விடுக்கும் புகையும்<br />சிறுக சிறுக<br />விட்டுச் செல்வது<br />சாம்பலை மட்டுமே.<br /><br />0---0---0---0<br /><br />இரண்டு குமிழிகள்<br />இணையும் தருணத்தில்<br />காணாமல் போகின்றன<br />இரண்டுமே.மலர்கிறது<br />ஒரு தாமரை.<br /><br />0---0---0---0<br /><br />நதியோட்டத்தில்<br />மிதந்து செல்லும் கிளையில்<br />பாடிக்கொண்<br />டிருக்கின்றன<br />பூச்சிகள், இன்னமும்.<br /><br />0---0---0---0<br /><br />வெள்ளிப் பனித்<br />துளிகளிலும்<br />இப்படியேதான்,<br />சிறியதைப் பெரியது<br />உட்கொண்டு விடுகிறது.<br /><br />0---0---0---0<br /><br />கருநிறக் கூந்தலும் செந்நிற முகமும்<br />எத்தனை நாள் தாக்குப் பிடிக்கும்?<br />ஒரு கணத்தில்<br />நரை முடிகள் நூல்கண்டுபோலச்<br />சிடுக்காகும்.<br />ஜன்னல் மறைப்பைத் திறக்கும்<br />போது, ஆப்ரிக்காட் மலர்கள்<br />பூத்திருப்பதைக் காண்கிறேன் :<br />இதோ இருக்கிறது,<br />வசந்தத்தின் காட்சி.<br />தாமதம் செய்யாதே.<br /><br />0---0---0---0<br /><br />திட்டவட்டமான விதிகள் இல்லை,<br />ஜன்னலை எப்போது<br />திறந்து வைப்பது<br />எப்போது மூடுவது என்பது பற்றி.<br />இதெல்லாம்,<br />நிலவோ பனியோ<br />தம் நிழல்களை எவ்விதம்<br />படியவைக்கின்றன என்பதைப்<br />பொறுத்தது.<br /><br />0---0---0---0<br /><br />நேற்றிரவும் அல்ல,<br />இன்று காலையும் அல்ல -<br />பூசணிப் பூக்கள் மலர்ந்தது.<br /><br />0---0---0---0<br /><br />நினைக்க வேண்டாம் அதை<br />என்றுதான் நினைக்கிறேன்.ஆனாலும்<br />நினைத்துவிடுகிறேன்<br />அதை நினைக்கும்<br />போது<br />கண்ணீர் சிந்துகிறேன்.<br /><br />0---0---0---0<br /><br />வீழும் இலைகள்<br />படிகின்றன<br />ஒன்றின் மேல் ஒன்றாய்;<br />மழையின் மேல்<br />பொழிகிறது மழை.<br /><br />0---0---0---0<br /><br />காட்டு வாத்துகளுக்குத்<br />தம் பிம்பத்தைப்<br />பதியவைக்கும் உத்தேசமில்லை.<br />நீரும்<br />அவற்றின் பிம்பத்தைப்<br />பெற<br />மனம் கொள்ளவில்லை.<br /><br />0---0---0---0<br /><br />அவன்<br />வனத்தில் நுழையும் போது<br />புற்கள் நசுங்குவதில்லை<br />நீரில் இறங்குகையில்<br />சிற்றலையும் எழுவதில்லை.<br /><br />0---0---0---0<br /><br />தமிழில் : யுவன் சந்திர சேகர்<br /><br />உயிர்மை பதிப்பகம்.<br /><br /><br /></span>Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-15509060428938431472010-04-08T04:10:00.000-07:002010-04-08T15:15:03.486-07:00பின்னிரவு புழுக்கங்களும் ஒரு முக் மாஃபியும்...<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S729JkXdRaI/AAAAAAAAAKA/DtfE8qtYdZU/s1600/Aruna-Shanbag.