Monday, April 7, 2014

ஒரு குட்டிக்கதை...

ஒரு குட்டிக்கதை...அடடா..அந்த குட்டி இல்லப்பா..குறுங்கதை..

ஒரு ஊர்ல ஒரு பண்ணையாரு இருந்தாப்டி..ஆமா..அவரும் ஒரு பத்மினிய வெச்சுருந்தாப்டி...பண்ணையில அஞ்சாறு மாடு, நாலஞ்சு குருத..ஒரு ஆடு..என்னதான் பத்மினி பளபளான்னு இருந்தாலும்..மனுசனுக்கு குருத மேல தான் உசுரு..

ஒருக்கா நாலஞ்சு குருதையில ஒரு குருதைக்கு முடில...நிக்க திராணியில்லாம படுத்துருச்சு..பண்ணை பதறிப்போய் குருத லாக்டேர கூப்டு வந்தாப்டி...லாக்டரு குருதைய பாத்துப்புட்டு ஒதட்ட பிதுக்கிட்டாப்டி...மூனு நாளைக்கு மருந்து தாரேன்...சொகமில்லாட்டி சோலிய முடிச்சு பொதச்சுடனும்..இல்லாட்டி வியாதி எல்லா குருதைக்கும் பரவிடும்னு போற போக்குல ஒரு கார்பண்டை ஆக்ஸைடு பாம் போட்டு போயிட்டாப்டி..பண்ணையும் மூக்க மூடிக்கிட்டு ஒத்துக்கிட்டாப்டி..வேற வழி?

மொத நாள் ஆச்சு..குருத ரவக்கூட அசையுல...ரெண்டா நாள் ஆச்சு...ம்ஹீம்..நஹி அஸ்தா ஹே..நம்ம ஆடு ஒன்னு நின்னுச்சே அதுக்கு பொறுக்கல...குருதக்கிட்ட வந்து...ந்தா பாரு..நாளைக்குள்ள நீ எந்திருக்கலன்னா உன் சோலிய முடிச்சுருவாய்ங்க...எப்டியாச்சும் எந்திரிச்சு நின்னுரு போதும்னுச்சு...எங்க...நம்ம குருத ஊமக்கண்ணீரா வடிக்குது...பாவம் வாலக்கூட சிலுப்ப முடியல..மூணா நாள் ஆச்சு..த்சொ..த்சொ..அந்த மானங்கெட்ட மருந்து மருந்துக்கூட வேல செய்யல...

லாக்டரு வந்து குருத புடுக்க புடிச்சு பாத்துட்டு உறை போடாம ஊர் மேஞ்சா இதான் கெதின்னு ஒதட்ட ஒரே பிதுக்கா பிதுக்கிட்டு போயிட்டாப்டி...ரைட்டு...நம்ம ஆட்டுக்குன்னா செம்ம கடுப்பு..இந்தா..இம்மா சொல்லியும் எந்திரிக்காட்டி என்னா மானங்கெட்ட குருத நீ? கொல்லுல உப்புப்போட்டுத்தான மண்டுறன்னு ஒரே உசுப்பா உசுப்பி குருதய எந்திரிக்க வெச்சுடுத்து..குருதயாலயே நம்ப முடில...நம்ம ஆடு "அப்டித்தான்..நல்லா குதி..ம்..ஓடு" ன்னு மேல மேல உசுப்ப..குருதயும் குதிச்சு குதிச்சு ஓட ஆரம்பிச்சுடுச்சு...ஆட்டுக்குன்னா கொட கொடன்னு ஆனந்த கண்ணீர்..

தூரத்துல இருந்து சாவக் கெடந்த குருத குதிச்சு குதிச்சு ஓடுறத பாத்த பண்ணைக்கு ஒரே குஷி...எங்குருத...எங்குருதன்னு அவரும் பத்மினிய கெட்டிக்கிட்டு துள்ளுறாப்டி...பயபுள்ள அத்தோட உடல..ங்கொய்யால, மீ ஹேப்பி..பண்ணையில இன்னிக்கு எல்லா பயலுக்கும் கறி சோறு...அந்த ஆட்ட வெட்டி உறிங்கடான்னு சொல்ட்டாப்டி...

நீதி: எப்பவும் நம்ம டவுசர டைட்டா புடிக்காம தாத்தா கோமணம் காத்தா பறக்குதேன்னுலாம் வசனம் பேசப்பிடாது...

0 comments: