Tuesday, September 27, 2011
Tuesday, September 13, 2011
சாட்சி...
நேற்றிரவு மோர் வாங்கி வர கடைக்கு சென்றேன்.வழியில் நடைபாதை ஓரங்களில் ஆங்காங்கே கருப்பு சௌதிகள் (அல்லது இம்மண்ணின் மைந்தர்கள் அல்லது சூடானிகள் ?? எனக்கு சரியாக தெரியாது.ஆனால் ஒரு வெள்ளை சௌதி கூட வெளியே கார் கழுவி இதுவரை நான் பார்த்ததில்லை) அவர்களில் ஆங்கு தோங்காக ஆறடியில் ஒரு சௌதி எப்பொழுதும் என்னை கண்டால் உற்சாகமாக கையசைப்பான்..நீண்ட நாட்களாக அவ்வழியே செல்வதால் வந்த பரிச்சயம்.சில நேரங்களில் கையை கெட்டியாக பிடித்து குலுக்கியபடி எங்கே உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை (என கேட்பான் போல.எனக்கு அரபி புரியாது.அவனுக்கு ஆங்கிலம் தெரியாது) அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்று நின்று ஏதாவது சொல்லிவிட்டு செல்வேன்.அவனை சில நாட்களாக காணவில்லை.தொழுகை இன்னும் முடிந்திருக்கவில்லை.கடை திறக்க காத்திருந்தேன்.
கடைக்கு வெளியே சில கார்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.யாரோ ஒரு ஆள் கர்மசிரத்தையோடு ஒரு புதிய மினி வேனை கழுவி கொண்டிருந்தான்.நான் தேமே என சாலையை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.இரண்டொரு நிமிடங்களில் ஒரு பாகிஸ்தானி ''யாருய்யா உன்ன வண்டிய கழுவ சொன்னது'' என்று சப்தமிட்டபடியே வந்தான்.கழுவி கொண்டிருந்தவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.மும்முரமாக கழுவி கொண்டிருந்தவனை அந்த பாகிஸ்தானி எரிச்சலோடு சீக்கிரம் முடிக்க சொல்லியபடி வண்டியை ஒருமுறை சுற்றி வந்து நோட்டமிட்டான்.அவன் சகாவுக்கு சைகை காட்டியபடி இவனும் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.வண்டியை கிளப்பினான்.கழுவி கொண்டிருந்தவன்..டிரைவர் சீட்டோர கண்ணாடியை அவசர அவசரமாக துடைத்தபடி பார்க்கிறான்.ம்ஹீம்.கருணையின் சிறு சுவடு கூட இல்லை.டிரைவர் வண்டியை கிளப்பி கொண்டு போயே விட்டான்.ஒரு கணம் நெருப்பின் மேல் நிற்பது போலிருந்தது.காரை கழுவியவன் முகத்தில் எவ்வித சலனமுமில்லை.நான் பார்த்து கொண்டிருக்கிறேன் என்ற சிறு அவஸ்தையை தவிர.இயல்பாக வாளி வஸ்துக்களை எடுத்து கொண்டு அடுத்த வாகனத்தை கழுவ கிளம்பி விட்டான்.
நிமிர்ந்து பார்த்தேன்.நிலா என்னை பார்த்து கொண்டிருந்தது.
கடைக்கு வெளியே சில கார்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.யாரோ ஒரு ஆள் கர்மசிரத்தையோடு ஒரு புதிய மினி வேனை கழுவி கொண்டிருந்தான்.நான் தேமே என சாலையை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.இரண்டொரு நிமிடங்களில் ஒரு பாகிஸ்தானி ''யாருய்யா உன்ன வண்டிய கழுவ சொன்னது'' என்று சப்தமிட்டபடியே வந்தான்.கழுவி கொண்டிருந்தவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.மும்முரமாக கழுவி கொண்டிருந்தவனை அந்த பாகிஸ்தானி எரிச்சலோடு சீக்கிரம் முடிக்க சொல்லியபடி வண்டியை ஒருமுறை சுற்றி வந்து நோட்டமிட்டான்.அவன் சகாவுக்கு சைகை காட்டியபடி இவனும் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.வண்டியை கிளப்பினான்.கழுவி கொண்டிருந்தவன்..டிரைவர் சீட்டோர கண்ணாடியை அவசர அவசரமாக துடைத்தபடி பார்க்கிறான்.ம்ஹீம்.கருணையின் சிறு சுவடு கூட இல்லை.டிரைவர் வண்டியை கிளப்பி கொண்டு போயே விட்டான்.ஒரு கணம் நெருப்பின் மேல் நிற்பது போலிருந்தது.காரை கழுவியவன் முகத்தில் எவ்வித சலனமுமில்லை.நான் பார்த்து கொண்டிருக்கிறேன் என்ற சிறு அவஸ்தையை தவிர.இயல்பாக வாளி வஸ்துக்களை எடுத்து கொண்டு அடுத்த வாகனத்தை கழுவ கிளம்பி விட்டான்.
நிமிர்ந்து பார்த்தேன்.நிலா என்னை பார்த்து கொண்டிருந்தது.
Sunday, August 7, 2011
Harry Belafonte - Banana Boat
Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home
Work all night on a drink of rum
Daylight come and me wan' go home
Stack banana till de morning come
Daylight come and me wan' go home
Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Lift six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Day, me say day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day
Daylight come and me wan' go home
Beautiful bunch of ripe banana
Daylight come and me wan' go home
Hide the deadly black tarantula
Daylight come and me wan' go home
Lift six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Day, me say day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day
Daylight come and me wan' go home
Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day....ay-ay-o
Daylight come and me wan' go home
http://en.wikipedia.org/wiki/Harry_Belafonte
Friday, January 28, 2011
ஓரிரவில்...
உலகில் பாவங்கள் பெருகி மனிதர்கள் கயமையும் பேராசையும் கொண்டவர்களாக மாறிய பொழுது, இறைவன் 40 நாட்கள் பெருமழை பொழிவித்து உலகை அழித்தான்.பிறகு புதிய உலகை படைத்தான் என ஆதி வெள்ளப்பெருக்கு குறித்து வாசித்திருக்கிறேன்.அப்பொழுது நகைப்பாக இருந்தது.40 நாட்கள் அல்ல தொடர்ந்து 40 மணி நேரம் மழை பொழிந்தால் சௌதி என்ற நாடே உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும் என இப்பொழுது தோன்றுகிறது.
நேற்று காலை தொடங்கி இரண்டு மணி நேரம் பெய்த மழையில் ஜித்தா நகரமே ஸ்தம்பித்து போனது.மழையே இல்லாத தேசம் என்பதால் வடிகால்கள் குறித்து கிஞ்சித்தும் பிரக்ஞையற்ற சாலையமைப்பு கொண்ட நகரம் இது.அலுவலகத்திற்கு விடுப்பு விட என் நிறுவனர் ஒரு மணி நேரம் தாமதித்ததன் விளைவு நாள் முழுக்க அலுவலகத்திலேயே நாங்கள் அவதிப்பட நேர்ந்தது.
சாலையெங்கும் சுழித்தோடிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் காகித கப்பல்களை போல் மிதந்து சென்ற காட்சியை நான் வேறெங்கும் கண்டதில்லை.கார்கள் ஒன்றோடு ஒன்று முட்டி சாலை போக்குவரத்து சுத்தமாக ஸ்தம்பித்ததில் எங்களை அழைத்து செல்ல அனுப்பப்பட்ட வாகனங்கள் எங்கெங்கோ சிக்கி கொண்டதாக தகவல் வந்தது.
இணைய இணைப்பும் சட்டென துண்டித்து போன பிறகு நேரம் நத்தையைப் போல் நகர தொடங்கியது.இருந்த இரண்டு படங்களை அலுவலகத்தில் அமர்ந்து பார்த்து முடித்த பொழுது பசி பிராண்ட தொடங்கியது.ஒரு நாளைக்கான லாஹிரி கையிருப்பும் தீர்ந்து விட்டதில் ஒரு ஓசி சிகரெட்டின் உன்னதம் புரிந்தது.
மேலாளர்,கணக்காளர் பொறியாளர் எல்லாம் நேரம் செல்ல செல்ல மனிதர்களாக மாறி கொண்டிருந்தனர்.நாளையும் வெளியேற முடியாவிட்டால் நிலமை என்னாவது என்ற கவலை ஒருவருக்கு,ஒரு நாள் உறங்காவிட்டால் உடல் கெட்டு விடுமாம் இன்னொருவருக்கு,ஏதோ அசம்பாவிதம் நிகழ போகிறதென காலையிலேயே தோன்றியதாம் மற்றொருவருக்கு.மனிதன் எவ்வளவு பலவீனமான பிராணி என தோன்றியது.பசி,தலைவலி,சிகரெட்,தினமும் எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரை என தனித்தனியாய் வெளியேறிய முனகல்கள் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
நேற்று முன் தினம் வேறொரு நகரத்தில் நிகழ்ந்த கட்டிட பணி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பங்களாதேஷ் பணியாளர்கள் நசுங்கி செத்திருந்தனர்.சௌதியில் இறக்கும் பணியாளர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.உடல் சொந்த நாட்டிற்கு செல்ல மாதக்கணக்காகிவிடும்.சௌதிகளை போன்ற சோம்பேறிகளை,மோடு முட்டிகளை வேறெங்கும் காண முடியாது.அவர்களது இற்று போன சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் கூட.இதில் கள்ளத்தனமாக பணிபுரிந்தவர்களின் உடல் நிச்சயம் வீடு போய் சேராது.தொடர்ந்து பல நாட்களாக தொடர்பு இல்லையென்றால் இறந்து போயிருக்க கூடும் என அவர்களது குடும்பத்தினர் எண்ணி கொள்ள வேண்டியது தான்.