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 214px; height: 279px;" src="http://3.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S729JkXdRaI/AAAAAAAAAKA/DtfE8qtYdZU/s320/Aruna-Shanbag.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5457726295521445282" border="0" /></a><span style="font-size:85%;">முடிவிலியில் மிதக்கும் குருவிகளை போல் இல்லையே வாழ்வு என அடிக்கடி எண்ணத் தோன்றும்.குஞ்சு பொறிக்க மட்டுமே கூடு சமைக்கின்றன அவை.ஒரு பொந்துக்குள் சுருங்கி, சதா வருத்தும் வீடு குறித்த நினைவேக்கங்களோடு,வறண்ட இப்பாலை பரப்பில் </span><span style="font-size:85%;">தனக்கே அந்நியனாக உலவும் இந்நாட்கள் இழந்தவை குறித்த </span><span style="font-size:85%;">கழிவிரக்கங்களை தருவதாக இருக்கின்றன.வீடு என்பது வெறும் மணல் மற்றும் கற்களால் மட்டுமே ஆனதா என்ன? .தேவைகளின் பொருட்டு வீட்டை துறப்பவன்/ள் நத்தையை போல் சதா சுமந்து திரிகிறான்/ள் சொந்த வீட்டி</span><span style="font-size:85%;">ன் நினைவுகளை.எப்பொழுதும் தூரங்களின் மீதான கவர்ச்சியும்,அருகாமையின் மீதான அலட்சியங்களுமாக கழிந்த பொழுதுகள் குற்ற உணர்வுகளை தூண்டுகிறது.தனிமையின் நெறிப்புகளிலிருந்து திரைப்படங்களும் புத்தகங்களும் மட்டுமே சற்று ஆசுவாசம் அளிக்கின்றன.வெகு நாட்களாக கைவசமிருந்தும் பார்த்திராத <a style="color: rgb(0, 0, 153);" href="http://www.ayyanaarv.com/2007/12/blog-post_28.html">House of sand and Fog</a> நேற்றைய இரவின் மீது நீண்ட வெறுமையை போர்த்தியது</span><span style="font-size:85%;">.வீட்டின் புகைப்படத்தை தேடி எடுத்து வெகுநேரம் பார்த்து கொண்டிருந்தேன்.</span><br /><br /><span style="font-size:85%;"></span><span style="font-size:85%;"><br />எதேச்சை</span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S72_IMj1Q-I/AAAAAAAAAKI/MiJJTTkXZiA/s1600/TAD58.jpeg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 169px; height: 222px;" src="http://1.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S72_IMj1Q-I/AAAAAAAAAKI/MiJJTTkXZiA/s200/TAD58.jpeg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5457728470974284770" border="0" /></a><span style="font-size:85%;">யாக வாசிக்க தொடங்கிய வைக்கம் முகம்மது பஷீரின் 'மதில்கள்' அற்புதமான வாசிப்பனுபவமாக இருந்தது.யாரோ போல் நாட்களை கடத்த பழக வேண்டும் இனி.நல்ல திரைப்படமோ,புத்தகமோ உள்ளேறி நிகழ்த்தும் ரசவாதம் எப்பொழுதும் உறக்கமின்மையிலும் பிறழ்வு நி</span><span style="font-size:85%;">லையிலுமாக முடிகின்றது.