Tuesday, September 27, 2011

Chitti Aayi Hai - Pankaj Udhas



 

 Chitti Aayi Hai Vatan Se Chitti Aayi Hai
The letter has come from motherland
Bade Dinon Ke Baad Hum Bevatnon Ko Yaad
After a long time they remembered us who are away from home
Vatan Ki Mitti Aayi Hai Chitti Aayi Hai
The letter has come with the soil of motherland
Upar Mera Naam Likha Hai
My name is written on the top
Andar Ye Paigham Likha Hai
With this message inside
Oh Pardes Ko Jaanewale
Those who goes abroad
Laut Ke Phir Na Aanewale
And who never come back
Saat Samundar Paar Gaya Tu
You have crossed seven seas
Humko Zinda Maar Gaya Tu
By killing us alive
Khoon Ke Rishte Todd Gaya Tu
By breaking the bond of blood
Aankh Mein Aansoo Chod Gaya Tu
And left tears in eyes
Kam Khaate Hain Kam Sote Hain
We eat less, sleep less
Bahut Zyaada Hum Rote Hain
But cry a lot
Sooni Ho Gayi Shehar Ki Galiyaan
The streets of the town feels empty
Kaante Ban Gayi Baag Ki Kaliyaan
The flowers of our garden feels like thorns
Kehte Hain Saawan Ke Jhule
The spring tells us
Bhool Gaya Tu Hum Nahin Bhoole
You've forgotten us, but we haven't
Tere Bin Jab Aayi Diwali
In Diwali without you
Deep Nahin Dil Jale Hain Khaali
It's not the lamp, our heart burns empty
Tere Bin Jab Aayi Holi
In Holi without you
Pichkaari Se Chooti Goli
The water-guns shoots bullet
Peepal Soona Panghat Soona
The shade is empty, so is the pond
Ghar Shamshaan Ka Bana Namoona
Home feels like grave
Fasal Kati Aayi Baisakhi
Harvest is over, and the festival has come
Tera Aana Reh Gaya Baaki
Awaiting your return now
Pehle Jab Tu Khat Likhta Tha
When you used to write earlier
Kaagaz Mein Chehra Dikhta Tha
I could see your face in the paper
Bandh Hua Yeh Mel Bhi Ab To
It has stopped now
Khatam Hua Yeh Khel Bhi Ab To
This game is over now
Doli Mein Jab Baitti Behna
When your sister was leaving to husband's home
Rasta Dekh Rahe The Naina
Her eyes were longing for you
Mein To Baap Hoon Mera Kya Hai
I am dad, don't bother about me
Teri Maa Ka Haal Bura Hai
But your mom is disappointed
Teri Biwi Karti Hai Seva
Your wife is doing her work
Soorat Se Lagti Hai Bewa
She looks like a widow now
Tune Paisa Bahut Kamaaya
You have earned a lot
Iss Paise Ne Desh Chudaaya
This money has taken you away from home
Desh Paraayaa Chhod Ke Aajaa
Leave the strange country and come home
Panchhi Pinjra Todh Ke Aaja
Break the cage and come home
Aajaa Umar Bahut Hai Chotti
Come back, you are still young
Apane Ghar Mein Bhi Hain Roti
We are doing good at home too

Thanks :  http://dreamy-songs.blogspot.com

Tuesday, September 13, 2011

சாட்சி...

நேற்றிரவு மோர் வாங்கி வர கடைக்கு சென்றேன்.வழியில் நடைபாதை ஓரங்களில் ஆங்காங்கே கருப்பு சௌதிகள் (அல்லது இம்மண்ணின் மைந்தர்கள் அல்லது சூடானிகள் ?? எனக்கு சரியாக தெரியாது.ஆனால் ஒரு வெள்ளை சௌதி கூட வெளியே கார் கழுவி இதுவரை நான் பார்த்ததில்லை) அவர்களில் ஆங்கு தோங்காக ஆறடியில் ஒரு சௌதி எப்பொழுதும் என்னை கண்டால் உற்சாகமாக கையசைப்பான்..நீண்ட நாட்களாக அவ்வழியே செல்வதால் வந்த பரிச்சயம்.சில நேரங்களில் கையை கெட்டியாக பிடித்து குலுக்கியபடி எங்கே உன்னை ஆளையே பார்க்க முடியவில்லை (என கேட்பான் போல.எனக்கு அரபி புரியாது.அவனுக்கு ஆங்கிலம் தெரியாது) அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ் என்று நின்று ஏதாவது சொல்லிவிட்டு செல்வேன்.அவனை சில நாட்களாக காணவில்லை.தொழுகை இன்னும் முடிந்திருக்கவில்லை.கடை திறக்க காத்திருந்தேன்.