மதிய உணவும் சரியாக உண்ணாததால் நான் அலுவலகத்தில் இருண்ட மூலையொன்றை தேர்ந்து நித்திரா தேவியை அணைத்து உறங்கி போனேன்.அதிகாலை மூன்று மணிக்கு நண்பர்கள் எழுப்பி வெளியே அழைத்து சென்றனர்.எங்களை அழைத்து செல்ல ஒரு பெரிய லாரி வந்திருந்தது.ஏறி நின்று கொண்டோம்.லாரி நெடுஞ்சாலைக்கு வந்த பொழுது தலை சுற்ற தொடங்கி விட்டது.நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.எங்கள் லாரியை ஓட்டியவன் ஒரு சௌதி.எங்கள் கேம்பில் இரவு நேர செக்யூரிட்டி.அவனுக்கு லைசென்ஸ் வேறு இல்லை என்றார்கள்.சாலையில் கேட்பாரற்று நின்ற சில வாகனங்களை முட்டி தள்ளி கொண்டு காட்டுத்தனமாக ஓட்டி கொண்டிருந்தான்.ஆங்காங்கே போலீஸ் நின்று கொண்டு வாகனங்களை மடை மாற்றி கொண்டிருந்தனர்.
சாலையோர பிளாட்பார்ம்களில் சௌதி இளைஞர்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.சிலர் உற்சாகமாக குரலெழுப்பி கையசைத்தனர்.பூட்டி கிடந்த ஒரு ஷோரூமுக்குள் கதவை மெல்லமாக திறந்து உள்ளே சென்று கொண்டிருந்தான் ஒருவன்.ஆளில்லாத ஒரு காரிலிருந்து பாம் என ஹாரன் மட்டும் அலறி கொண்டிருந்தது ஒரு புறம்.உலகமே இடிந்து விழுந்தாலும் கடையை திறப்பேன் என ஒரு மல்லு சிகரெட் விநியோகித்து கொண்டிருந்தான் இன்னொருபுறம்.
எப்பொழுதோ பார்த்த ஒரு திரைப்படம்,ஒரு நகரத்தில் பாம் வைக்கப்பட்டிருக்கும்.நகர மக்கள் யாவரும் நகரத்தை காலி செய்து கொண்டு போய் விடுவார்கள்.அந்நகரில் ஒரு மனநோய் விடுதி இருக்கும்.நகரமே புலம் பெயர்ந்த பிறகு பைத்தியக்காரர்கள் விடுதியிலிருந்து தப்பித்து நகரத்திற்குள் வந்து விடுவார்கள்.ஒவ்வொரு பைத்தியமும் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும்,ஒருவன் சலூன் கடைக்குள் நுழைந்து எல்லோருக்கும் இலவசமாக முடிவெட்டி விட்டு காசும் கொடுத்து அனுப்புவான்.ஒருவன் நான் தான் நகர பிரஜை என்பான்,ஒரு அழகி வாடிக்கையாளர்களை கூப்பிடுவாள்.இன்னொருத்தி ராணி போல் சிங்காரித்து கொண்டிருபாள்.ஆளுக்கொரு வேஷம்.பைத்தியக்காரர்களை காப்பாற்ற ஒரு ரானுவ வீரன் மட்டும் அந்நகருக்குள் வருவான்...
உலகம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வெடிகுண்டை எல்லா நொடிகளிலும் தன் இடுப்பில் ஒளித்து வைத்தேயிருக்கிறது.பைத்தியக்காரர்கள் எப்பொழுதும் அந்த வெடிகுண்டு குறித்த பிரக்ஞையற்றே சிரித்து கொண்டிருந்திருக்கின்றனர்.பிடித்த வேஷத்தை புனைந்து வெளுத்து வாங்குகின்றனர்.ஏதேனுமொரு ரானுவ வீரன் இந்த பைத்தியங்களை காப்பாற்ற நகரங்களுக்குள் நுழைந்து கொண்டேதான் இருக்கிறான்.பிலிப்பினோ,பாகிஸ்தானி,பங்களாதேசி,இந்தியன் அதில் சில தமிழன் என லாரியில் நாங்கள் நின்றோம்.எல்லாம் எதற்கு என ஒரு கணம் இருப்பு கணத்தது.திடுமென ஒற்றை கண் தஜாலாகி வெளி சிரித்தது.சற்றே தலையுயர்த்தி கிழக்கை வெறித்தேன்.சிறகை விரித்து எந்த தேவ குமாரனும் இறங்காத வானம் கறுப்பாகவே இருந்தது.
எங்கள் வாகனம் நகரத்தை கடந்து சாலையில் விரைந்தது.
நேற்று காலை தொடங்கி இரண்டு மணி நேரம் பெய்த மழையில் ஜித்தா நகரமே ஸ்தம்பித்து போனது.மழையே இல்லாத தேசம் என்பதால் வடிகால்கள் குறித்து கிஞ்சித்தும் பிரக்ஞையற்ற சாலையமைப்பு கொண்ட நகரம் இது.அலுவலகத்திற்கு விடுப்பு விட என் நிறுவனர் ஒரு மணி நேரம் தாமதித்ததன் விளைவு நாள் முழுக்க அலுவலகத்திலேயே நாங்கள் அவதிப்பட நேர்ந்தது.
சாலையெங்கும் சுழித்தோடிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் காகித கப்பல்களை போல் மிதந்து சென்ற காட்சியை நான் வேறெங்கும் கண்டதில்லை.கார்கள் ஒன்றோடு ஒன்று முட்டி சாலை போக்குவரத்து சுத்தமாக ஸ்தம்பித்ததில் எங்களை அழைத்து செல்ல அனுப்பப்பட்ட வாகனங்கள் எங்கெங்கோ சிக்கி கொண்டதாக தகவல் வந்தது.
இணைய இணைப்பும் சட்டென துண்டித்து போன பிறகு நேரம் நத்தையைப் போல் நகர தொடங்கியது.இருந்த இரண்டு படங்களை அலுவலகத்தில் அமர்ந்து பார்த்து முடித்த பொழுது பசி பிராண்ட தொடங்கியது.ஒரு நாளைக்கான லாஹிரி கையிருப்பும் தீர்ந்து விட்டதில் ஒரு ஓசி சிகரெட்டின் உன்னதம் புரிந்தது.
மேலாளர்,கணக்காளர் பொறியாளர் எல்லாம் நேரம் செல்ல செல்ல மனிதர்களாக மாறி கொண்டிருந்தனர்.நாளையும் வெளியேற முடியாவிட்டால் நிலமை என்னாவது என்ற கவலை ஒருவருக்கு,ஒரு நாள் உறங்காவிட்டால் உடல் கெட்டு விடுமாம் இன்னொருவருக்கு,ஏதோ அசம்பாவிதம் நிகழ போகிறதென காலையிலேயே தோன்றியதாம் மற்றொருவருக்கு.மனிதன் எவ்வளவு பலவீனமான பிராணி என தோன்றியது.பசி,தலைவலி,சிகரெட்,தினமும் எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரை என தனித்தனியாய் வெளியேறிய முனகல்கள் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.
நேற்று முன் தினம் வேறொரு நகரத்தில் நிகழ்ந்த கட்டிட பணி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பங்களாதேஷ் பணியாளர்கள் நசுங்கி செத்திருந்தனர்.சௌதியில் இறக்கும் பணியாளர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.உடல் சொந்த நாட்டிற்கு செல்ல மாதக்கணக்காகிவிடும்.சௌதிகளை போன்ற சோம்பேறிகளை,மோடு முட்டிகளை வேறெங்கும் காண முடியாது.அவர்களது இற்று போன சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் கூட.இதில் கள்ளத்தனமாக பணிபுரிந்தவர்களின் உடல் நிச்சயம் வீடு போய் சேராது.தொடர்ந்து பல நாட்களாக தொடர்பு இல்லையென்றால் இறந்து போயிருக்க கூடும் என அவர்களது குடும்பத்தினர் எண்ணி கொள்ள வேண்டியது தான்.
மதிய உணவும் சரியாக உண்ணாததால் நான் அலுவலகத்தில் இருண்ட மூலையொன்றை தேர்ந்து நித்திரா தேவியை அணைத்து உறங்கி போனேன்.அதிகாலை மூன்று மணிக்கு நண்பர்கள் எழுப்பி வெளியே அழைத்து சென்றனர்.எங்களை அழைத்து செல்ல ஒரு பெரிய லாரி வந்திருந்தது.ஏறி நின்று கொண்டோம்.லாரி நெடுஞ்சாலைக்கு வந்த பொழுது தலை சுற்ற தொடங்கி விட்டது.நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.எங்கள் லாரியை ஓட்டியவன் ஒரு சௌதி.எங்கள் கேம்பில் இரவு நேர செக்யூரிட்டி.அவனுக்கு லைசென்ஸ் வேறு இல்லை என்றார்கள்.சாலையில் கேட்பாரற்று நின்ற சில வாகனங்களை முட்டி தள்ளி கொண்டு காட்டுத்தனமாக ஓட்டி கொண்டிருந்தான்.ஆங்காங்கே போலீஸ் நின்று கொண்டு வாகனங்களை மடை மாற்றி கொண்டிருந்தனர்.
சாலையோர பிளாட்பார்ம்களில் சௌதி இளைஞர்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.சிலர் உற்சாகமாக குரலெழுப்பி கையசைத்தனர்.பூட்டி கிடந்த ஒரு ஷோரூமுக்குள் கதவை மெல்லமாக திறந்து உள்ளே சென்று கொண்டிருந்தான் ஒருவன்.ஆளில்லாத ஒரு காரிலிருந்து பாம் என ஹாரன் மட்டும் அலறி கொண்டிருந்தது ஒரு புறம்.உலகமே இடிந்து விழுந்தாலும் கடையை திறப்பேன் என ஒரு மல்லு சிகரெட் விநியோகித்து கொண்டிருந்தான் இன்னொருபுறம்.
எப்பொழுதோ பார்த்த ஒரு திரைப்படம்,ஒரு நகரத்தில் பாம் வைக்கப்பட்டிருக்கும்.நகர மக்கள் யாவரும் நகரத்தை காலி செய்து கொண்டு போய் விடுவார்கள்.அந்நகரில் ஒரு மனநோய் விடுதி இருக்கும்.நகரமே புலம் பெயர்ந்த பிறகு பைத்தியக்காரர்கள் விடுதியிலிருந்து தப்பித்து நகரத்திற்குள் வந்து விடுவார்கள்.ஒவ்வொரு பைத்தியமும் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும்,ஒருவன் சலூன் கடைக்குள் நுழைந்து எல்லோருக்கும் இலவசமாக முடிவெட்டி விட்டு காசும் கொடுத்து அனுப்புவான்.ஒருவன் நான் தான் நகர பிரஜை என்பான்,ஒரு அழகி வாடிக்கையாளர்களை கூப்பிடுவாள்.இன்னொருத்தி ராணி போல் சிங்காரித்து கொண்டிருபாள்.ஆளுக்கொரு வேஷம்.பைத்தியக்காரர்களை காப்பாற்ற ஒரு ரானுவ வீரன் மட்டும் அந்நகருக்குள் வருவான்...
உலகம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வெடிகுண்டை எல்லா நொடிகளிலும் தன் இடுப்பில் ஒளித்து வைத்தேயிருக்கிறது.பைத்தியக்காரர்கள் எப்பொழுதும் அந்த வெடிகுண்டு குறித்த பிரக்ஞையற்றே சிரித்து கொண்டிருந்திருக்கின்றனர்.பிடித்த வேஷத்தை புனைந்து வெளுத்து வாங்குகின்றனர்.ஏதேனுமொரு ரானுவ வீரன் இந்த பைத்தியங்களை காப்பாற்ற நகரங்களுக்குள் நுழைந்து கொண்டேதான் இருக்கிறான்.பிலிப்பினோ,பாகிஸ்தானி,பங்களாதேசி,இந்தியன் அதில் சில தமிழன் என லாரியில் நாங்கள் நின்றோம்.எல்லாம் எதற்கு என ஒரு கணம் இருப்பு கணத்தது.திடுமென ஒற்றை கண் தஜாலாகி வெளி சிரித்தது.சற்றே தலையுயர்த்தி கிழக்கை வெறித்தேன்.சிறகை விரித்து எந்த தேவ குமாரனும் இறங்காத வானம் கறுப்பாகவே இருந்தது.
எங்கள் வாகனம் நகரத்தை கடந்து சாலையில் விரைந்தது.
Tuesday, May 25, 2010
தீராதது...
Saturday, May 22, 2010
காட்டை வரைபவன்...
தன் தூரிகையில் பச்சையம் நனைத்து காட்டை வரைபவன் மரங்களை உயிர்ப்பிக்கிறான்.மெல்ல மெல்ல இலைகள் அசைந்து அவன் தலை கோதின.சூரியன் நிறமிழக்க தொடங்கியது.மழையில் நனைந்தும் குளிரில் நடுங்கியும் வனப்பட்சிகளின் ரீங்காரத்தினூடே அவன் ஓவியத்தை வளர்த்தான்.நகர்ந்து கொண்டேயிருந்த நிலவை கொடிகளால் கட்டி ஒரு மரத்தில் தொங்க விட்டான்.கூடு திரும்பும் பச்சைக்கிளிகள் கொத்தி உடைத்தன அதன் விளிம்பை.இரவையும் பகலையும் அவன் நிறங்களால் நனைத்தபடி அவ்வனத்துள் கரைந்து போனான்.நீலியொருத்தியை வரைந்து அவளோடு வாழ்ந்தான்.பின்னொரு காலை பொழுதின் கடைசி நட்சத்திர மினுக்கலில் தன் அறை திரும்ப எண்ணினான்.அவ்வனம் விட்டு காணாமல் போன வண்ணத்து பூச்சியொன்று சிறகொடுங்கி அமர்ந்திருந்தது அவன் அறை மேசையின் ஒரு பிளாஸ்டிக் பூ மீது.மீண்டும் வனம் புகுந்தவன் பிறகு ஒரு போதும் தன் ஓவியம் விட்டு வெளியேற விரும்பவில்லை...
Thursday, April 29, 2010
எழுத்தும் இயக்கமும்...

written & Directed by
கல்லூரி நாட்களில் டைரி தொடங்கி கையில் சிக்கும் காகிதங்களில் எல்லாம் இப்படி தான் கிறுக்கியிருப்பேன்.சினிமா தவிர்த்த ஒரு எதிர்காலத்தை கற்பனை கூட செய்ததில்லை.எப்பொழுதும் ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் தான்.அடிஷனல் குவாலிஃபிகேஷனாக இருக்கட்டும் என்று அவ்வப்போது வகுப்பில் பெஞ்சை தட்டி டியூன் போட்டு பாட்டும் எழுதுவேன்.தோழிகள் டேய் காலையில குளிக்கும் போது ஒரு பாட்ட ஹம் பண்ணிட்டு இருந்தேன்டா.அப்புறம் தான் அது உன் பாட்டுன்னே ஞாபகம் வந்தது என உசுப்பேற்றும் பொழுது கொஞ்சம் கிளுகிளுப்பாக தான் இருக்கும்.ஆனால் பசங்க மட்டும் தெளிவு.மறந்து போய் கூட அருகில் வர மாட்டார்கள்.தப்பி தவறி எவனாவது சிக்கினால் ஒரே அமுக்காக அமுக்கி வசனம் சகிதம் திரைக்கதை சொல்ல ஆரம்பித்து விடுவேன்.தமிழ் சினிமா கனவுகளில் இருந்ததாலோ என்னவோ இன்று வரை எதார்த்தம் கிலோ எவ்ளோ தான்.எந்த கதை சொன்னாலும் மச்சி இந்த கதை ஏற்கெனவே அந்த படத்துல வந்துடிச்சிடா என கடுப்பேத்துவான்கள்.அதனால் கதை சொல்ல நம் இலக்கு எப்பொழுதும் தோழிகள் தான்.கடலைக்கு கடலையும் ஆச்சு.மேலும் என் தோழிகள் எல்லாம் எலக்கிய மற்றும் சினிமா செனரல் நாலேஜில் பெரிய முட்டை சைபர் வாங்குபவர்கள் என்பதால் எதை வேண்டுமானாலும் கவலைப்படாமல் அவிழ்த்து விடலாம்.எப்படி தான் இவ்வளவு சகிப்பு தன்மை இவர்களுக்கு உள்ளதோ.