மனம் தான் எவ்வளவு விசித்திரமானது.எப்பொழுதும் சூழல் குறித்த புகார்களை முனுமுனுத்தபடி கச்சிதமாக அதில் பொருந்த</span><span style="font-size:85%;">வும் பழகி கொள்கிறது.கதையில் நீண்ட மதிலொன்றால் ஆண்களுக்கும் பெண்களுக்குமாக பிரிக்கப்பட்ட சிறைக்குள் பூக்கும் இரு கைதிகளின் காதல் அழகாக விவரிக்கப்பட்டிருந்தது.முகமறியாத அந்த காதலியை பார்க்க இருக்கும் நாளில் அவன் விடுவிக்கப்படும் பொழுது ஆற்றாமையோடு கேட்பான் 'யாருக்கு வேண்டும் இந்த சுதந்திரம்'?.<a style="color: rgb(0, 0, 153);" href="http://www.imdb.com/title/tt0111161/">The Shashank Redemption</a> திரைப்படத்தில் வாழ்வின் பெரும்பகுதியை சிறையிலேயே கழித்து மூப்பெய்திய காலத்தில் விடுவிக்கப்படும் ஒரு வயோதிகர் வெளியேறி வெளி உலகில் தொடர்பு கொள்ள முடியாமல் ஒரு ஹோட்டலில் தற்கொலை செய்து கொள்வார்.மதிலுகளில் ஓரிடத்தில் நாயகன் கூறுவான் இது சின்ன சிறை.இதற்கு வெளியே பெரிய சிறை இருக்கிறதென.சற்று முன் உணவருந்தி கொண்டிருந்த பொழுது ஒரு மலையாளி நண்பன் ராஜீவ் கொலை-சதி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட <a style="color: rgb(0, 0, 153);" href="http://tamilnathy.blogspot.com/2010/04/blog-post.html">நளினி</a> குறித்து கேட்டு கொண்டிருந்தான்.நீண்ட பத்தொன்பது வருடங்கள்.அவ</span><span style="font-size:85%;">ர் குழந்தை என்னவாயிற்று.இனி விடுதலை என்பது என்ன விதமாக பொருள் படும் அவருக்கு.என்ன விதமான காட்டுமிராண்டி சமூகம் இது.<br /></span><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S73ER_mC3hI/AAAAAAAAAKQ/o8iYQZ2h0gk/s1600/trailer_front.jpg"><img style="margin: 0pt 0pt 10px 10px; float: right; cursor: pointer; width: 258px; height: 332px;" src="http://1.bp.blogspot.com/_eJ8cC2kULgs/S73ER_mC3hI/AAAAAAAAAKQ/o8iYQZ2h0gk/s320/trailer_front.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5457734136850734610" border="0" /></a><br /><span style="font-size:85%;">சுதந்திரம் என்பதை ஒரு சொல்லாகவே அறிந்திருக்கிறோம்.உடலென்னும் சி</span><span style="font-size:85%;">றை</span><span style="font-size:85%;">க்குள் வெளியேற தவிக்கும் பட்டாம்பூச்சி குறித்த பிரக்ஞை எதுவும் இல்லை நமக்கு.எங்கே என்று தெரியாத ஒரு எலி ஓட்ட பந்தயத்தில் அசுர கதியில் கடந்து போகிறது வாழ்வு.அரசியல்,ஒழுக்கம்,ம</span><span style="font-size:85%;">த</span><span style="font-size:85%;">ம் என கண்ணுக்கு புலப்படாத நூற்றுக்கணக்கான கண்ணாடி சிறைகளால் சூழப்பட்டிருக்கிறது இருப்பு.