Monday, July 30, 2012

ரொம்ப நாளாயிட்டுது இந்த பக்கம் வந்து...


வாங்கி மாதங்களாகியும் பிரிக்கப்படாமல் கிடந்த விஷ்னுபுரத்தை ஓமனில் ஏதேனும் ஒரு உலர் போதில் வாசிக்க கூடலாம் என தூக்கி வந்தேன்.வந்தே 6 மாதங்களாகி விட்டது.சொச்ச மிச்ச ஒல்லிப்பிச்சான் பொஸ்தவங்கள் மீது அமர்ந்து அமுக்கி கொண்டு நோஞ்சானை மல்லுக்கு கூப்பிடும் பெயில்வானாய் வாசிக்க வெகு நாளாக எனை அழைத்து கொண்டிருந்தது. அதன் தோரணை தந்த தொந்தரவு பொறுக்காது,கர்வ நாஸக் என உருவி கட்டிலுக்கடியில் போடிருந்தேன் சில நாள்.இரவில் தலையனைக்கடியிலும் பகலில் கட்டிலிலுமாக கிடந்து உழன்று உழைத்து ஓடாய் தேய்ந்த அந்த பொஸ் தவத்தை ஒருவழியாக கையில் எடுத்தாகிவிட்டது.அதன் இடத்தை அசடன் பிடித்து கொண்டது இப்போது.அதற்கு எப்பொழுது விமோசனமோ...

''அதனால் தான் நான் சிந்திப்பதை காலையில் மலம் கழிக்கும் பொழுது வைத்து கொள்கிறேன்.எப்படியோ ஞானத்தை பழிவாங்கி விட்டதாக நினைப்பு''. என்று பீதாம்பரம் மாமா சொல்லும் இடத்தில், அடடா தப்பா நெனச்சுட்டோமோ என்றிருந்தது.பொதுவாக இதன் ஆசிரியரை வாசிக்க மனத்தடையை உருவாக்குவது நல்ல எழுத்தினூடாக அவர் புகுந்து வைக்கும் ஞான ஒப்பாரி தான்.இத்தாந்தண்டி பொக்கா வேறு அதை போட்டால் என்னதான் செய்வான் மனுசன்.கழுதய கட்டிகினு ஒதைக்கிதேன்னா,எண்ணி துணிஞ்சு வாங்கிட்டு  பொலம்பாத ராசாவென சொந்த சமாதானத்தில் முக்கி முக்கி 100 பக்கங்களை ஓட்டியாகி விட்டது.


பத்து பக்கங்களுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு பண்டாரம் சிப்லாக்கட்டையோடு வந்து வைக்கும் ஞானிக்கு மட்டுமே கோபுர உச்சி தெரியும்...ஞானிக்கு மட்டுமே சோனா மீட்டும் எட்டாம் சுரம் கேட்கும்...ஞானிக்கு மட்டுமே விஷ்னுபுரத்தில் உச்சா கக்கூஸ்லாம் போகும் அதிகாரம் உண்டு ப்ளா ப்ளா பிலாக்கணங்கள் தாண்டி சில காட்சி விஸ்தரிப்புகள் மிக அழகாக இருக்கின்றன.வீரன் என்ற யானை தேர்காலில் தும்பிக்கை மாட்டி படும் வேதனையும் பிறகு பைரவன் என்ற நரசிங்கரின் யானையால் கொல்லப்படுவதும்..என்னவோ போலிருக்கவே அத்தோடு மூடி வைத்தேன்.

திருவடி,பிங்கலன்,பீதாம்பரம் என பாத்திரங்கள் விஷ்னுபுர ராஜகோபுர தேனீக்களாய் வந்து கொண்டேயிருக்கின்றன.திருவிழாவிற்கு விஷ்னுபுரம் வரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களின் அப்பத்திற்கு ஆணை கட்டி மாவிடிக்கும் லெவலுக்கு ஷங்கர்த்தனமான ஓர் ஜைஜாண்டிக் ஊர்.பயமுறுத்தும் தத்துவம் கித்துவம் ஏதும் வந்து இதுவரை மண்டையை பிராண்டவில்லை.அல்லது இது தான் தத்துவம் என்று கூட அறிய முடியாத அளவுக்கு தான் நம் வாசிப்பின் லட்சனமோ என்ற வகையில் மேலதிக தொந்தரவு ஏதுமின்றி பக்கங்கள் நகர்கின்றன.ஏனோ ஊடாக தமிழவனின் ஜி.கே எழுதிய மர்ம நாவலையும் வாசித்தால் நன்றாக இருக்குமென்று தோன்றுகிறது.யாரிடமிருந்து அதை நான் ஆட்டையை போட்டது.என்னிடமிருந்து அதை யார் ஆட்டையை போட்டது.அது சரி.இன்று உன்னுடையது.நாளை என்னுடையதாகிறது.மற்றொரு நாளும் என்னுடையதாகவே ஆக வேண்டும்.Never Mind.


ரெண்டையும் ஒட்டுக்கா வாசிச்சா என்னாகும்.சுருங்கை நகரில் பீதாம்பரம் மாமா திருவடியோடு தாம்பூலத்தை புளிச்சி கொண்டிருக்க,தேவேந்திரரும் பிங்கலனும் சோனா நதிக்கரையில் வாக்கு வாதம் செய்து கொண்டிருப்பார்கள் .அரையநாதர் அரைக்கண்ணால் சுருங்கையையும் விஷ்னுபுரத்தையும் வேவு பார்த்து கொண்டிருப்பார் என் கனவில்.ஆச்சா.சொச்சத்த வாசிப்போம்.பொறவு பேசிப்போம்.