கனவுகளாலான கல்லூரி நாட்கள் கனவை போலவே திடுமென முடிந்த நாளில் எதார்த்தம் பூதம் போல் கோர முகம் காட்டி நின்றது.எனினும் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்யனாக நான் முயன்று கொண்டிருந்தேன்.நண்பர்கள் வேலைக்கு மனு போட்டு கொண்டிருந்த பொழுது,நான் சினிமாவிற்காக அலைந்து கொண்டிருந்தேன்.கே.ஏ குணசேகரனை ஒரு முறை பாண்டியில் சந்திக்க நேர்ந்தது.அவர் நாடகம் போன்றவற்றில் தீவிரமாக இயங்கி கொண்டிருந்தார்.(அழகி படம் பார்த்து தங்கர் பச்சான் மேல் ஒரு அபிப்ராயம் இருந்தது.)தங்கர் பச்சானிடம் சேர சிபாரிசு கேக்கலாமா என அனுகினேன்.'தம்பி,இன்ஜினீயரிங் முடிச்சுட்டு அதெல்லாம் உங்களுக்கு சுத்தப்படாது.ரொம்ப மோசமான ஃபீல்டு.எதிர்காலத்தை வீணா பணயம் வெக்காதீங்க என அறிவுரை கூறினார்.வேனுமின்னா நம்ம நாடகத்துல அப்பப்போ வந்து கலந்துக்குங்க என தொடர்பு எண்ணெல்லாம் கொடுத்து சென்றார்.அருமை தெரியாமல் அப்பொழுது விட்டு விட்டேன்.பிறகு நாசர் தொடங்கி சிலரும் இதே பதிலை கூறிய பொழுது சோர்வாக இருந்தது.பொறியியல் விரும்பி படித்ததல்ல.ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்க்க சொல்லி வீட்டில் பிடித்த அடம் ஒன்றும் பலிக்கவில்லை.நாலு எரும வாங்கி வேனா தரேன்.நெதம் நாலு படி பால் கறக்கும்.சினிமா கினிமான்னு கெளம்புனா சோறு கெடைக்காது பாத்துக்க என தந்தைகுலம் கை விரித்து விட்டதால் வேறு வழியின்றி சேர்ந்ததுதான்.
விரும்பிய வாழ்வெல்லாம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை என்ற யதார்த்த விதிக்கு மிக மோசமாக பலியான பின் வேலை தேடுதல்,அலைச்சல் என கனவுகள் எல்லாம் காலாவதியானது.உலக சினிமா,இலக்கியம் என கொஞ்சம் மனசை திருப்பிய பிறகு அப்படியொன்றும் இழக்க கூடாததை இழந்து விட வில்லை என்றும் தோன்றியது.தமிழ்நாட்டில் ஐந்தில் ஒருவருக்கு சினிமா ஆசையோ அரசியலில் புகும் எண்ணமோ இருக்கிறது.முதலீடு இல்லாமல் குறுகிய காலத்தில் லாபம்/புகழை ஈட்டி தரும் வணிகமாக இவை தானே இருக்கின்றன.லட்சியம்,வெற்றி போன்ற மோஸ்தர்களை விட்டு விலகி வந்து விட்ட பிறகு, நம் வாரமலர்கள் சினிமா பிரபலங்களின் பேட்டிகள் எவ்வளவு அபத்தமான ஒரு மேடையை கவர்ச்சிகரமாக நமக்கு காட்டுகின்றன என்பதை உணர முடிகிறது.கடந்த 10 வருடங்களுக்கு முன் ஆக விரும்பிய நானாக இப்பொழுது இல்லை நான்.இன்னும் 10 வருடங்களுக்கு பிறகு ஆக வேண்டிய நானை பற்றிய எவ்வித கனவுகளும் இல்லை இப்பொழுது.நேதி நேதி என எதையும் நிராகரிக்க பழகிய பிறகு வாழ்வு இலகுவாகவும் சுலபமாகவும் தெரிகிறது.எல்லா அலைவுகளுக்கும் வலிகளுக்கும் பின்னால் இருப்பது என்ன? பிரபலமாகும் ஆசை என்பது அப்படியொன்றும் சுலபமாக விலக்கி செல்ல கூடிய ஒன்றல்ல.ஒவ்வொரு அசைவுக்கு பின்னாலும் ஒளிந்திருக்கும் தன்முனைப்பு எதை தேடி என உணர்வது சுவாரஸ்யமான அனுபவம்.ஒன்றை உண்டு மற்றொன்று வாழும் ஓலம்.எந்த உரிமையில் நான் என என்னை இங்கு முன் வைக்கிறேன் என்பதும் புதிராகத்தான் இருக்கிறது.