நவீன மனிதன் என்பவன் இன்று ஒரு நடமாடும் சிறைச்சாலை</span><span style="font-size:85%;">.இடைவிடாத அசைவில் இருப்பின் </span><span style="font-size:85%;">அவஸ்தைகள் மறக்கப்படுகின்றன.<br /><br />விபத்தொன்றில் சிக்கி அசையா முடியாத படி படுத்தபடுக்கையில் கிடக்கும் ஒருவனது வாழ்வு எவ்வளவு கொடூரமானதாக இருக்கும்.இருப்பு எப்பொழுது அர்த்தம் கொள்கிறது என அடுக்கடுக்காக கேள்விகளுக்குள் புதைத்தது <a style="color: rgb(0, 0, 153);" href="http://www.imdb.com/title/tt0369702/">The Sea Inside</a> திரைப்படம்.கருணை கொலைக்கு மனு செய்பவனது துயரம்..அறம்,பாவம்,கருணை என்ற கற்பிதங்களோடு அவன் நிகழ்த்தும் போராட்டம் நிலை குலைய வைத்தது.நிதர்சனம் சினிமாவை விட கொடூரமாகவே இருக்கிறது.ஒரு பண்பட்ட சமூகம் தற்கொலையை அங்கீகரிப்பதாக இருக்கும்.மேலும் வலியின்றி உயிரை போக்கி கொள்ள வசதிகள் செய்து கொடுக்கும்.தற்கொலை கோழைத்தனமென்றும் போராட்டமே வாழ்க்கையென்றும் வசனம் பேசும் கோரமான உலகில் இருக்கிறோம்.பல ஆண்டுகளுக்கு முன் ஒரு காமுகனால் கற்பழிக்கப்பட்டு மூளை அதிர்ச்சிக்குள்ளாகி கிட்டத்தட்ட 37 வருடங்களாக கோமாவில் பிரக்ஞையின்றி அவதியுறும் <a style="color: rgb(0, 0, 153);" href="http://blog.balabharathi.net/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/">அருணா ஷான்பாக்கை</a> கருணை கொலை செய்யும்படி பல மனிதாபிமானிகள் அரசுக்கு மனு செய்தும் ஆவண செய்யப்படவில்லை இன்னும்.மனிதாபிமானம் என்றால் என்னவென்றே நமக்கு தெரியாது என்பது தான் இதன் பொருள்.கருணை கொலை அங்கீகரிக்கப்படாத உலகில் தற்கொலை முட்டாள்தனமாகவே தோன்றும்.முதுமக்கள் தாழி செய்த மரபு நம்முடையது.<br /><br />உடல்/இருப்பு சார்ந்து உன்னதம் என எல்லா ஒழுக்க மதிப்பீடுகைகளையும் கவிழ்த்து பார்த்தவை பாசோலினியின் திரைப்படங்கள்,உடல்/மனம் மீதான சமூகம் மதம் மற்றும் அரசியலின் ஒடுக்குமுறைகளை பகடி செய்தவை அவை.இறுதியாக பார்த்த அவரது <a style="color: rgb(0, 0, 153);" href="http://www.imdb.com/title/tt0073650/">120 Days of sodom</a> மனக் கொடூரத்தின் வரைபடம் போல் இருந்தது.மண்டைக்குள் வண்டு புகுந்ததான நமைச்சலில் வெகு நேரம் நெளிய வைத்தது.ஒரு கட்டிடத்திற்குள் அடைக்கபட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களின் மீதான அதிகாரத்தின் பாலியல் வன்முறையை முழு திரைப்படமாக்கியிருக்கிறார்.காமத்தின் மீதான மதங்களின்/அதிகாரத்தின் ஒடுக்குமுறைகள்,காமம் குறித்த குற்ற உணர்வுகளை கட்டமைப்பதன் மூலம் இருப்பை ஒரு புள்ளிக்குள் ஒடுக்கும் சமூக தந்திரம்.