Tuesday, February 10, 2009

துண்டு கவிதைகள்...

மீன்கொத்தியின் அலகினின்று
நழுவி விட்ட மீனொன்று
வெளியில் நீந்தி
விழுந்து கொண்டிருந்தது,
இரவில்
எறும்புகளாய் உருமாறும்
எழுத்துக்கள் என்னை
இழுத்து சென்று போடும்
அதே குளத்தில்....

*************************

மேய்ப்பரற்ற நகரத்தில்
தனித்து விட்ட ஆடு
வழி விசாரித்தது
அய்யனார் கோவிலுக்கு...

போஸ்டர் மேயும் காளை
போட்டியாளர் கழுதையை
கண்காட்டியது...

கழுதை காட்டிய திசையில்
ஓடிக்கொண்டிருந்தார் அய்யனார்
அரிவாள் சுத்தியல்
என ஆயுதங்கள் துரத்த...

*****************************

என் கட்டிலின் அடியில்
படுத்து கிடக்குமந்த சாதுவான
கறுப்பு பூனை
நடுச்சாமங்களில்
ஒளிரும் அதன் கண்கள்
உலுக்கியெழுப்பும் தருணங்களில்
விளக்கு பொருத்துவேன் பதறி
ஒய்யாரமாய் மதிலேறுமது
இரவை சுவைத்தபடி...

5 comments:

said...

அருமையான துண்டுகள். மனதில் போர்வையாக விரிந்து விட்டது

said...

// போஸ்டர் மேயும் காளை
போட்டியாளர் கழுதையை
கண்காட்டியது...

மேய்ப்பரற்ற நகரத்தில்
தனித்து விட்ட ஆடு
வழி விசாரித்தது
அய்யனார் கோவிலுக்கு...//

நல்லாருக்கு :-))

said...

மூன்றுமே நல்ல கவிதைகள். வித்தியாசமானவை.

அனுஜன்யா

said...

நன்றி spidey...

நன்றி கார்த்திக் :)

நன்றி அனுஜன்யா...

said...

முதல் கவிதை மிகவும் பிடித்தது...நல்ல கவிதைகள் ரெளத்ரன்..வாழ்த்துக்கள்