புத்தகங்களோடு திரு.பவா அவர்கள் அனுப்பியிருந்த பாலுமகேந்திராவின் கதைநேரம் குறுந்தகட்டில் பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி' சிறுகதை படமாக்கப்பட்டிருந்தது.கதை படித்தவர்களுக்கு மேலே உள்ள ஃபிளாஷ்பேக் ஏன் என புரிந்திருக்கும்.சினிமா என்ற மையத்தை சுற்றி வாழும் கனவுஜீவிகளின் கதை.படம் பார்த்து முடித்தவுடன் கதையையும் வாசித்தேன்.தமிழ்செல்வனின் 'வெயிலோடு போய்' சிறுகதையை வாசித்த பொழுது ஆச்சர்யமாக இருந்தது.படம் பார்க்காது இருந்திருந்தால் முதல் வாசிப்போடு எளிதாக கடந்திருக்க கூடிய ஒன்றாகவே பட்டது.எளிய கதை.அக்கதையின் முன்னும் பின்னும் நுண்ணுணர்வோடு நகர்ந்து கதையின் உயிரை ஸ்பஷ்டமாக 'பூ' வாக வெளி கொணர்ந்திருந்த இயக்குனர் சசியின் மீது ஒரு மரியாதையே வந்துவிட்டது.அந்த அனுபவத்திலேயே பா.மகேந்திராவின் கதைநேரத்தையும் அனுகினேன்.ஒரு கதை எப்படி படமாக்கப்படுகிறது மற்றும் திரைக்கதை போன்றவற்றில் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல அனுபவம் அளிக்க கூடிய ஒன்று இந்த குறும்பட தொகுப்பு.பிரபஞ்சனின் 'ஒரு மனுஷி ' கதை எழுதப்பட்ட காலத்தில் உச்சத்திலிருந்த அமலா,நதியாவெல்லாம் படமாக்கப்பட்ட பொழுது சிம்ரனாகவும்,தேவயானியாகவும் மாறிவிட்டிருக்கிறார்கள்.நடப்பில் சிம்ரனும் தேவயானியும் ஃபீல்ட் அவுட் ஆகி விட்ட பிறகும் சினிமா மோகத்தில் பஸ் ஏறியவர்களும்,ஏறி கொண்டிருப்பவர்களும்,கனவுகளும்,ஏமாற்றங்களும் இருந்து கொண்டு தானிருக்கின்றன என்ற உண்மை சுள்ளென அறைகிறது.
ஜெயந்தனின் 'காயம்' என்ற கதையும் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தது.வாசிக்கலாம் என்றால் கைவசம் தொகுப்பு இல்லை.சுஜாதாவின் 'நிலம்' சுமாராக இருந்தது.சு.ரா வின் பிரசாதம் சிறுகதை நன்றாக செய்யப்பட்டிருக்கிறது.ஜீனியர் பாலையா அற்புதமாக நடித்திருக்கிறார்.மேல்பார்வை என்ற சு.ரா வின் சிறுகதை தொகுப்பு வீட்டில் கிடக்கிறது.கதைகள் இப்பொழுது மறந்தும் போய்விட்டது.சு.சமுத்திரத்தின் கதை 'காத்திருப்பு' அவரது மற்ற கதைகளை தேடும் ஆர்வத்தை தந்திருக்கிறது.திலகவதியின் ஒரு முக்கோண காதல் கதையும் நன்றாகவேயிருந்தது.பட்ஜெட் மற்றும் அதிகம் வசன வாய்ப்புள்ள கதையாகவே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தோன்றியது.எல்லோருக்கும் அப்படி தோன்றும் என்பதில்லை.தற்பொழுது ஒரு தொகுதி மட்டுமே வம்சி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.பிறவற்றையும் பார்க்க வேண்டும்.நல்ல படைப்புகளை தேடி தேடி வெளியிடும் வம்சிக்கு நன்றி.
சு.ராவின் சன்னல் என்ற சிறுகதை வாசித்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது.மிகவும் பாதித்த அந்த கதையை படமாக்கி பார்க்க வேண்டுமென்பது நீண்ட நாள் ஆசை.கொஞ்சம் சவாலானதும் கூட.ஒரு பயிற்சியாக குறும்படமாக எடுக்க முயல வேண்டும்.மனோஜின் கச்சை என்ற சிறுகதை,ஜே.பி சாணக்யாவின் பெயர் மறந்து போன ஒரு கதை..இப்படி இந்த குறுந்தகடு பார்க்கும் முன்னாக படமாக்க தோன்றிய பல கதைகள் இப்பொழுது படம் செய்து பார்க்க ஆசையூட்டுகின்றன.பார்க்கலாம்.
இரண்டாம் முறையாக சிரமம் பார்க்காமல் புத்தகம் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி வைத்த திரு.பவா அவர்களுக்கும் கதிருக்கும் என் நன்றியும் அன்பும்.
Subscribe to:
Posts (Atom)