பாவம்,மறுமை போன்ற சொல்லாடல்கள் மூலம் விளிம்புக்கு நகர்த்தப்பட்ட இருப்பை மையத்திற்கு இழுத்து வருகின்றன இவரது படங்கள்.தனி மனித மனச்சிக்கல்களுக்கு பெரும்பாலும் காமம் சார்ந்த குற்ற உணர்வுகளே காரணங்களாக இருக்கின்றன.குற்ற உணர்வுகளோ தீர்ப்புகளோ அற்ற மனித வாழ்வு எப்படியிருக்கும்.<a href="http://www.imdb.com/title/tt0396171/">Perfume</a> படத்தில் வரும் பொது வெளியில் நூற்று கணக்கில் கவலையின்றி மக்கள் புணர்ந்து திளைக்கும் இறுதி காட்சி தான் மனத்திரையில் ஓடுகிறது.சொர்க்கம் பற்றிய கதையாடலை காட்சியாக்கி பார்த்த படம் அது.<br /><br /><a style="color: rgb(0, 0, 153);" href="http://www.imdb.com/title/tt0870984/">Anti christ</a> - ல் கணவனுடனான புணர்ச்சியின் உச்ச கட்ட பொழுதில் கண்ணெதிரே சன்னல் வழி தவறி விழுந்து இறந்து போகும் தன் குழந்தையின் மரணத்திற்கு தன் உடலின்ப விழைவே காரணம் என குற்ற உணர்வு கொள்ளும் தாய் தன் கிளிட்டோரியசை வெட்டி எறிவதன் மூலம் அதை கடக்க முனைகிறாள்.துரோகம் என்ற கண்ணியுனூடாக உடலை/இருப்பை விசாரிக்கும் நகிசா ஒஷிமாவின் <a href="http://www.imdb.com/title/tt0077132/"> <span style="color: rgb(0, 0, 153);">in the realm of passion</span></a> ம், உடலை அதன் எல்லை வரை செலுத்தி இறுதியில் வெறுமையில் தன் காதலனின் குறியை அறுத்தெறியும்<a style="color: rgb(0, 0, 153);" href="http://www.imdb.com/title/tt0074102/"> in the realm of senses</a> ம் தந்த அயர்ச்சியும் மன உளைச்சலும் கேள்விகளும் தாங்கொணாதவை.நிதர்சனத்தை பேசும் எந்த பிரதியும் லகுவான இருப்பின் சமநிலையை அந்தகாரத்தில் வீசி நடுங்க செய்வதாகவே இருக்கிறது.எல்லாம் யோசிக்கும் வேளையில் பெரியார் ஏன் அடிக்கடி வெங்காயம் என்றார் என்பது மட்டும் புரிகிறது.<br /><br />டெஸ்க்டாப்பில் இருந்த இந்த பத்தியை சற்று முன் வாசித்த என் நண்பன் ,'என்ன ஒரே கொலை தற்கொலைன்னு எழுதிருக்க..சூசைட் எதாவது பண்ணிக்க போறியா?' என கலவரமாக கேட்டான்.சிரிப்பை அடக்கி கொண்டு ஆமாம் என பாவமாக சொல்லி வைத்தேன்.பேயறைந்தது போல் பார்த்தவன் பின் 'நீ ஒரு முக் மாஃபி' என திட்டிவிட்டு போனான்.முக் மாஃபி என்றால் அரபியில் மூளையில்லாதவன் என பொருள்.<br /><br /><br /></span>Unknownnoreply@blogger.com9tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-68860868978996780902010-03-30T05:05:00.000-07:002010-03-30T22:40:48.844-07:00புத்தன் மிதக்கும் இசைவெளி - 2<span style="font-size:85%;">நேற்றிரவு அவள் வீட்டிலிருந்து திரும்பும் வழியில் மீண்டுமொரு பறவையின் சடலம் பார்த்தேன்.எந்த கண்டத்திற்கு சொந்தமானதோ.குலைந்து கிடந்த உலர்ந்த சிறகுகள் அதீத பதட்டமடையச் செய்தது.