கடைக்கு வெளியே சில கார்கள் ஓரங்கட்டப்பட்டிருந்தன.யாரோ ஒரு ஆள் கர்மசிரத்தையோடு ஒரு புதிய மினி வேனை கழுவி கொண்டிருந்தான்.நான் தேமே என சாலையை பராக்கு பார்த்து கொண்டிருந்தேன்.இரண்டொரு நிமிடங்களில் ஒரு பாகிஸ்தானி ''யாருய்யா உன்ன வண்டிய கழுவ சொன்னது''
என்று சப்தமிட்டபடியே வந்தான்.கழுவி கொண்டிருந்தவன் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை.மும்முரமாக கழுவி கொண்டிருந்தவனை அந்த பாகிஸ்தானி எரிச்சலோடு சீக்கிரம் முடிக்க சொல்லியபடி வண்டியை ஒருமுறை சுற்றி வந்து நோட்டமிட்டான்.அவன் சகாவுக்கு சைகை காட்டியபடி இவனும் இருக்கையில் ஏறி அமர்ந்து கொண்டான்.வண்டியை கிளப்பினான்.கழுவி கொண்டிருந்தவன்..டிரைவர் சீட்டோர கண்ணாடியை அவசர அவசரமாக துடைத்தபடி பார்க்கிறான்.ம்ஹீம்.கருணையின் சிறு சுவடு கூட இல்லை.டிரைவர் வண்டியை கிளப்பி கொண்டு போயே விட்டான்.ஒரு கணம் நெருப்பின் மேல் நிற்பது போலிருந்தது.காரை கழுவியவன் முகத்தில் எவ்வித சலனமுமில்லை.நான் பார்த்து கொண்டிருக்கிறேன் என்ற சிறு அவஸ்தையை தவிர.இயல்பாக வாளி வஸ்துக்களை எடுத்து கொண்டு அடுத்த வாகனத்தை கழுவ கிளம்பி விட்டான்.

நிமிர்ந்து பார்த்தேன்.நிலா என்னை பார்த்து கொண்டிருந்தது.


Sunday, August 7, 2011

Harry Belafonte - Banana Boat



Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home

Work all night on a drink of rum
Daylight come and me wan' go home
Stack banana till de morning come
Daylight come and me wan' go home

Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home

Lift six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home

Day, me say day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day
Daylight come and me wan' go home

Beautiful bunch of ripe banana
Daylight come and me wan' go home
Hide the deadly black tarantula
Daylight come and me wan' go home
Lift six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Six foot, seven foot, eight foot bunch
Daylight come and me wan' go home
Day, me say day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day
Daylight come and me wan' go home

Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Come, Mister tally man, tally me banana
Daylight come and me wan' go home
Day-o, day-ay-ay-o
Daylight come and me wan' go home
Day, me say day, me say day, me say day....ay-ay-o
Daylight come and me wan' go home


http://en.wikipedia.org/wiki/Harry_Belafonte

Friday, January 28, 2011

ஓரிரவில்...

உலகில் பாவங்கள் பெருகி மனிதர்கள் கயமையும் பேராசையும் கொண்டவர்களாக மாறிய பொழுது, இறைவன் 40 நாட்கள் பெருமழை பொழிவித்து உலகை அழித்தான்.பிறகு புதிய உலகை படைத்தான் என ஆதி வெள்ளப்பெருக்கு குறித்து வாசித்திருக்கிறேன்.அப்பொழுது நகைப்பாக இருந்தது.40 நாட்கள் அல்ல தொடர்ந்து 40 மணி நேரம் மழை பொழிந்தால் சௌதி என்ற நாடே உலக வரைபடத்திலிருந்து காணாமல் போய்விடும் என இப்பொழுது தோன்றுகிறது.

