Tuesday, March 11, 2008

வலியை பொழியும் மழை...

மழையில் நனைந்தாடிய குழந்தையை
பிரம்பால் அடிக்கிறாள் அம்மா
மழையில் நனைவது குற்றமா
எனக் கேட்பவளிடம் எப்படிச் சொல்வது
வயலில் அறுத்துக் கிடக்கும்
உளுந்து ஒரு படி எவ்வளவென்று...

4 comments:

said...

நல்ல கவிதை ரௌத்ரன்...

said...

ரௌத்ரன்,

நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

said...

சித்தார்த் மற்றும் அனுஜன்யா..
வாசித்தமைக்கும் வாழ்த்தியமைக்கும் நன்றி...

said...

அருமையான கவிதை !