சமீப நாட்களாகவே பறவையின் சடலங்கள் அடிக்கடி தென்படுகின்றன.சில நாட்களாக மீண்டும் மீண்டும் தோன்றுகிறது முடிவற்று ஆழியொன்றுள் மூழ்கும் ஒரு கொடுங்கனவு.கனவுக்கும் தட்டுப்படும் இப்பறவைகளின் சடலத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா ? தெரியவில்லை.அறை திரும்பும் எண்ணத்தை கைவிட்டு ஒரு டாக்ஸியை நிறுத்தி ஏறி கொண்டேன்.எங்கே செல்ல வேண்டும் என்ற அவன் கேள்விக்கு எங்காவது..வெகு தூரமாய்... என்ற என் பதில் விநோதமாக இருந்திருக்க கூடும்.<br /><br />இந்தியா?<br /><br />ம்ம்...<br /><br />ஆம்..நான் அவளை நேசிக்கிறேன்.இதை அவளிடம் சொன்ன பொழுது என் கண்களையே இமைக்காமல் பார்த்தாள்.அந்த குறுகுறு கண்களை எப்பொழுதும் என்னால் எதிர் கொள்ள முடிந்ததில்லை.வெகு குறும்பாக 'நேசிக்கிறேன்...இதை தமிழில் சொல்' என்றாள்.குற்ற உணர்வும் எங்கிருந்தோ வந்து தொலைத்த குருட்டு வெட்கமும் பிடுங்க நின்றேன்.ஏன் சொற்கள் இப்படி அபத்தமாகி விட்டன.தேய்ந்து போன அந்த சொற்றொடரின் இயலாமையை நானே முன்பு அவளுக்கு தந்திருந்தேன்.அவள் வெகு நிதானமாக என் பதட்டங்களை ரசிப்பவளாக இருந்தாள்.<br /><br />"என் வீட்டுக்கு அருகில் ஒரு இந்திய குடும்பம் இருக்கிறது.ரொம்ப நல்லவர்கள்.நான் அவர்களோடு உணவருந்தியிருக்கிறேன்."(இதே கதையை கடந்த 90 நாட்களில் பதிமூன்றாவது முறையாக சொல்லும் எட்டாவது பாகிஸ்தானி இவன்)<br /><br />ம்ம்...<br /><br />'முஸல்மான் ஹோ?'<br /><br />ம்ஹீம்.<br /><br />'ஓ..அவர்களும் உங்கள்...'.<br /><br />ம்ம்...<br /><br />'ஏதாவது பேசேன்...'<br /><br />இழைந்து கொண்டிருந்த பாடலின் ஒலியை கொஞ்சம் துரிதப்படுத்தினேன்.சினுங்கிய குளிரூட்டியை சற்றே முடுக்கினேன்.நுஸ்ரத் ஃபத்தே அலி கான் உருகி கொண்டிருந்தார்.அவன் புன்னகைத்தான்.எதை பேசுவது?எப்படி பேசுவது? ஒவ்வொரு முறையும் நான் உன் எதிரியல்ல என நிரூபிக்க முயலும் துயரங்களை சகிக்க முடியவில்லை.தேவதச்சனின் கவிதையொன்று நினைவு வந்தது.<br /><br />"இந்த சொல்..இந்த கனத்திற்கானது...உன் தத்துவங்களை இதில் திணிக்காதே"<br /><br />பின் வெகு நிதானமாக என்னை நெருங்கினாள்.முத்தமிடுமுன் ''என்ன பர்ஃயூம் யூஸ் பண்ற''? என்ற அவள் கேள்விக்கு விடையளிக்கும் நிலையில் நான் இல்லை.இயல்பான தருணங்களிலிருந்தும் சட்டென எல்லை மீறும் என் சுபாவம் அவளை கவர்ந்திருந்தது.மோசமான தருணங்களிலும் சமநிலையில் இருக்கும் அவளை எனக்கு பிடித்திருந்தது.எதற்கு இந்த எல்லைகள்.உண்மையில் அப்படி ஒன்று இருக்கிறதா.எல்லைகளால் பிரிக்கப்பட்ட எல்லாம் அதனதன் எல்லைக்குள் நிற்கின்றனவா.<br /><br />"<span style="font-style: italic; color: rgb(0, 0, 153);font-size:100%;" >நவீனா,நீ வாழ லாயக்கற்றவன்.