நேற்று காலை தொடங்கி இரண்டு மணி நேரம் பெய்த மழையில் ஜித்தா நகரமே ஸ்தம்பித்து போனது.மழையே இல்லாத தேசம் என்பதால் வடிகால்கள் குறித்து கிஞ்சித்தும் பிரக்ஞையற்ற சாலையமைப்பு கொண்ட நகரம் இது.அலுவலகத்திற்கு விடுப்பு விட என் நிறுவனர் ஒரு மணி நேரம் தாமதித்ததன் விளைவு நாள் முழுக்க அலுவலகத்திலேயே நாங்கள் அவதிப்பட நேர்ந்தது.

சாலையெங்கும் சுழித்தோடிய மழை வெள்ளத்தில் வாகனங்கள் காகித கப்பல்களை போல் மிதந்து சென்ற காட்சியை நான் வேறெங்கும் கண்டதில்லை.கார்கள் ஒன்றோடு ஒன்று முட்டி சாலை போக்குவரத்து சுத்தமாக ஸ்தம்பித்ததில் எங்களை அழைத்து செல்ல அனுப்பப்பட்ட வாகனங்கள் எங்கெங்கோ சிக்கி கொண்டதாக தகவல் வந்தது.

இணைய இணைப்பும் சட்டென துண்டித்து போன பிறகு நேரம் நத்தையைப் போல் நகர தொடங்கியது.இருந்த இரண்டு படங்களை அலுவலகத்தில் அமர்ந்து பார்த்து முடித்த பொழுது பசி பிராண்ட தொடங்கியது.ஒரு நாளைக்கான லாஹிரி கையிருப்பும் தீர்ந்து விட்டதில் ஒரு ஓசி சிகரெட்டின் உன்னதம் புரிந்தது.

மேலாளர்,கணக்காளர் பொறியாளர் எல்லாம் நேரம் செல்ல செல்ல மனிதர்களாக மாறி கொண்டிருந்தனர்.நாளையும் வெளியேற முடியாவிட்டால் நிலமை என்னாவது என்ற கவலை ஒருவருக்கு,ஒரு நாள் உறங்காவிட்டால் உடல் கெட்டு விடுமாம் இன்னொருவருக்கு,ஏதோ அசம்பாவிதம் நிகழ போகிறதென காலையிலேயே தோன்றியதாம் மற்றொருவருக்கு.மனிதன் எவ்வளவு பலவீனமான பிராணி என தோன்றியது.பசி,தலைவலி,சிகரெட்,தினமும் எடுத்து கொள்ள வேண்டிய மாத்திரை என தனித்தனியாய் வெளியேறிய முனகல்கள் வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருந்தது.

நேற்று முன் தினம் வேறொரு நகரத்தில் நிகழ்ந்த கட்டிட பணி விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் பங்களாதேஷ் பணியாளர்கள் நசுங்கி செத்திருந்தனர்.சௌதியில் இறக்கும் பணியாளர்கள் துரதிர்ஷ்டசாலிகள்.உடல் சொந்த நாட்டிற்கு செல்ல மாதக்கணக்காகிவிடும்.சௌதிகளை போன்ற சோம்பேறிகளை,மோடு முட்டிகளை வேறெங்கும் காண முடியாது.அவர்களது இற்று போன சட்ட திட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் கூட.இதில் கள்ளத்தனமாக பணிபுரிந்தவர்களின் உடல் நிச்சயம் வீடு போய் சேராது.தொடர்ந்து பல நாட்களாக தொடர்பு இல்லையென்றால் இறந்து போயிருக்க கூடும் என அவர்களது குடும்பத்தினர் எண்ணி கொள்ள வேண்டியது தான்.

