Thursday, January 8, 2009

சொற்களற்ற இரவுகளில்....

வெகு நேரமாய்
இணையை துரத்துகிறதொரு
சுவர்க்கோழி....

சலனமற்று தியானிக்கிறது
அறை மூலையில்
சிலந்தியொன்று....

வெற்று சுவரில்
புலப்படுகின்றன
நடனமாடும் ஓவியங்கள்....

மின் விசிறி அலைவுகளில்
நெளியும் திரைச்சீலையிடுக்கில்
நுரைக்கிறாள் நிலா....

சட்டென மின்சாரம் அறுந்துவிடும்
தருணங்களில்
எடையற்று மிதக்கின்றன
சொல்ல ஏதுமற்றவனின் சொற்கள்....

துல்லியமாய் கேட்கிறது
தெறிக்கும் ஹீக் சப்தம்....

8 comments:

said...

// சலனமற்று தியானிக்கிறது
அறை மூலையில்
சிலந்தியொன்று....//

ரசிக்கும் படியான வரிகள்.

said...

சிறப்பாக உள்ளது. நீங்கள் என் நிறைய எழுதுவதில்லை ரௌத்ரன்? அழகிய மொழி உங்கள் வசம் இருக்கிறது. நிறைய எழுதுங்கள்.

அனுஜன்யா

said...

நன்றி கார்த்திக்.

தொடர்ந்த ஊக்கத்திற்கு நன்றி அனுஜன்யா...எழுதக்கூடாதென்று ஒன்றுமில்லை.இனி எழுதுகிறேன்...

said...

/துல்லியமாய் கேட்கிறது
தெறிக்கும் ஹீக் சப்தம்.... /

ஹூக்கா ரெளத்ரன் :)
நல்லாருக்கு

said...

நன்றி அய்யனார் :)

said...

அட...!

நல்லாருக்கு...

said...

நன்றி தமிழன்...

said...

வார்த்தைகள் அழகு.

Simple & Superb.