வாழ்க்கை விதவித <span style="color: rgb(255, 0, 0);">வ</span>ர்<span style="color: rgb(0, 153, 0);">ண</span><span style="color: rgb(153, 51, 153);">ங்</span><span style="color: rgb(102, 255, 255);">க</span><span style="color: rgb(51, 0, 51);">ள்</span> உடையது.அவைகளைத் தாண்டி நீ ஒரு ஐக்கியம் நாடுகையில் தான் எல்லாம் மறைந்து ஏக வெண்மை புலப்படும்</span>."<br /><br />அது சரி போல தான் படுகிறது.சரியில்லாதது போலவும்.அவளிடம் கேட்டால்...''உன்சரி என்தவறு என்சரி உன்தவறு எல்லாந்தப்பு தண்டா/தாண்டா<br />எல்லாஞ்சர்தான்டா..நீ போய் குடி ஜிகிர்தாண்டா " இப்படி பதில் வரலாம்.வேண்டாம்.<br /><br />".....பின் ஏன் இந்த ராஜேஷ் உடன் மட்டும் இப்படி...சில மனிதர்களுடன் சில பரிமாற்றங்கள்...அவ்வளவே... ஆமா, இந்த பரிவு...வலிகளைப் புரிதல் என்பதெல்லாம்...விலங்குகள்..மரம் செடிகளிடம் மட்டும்தானா...எனக்கெல்லாம் இல்லையா...? உங்கள் பரிவையும் நட்பையும் பெற...நானும் மரம்,செடி,பூனையாகத்தான் இருக்கவேண்டுமா...அப்படினா நானும் உங்க Pet(புச்சி/பப்பி) மாறட்டுமா? "<br /><br />வண்ணங்கள் மிதக்கும் சாலை கனவின் வரைபடமென பின்னால் விரைந்து கொண்டிருந்தது.இந்த நகரம் இரவில் ஏன் இவ்வளவு அழகாகி விடுகிறது.கடற்கரையில் இறங்கி கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.அவளை இந்த கடற்கரையில் தான் முதலில் சந்தித்தேன்.அலைகளேயில்லாத கரையில் அவள் தனித்திருந்தாள்.ஒரு பரஸ்பர புன்னகை.முகத்தில் ஒட்டியிருந்த ஊரின் முகவரி போதுமானதாக இருந்தது இயல்பான ஒரு உரையாடலை தொடங்க.தத்துபித்து வசனங்கள் கூடிய ரசம் பூசிய சொற்களில் கொஞ்சமும் விருப்பமில்லை அவளுக்கு.பிரிந்து வந்த பிறகுதான் உறைத்தது.மீண்டும் சந்திப்பதற்கான எவ்வித முஸ்தீபுகளிலும் நாங்கள் இறங்கியிருக்கவில்லை.குறைந்தது பரஸ்பரம் பெயர்களை கூட பரிமாறி கொண்டிருக்கவில்லை.பிறகான சந்திப்புகள் திட்டமிட்டவையே எனினும் அதை தற்செயல் என்றே நாங்கள் நம்பிக்கொண்டோம்.<br /><br />எதிரே நடந்து வந்த ஒரு அரபி இளைஞன் என்னை சற்றே நிறுத்தி லைட்டர் கேட்டான்.கொளுத்தி கொண்டு தன் போக்கில் நடையை கட்டியவனிடம் ஏனோ கேட்க தோன்றவில்லை.இரண்டடி எடுத்து வைத்ததும் மீண்டும் தோளை தொட்டு திரும்ப கொடுத்தான்.கண்சிமிட்டி சிரித்து சென்றான்.கன நேர குறும்பு.லேசான ஒரு புன்னகையில் ஏதோவென்று இளகியது.<br /><br />இதுபோன்ற தருணங்களில் வாசிக்க நகுலன் தான் லாயக்கு.குத்துமதிப்பாக புரட்டினேன்.61 ம் பக்கத்தில் இப்படி இருந்தது.மூடிவிட்டேன்.இன்னும் கொஞ்சம் மது அருந்தலாம்...அவளை இன்னொரு புணர்ச்சிக்கு வற்புறுத்தலாம்...