Tuesday, December 25, 2007

ஒர் கனவுலகவாசியின் இருப்பு....

இந்திரியம் நழுவிய
இரவுகளில்...

குருதி வகை பாராமல்
தானம் பெறும்
கொசுக்களின் சிறகசைவுகளில்.....

வாகன வீதிகளில்
ஜன்னல் நிலா
அடிக்கொருமுறை தப்பிவிடும்
துண்டு நொடிகளில்....

என்றேனும் எதிர்ப்படும்
சவ ஊர்வலத்தின்
பறையொலிகளில்...

கடந்து போகும்
அழகிகளின்
விநோதப்பார்வைகளில்....

நண்பர்களின்
"பைத்தியக்காரன்"
பட்டமளிப்பு விழாக்களில்....

அம்மாவின் கண்ணீரில்...

அவ்வப்போது
உணர்கிறேன்
இருத்தலின் வலியை.....

2 comments:

anbu said...

இந்திரியம் நழுவிய
இரவுகளில்


etnai natkal enakkule
irruntahthu
un kavithayaka
vnathu irrukirathu

said...

நல்லதொரு கவிதை. கவிதையின் ஆரம்பமும் முடிவும் மிக அருமை.