மதிய உணவும் சரியாக உண்ணாததால் நான் அலுவலகத்தில் இருண்ட மூலையொன்றை தேர்ந்து நித்திரா தேவியை அணைத்து உறங்கி போனேன்.அதிகாலை மூன்று மணிக்கு நண்பர்கள் எழுப்பி வெளியே அழைத்து சென்றனர்.எங்களை அழைத்து செல்ல ஒரு பெரிய லாரி வந்திருந்தது.ஏறி நின்று கொண்டோம்.லாரி நெடுஞ்சாலைக்கு வந்த பொழுது தலை சுற்ற தொடங்கி விட்டது.நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.எங்கள் லாரியை ஓட்டியவன் ஒரு சௌதி.எங்கள் கேம்பில் இரவு நேர செக்யூரிட்டி.அவனுக்கு லைசென்ஸ் வேறு இல்லை என்றார்கள்.சாலையில் கேட்பாரற்று நின்ற சில வாகனங்களை முட்டி தள்ளி கொண்டு காட்டுத்தனமாக ஓட்டி கொண்டிருந்தான்.ஆங்காங்கே போலீஸ் நின்று கொண்டு வாகனங்களை மடை மாற்றி கொண்டிருந்தனர்.

சாலையோர பிளாட்பார்ம்களில் சௌதி இளைஞர்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.சிலர் உற்சாகமாக குரலெழுப்பி கையசைத்தனர்.பூட்டி கிடந்த ஒரு ஷோரூமுக்குள் கதவை மெல்லமாக திறந்து உள்ளே சென்று கொண்டிருந்தான் ஒருவன்.ஆளில்லாத ஒரு காரிலிருந்து பாம் என ஹாரன் மட்டும் அலறி கொண்டிருந்தது ஒரு புறம்.உலகமே இடிந்து விழுந்தாலும் கடையை திறப்பேன் என ஒரு மல்லு சிகரெட் விநியோகித்து கொண்டிருந்தான் இன்னொருபுறம்.

எப்பொழுதோ பார்த்த ஒரு திரைப்படம்,ஒரு நகரத்தில் பாம் வைக்கப்பட்டிருக்கும்.நகர மக்கள் யாவரும் நகரத்தை காலி செய்து கொண்டு போய் விடுவார்கள்.அந்நகரில் ஒரு மனநோய் விடுதி இருக்கும்.நகரமே புலம் பெயர்ந்த பிறகு பைத்தியக்காரர்கள் விடுதியிலிருந்து தப்பித்து நகரத்திற்குள் வந்து விடுவார்கள்.ஒவ்வொரு பைத்தியமும் ஒவ்வொரு காரியம் செய்து கொண்டிருக்கும்,ஒருவன் சலூன் கடைக்குள் நுழைந்து எல்லோருக்கும் இலவசமாக முடிவெட்டி விட்டு காசும் கொடுத்து அனுப்புவான்.ஒருவன் நான் தான் நகர பிரஜை என்பான்,ஒரு அழகி வாடிக்கையாளர்களை கூப்பிடுவாள்.இன்னொருத்தி ராணி போல் சிங்காரித்து கொண்டிருபாள்.ஆளுக்கொரு வேஷம்.பைத்தியக்காரர்களை காப்பாற்ற ஒரு ரானுவ வீரன் மட்டும் அந்நகருக்குள் வருவான்...

உலகம் எப்பொழுதும் ஏதேனும் ஒரு வெடிகுண்டை எல்லா நொடிகளிலும் தன் இடுப்பில் ஒளித்து வைத்தேயிருக்கிறது.பைத்தியக்காரர்கள் எப்பொழுதும் அந்த வெடிகுண்டு குறித்த பிரக்ஞையற்றே சிரித்து கொண்டிருந்திருக்கின்றனர்.பிடித்த வேஷத்தை புனைந்து வெளுத்து வாங்குகின்றனர்.ஏதேனுமொரு ரானுவ வீரன் இந்த பைத்தியங்களை காப்பாற்ற நகரங்களுக்குள் நுழைந்து கொண்டேதான் இருக்கிறான்.பிலிப்பினோ,பாகிஸ்தானி,பங்களாதேசி,இந்தியன் அதில் சில தமிழன் என லாரியில் நாங்கள் நின்றோம்.எல்லாம் எதற்கு என ஒரு கணம் இருப்பு கணத்தது.திடுமென ஒற்றை கண் தஜாலாகி வெளி சிரித்தது.சற்றே தலையுயர்த்தி கிழக்கை வெறித்தேன்.சிறகை விரித்து எந்த தேவ குமாரனும் இறங்காத வானம் கறுப்பாகவே இருந்தது.
எங்கள் வாகனம் நகரத்தை கடந்து சாலையில் விரைந்தது.