இருப்பின் அவஸ்தை வேறென்ன செய்ய... மா/ம/யக்கம/து வேண்டுவன இவை 'தான்' அறிதல் அர்த்தம் ஹம்பக்.ஓ..சீர்திருத்த சிகாமணிகளே...எழுத்தாளர்களே...எழவு வாயில் நுழையா பெயர் கொண்ட வஸ்தாதுகளே..வாருங்கள்.வாழ விரும்புகிறேன் நான்.<br /><br />'பெயரற்ற உன் முகவரிக்கு இந்த இசை குறிப்புகளை எழுதியனுப்புகிறது ஆஷ்ட்ரேயில் கசியும் சிகரெட் துண்டு...'<br /><br /><br />''இந்த கடற்கரையில் மல்லாந்து படுத்து நிலா பார்க்க கொள்ளை அழகாக இருக்கிறது.''<br /><br />"பாலை வெளியில் இன்னும் அழகாக இருக்கும்"<br /><br />''ஓ..இப்பொழுது அருகில் நீ இருந்தால்...........''<br /><br />"......................."<br /><br />'ஆயிரம் முத்தங்களுடன்'<br /><br />இன்று வந்த இக்கடிதத்தை திரும்ப வாசித்து கொண்டிருக்கிறேன்.இப்பொழுதெல்லாம் நிறைய கடிதங்கள் வருகின்றன.பெயரெற்ற முகவரியற்ற கடிதங்கள்.என் இந்த எழுத்தை<br />போல் பசப்பாத பூச்சுக்கள் இல்லாத...ஏனோ பதில் எழுத தோன்றுவதில்லை.யாருக்கும் ஒரு பதிலோ..புன்னகையோ..முத்தமோ போதுமானதாக இருக்க போவதில்லை.<br /><br />''ஏதாவது சொல்..''<br /><br />''ஏதாவது...''<br /><br />''உனக்கு அலுத்து போய்ட்டேன் இல்ல''<br /><br />''.............''<br /><br /><br />ஒவ்வொரு முறையும் ஏன் அன்பை நிரூபிக்க வேண்டியிருக்கிறது.அவளது சின்ன சின்ன கரிசனங்களில்,மெல்லிய அசைவுகளில் இந்த அன்பென்ற வன்முறையை என் மீது செலுத்தியபடியே இருப்பாள்.உன் முடிவற்ற அன்பின் சுமைகளால் எடை கூடி தவிக்கிறதென் இதயம்.கொஞ்சம் விட்டு விடேன் ப்ளீஸ்.தப்பி பிழைக்கட்டும் அந்த பட்டாம்பூச்சியென கெஞ்ச தொடங்குவேன்.சொற்கள் கூடி வரும் சில மாய கணங்களில் சிமிட்டி கொண்டு விரியும் அவள் பெரிய கண்களில் கிறங்கி தொலைவதை தவிர்க்க முடிந்ததில்லை.உன் திரவப்பரப்பிலொரு பூவென எனை மிதக்க அனுமதி.தீர்ந்து போவேன் நான்.வலியின்றி...நிழலின்றி...விம்மி விகசித்து எல்லையற்று விரியும் இத்தருணங்களை எப்படி சேமிக்கவென இறைஞ்சும் என்னை ஒரு பூனை குட்டியென அள்ளி தன் மடியில் இட்டு கொள்வாள்.இந்த இதம்,இந்த தலை கோதல் எப்பொழுதும் சாத்தியமா என்பேன்.நிச்சயம்,உனக்கு வழுக்கையே விழாதென நீ உத்தரவாதம் தருவாயெனில்' இதை அவள் சிரிக்காமல் சொல்வாள்.சொற்கள் கொண்டு அவள் திறக்கும் என் மனசீசாவிலிருந்து வெளியேறி, வதைபட்ட பூதமென வாய்பிளக்கும் என்னிடம் மிச்சமின்றி அவள் தன்னை ஒப்படைக்கும் கணங்கள்,தலையொருக்காத சிசுவை முதல் முறையாய் ஏந்தும் சிறுவனென மாற்றிவிடும் என்னை.<br /><br />அன்புள்ள இவளே...<br /><br />வேறென்ன சொல்ல?<br /><br />'இது தரப்படுவதாக இல்லாததால்<br />பெறப்படுவதாகவும் இல்லை...ஆமென்!'<br /><br /></span>Unknownnoreply@blogger.com8